பெண்கள் காப்பீட்டுத் திட்டம் : இந்தியாவில் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு, பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், பெண்களின் தொழில் முயற்சிக்கு உதவும் வகையில் தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட் (The New India Assurance Co. Ltd.) நிறுவனம் Women Udyam Bima Policy என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில்களைத் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இந்தப் பெண்கள் காப்பீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கிரிஜா சுப்பிரமணியம் அவர்கள் விரிவாகப் பேசியுள்ளார்.
இந்தப் பதிவில்,
- தொழில் காப்பீட்டின் முக்கியத்துவம்.
- பெண்கள் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்.
- விண்ணப்பிக்கும் முறை.
- FAQs.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பெண்கள் காப்பீட்டுத் திட்டம்
சிறு மற்றும் குறுந்தொழில்களைத் தொடங்கி, பொருளாதார ரீதியாக முன்னேற விரும்பும் பெண்களுக்கு உதவும் வகையில் Women Udyam Bima Policy என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 5 கோடி வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
கிரிஜா சுப்பிரமணியன் அவர்களின் கருத்து
இந்தப் பெண்கள் காப்பீட்டுத் திட்டம் குறித்து பேசிய தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கிரிஜா சுப்பிரமணியம் அவர்கள், தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டம் ரூ. 5 கோடி வரை மதிப்பு கொண்ட சிறு தொழில் செய்து வருபவர்களுக்குப் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பெண்கள் தங்களுடைய தொழிலில் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பைப் பெற முடியும்.
“5000 முதலீட்டில் 7.5 கோடி – 3 தோழிகளின் வெற்றி கதை”!
தொழில் காப்பீட்டின் அவசியம்
இந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்குக் காப்பீடு குறித்து விழிப்புணர்வு குறைவாக இருப்பதை கிரிஜா சுப்பிரமணியம் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதன் விளைவாக, தொழில் தொடங்கும் நேரங்களிலோ அல்லது தொழிலில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படும் போதோ அவர்களுக்கு உரிய நேரத்தில் நிதி உதவி கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
2023-ஆம் ஆண்டு Insurance Regulatory and Development Authority of India (IRDAI) வெளியிட்ட அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் மொத்தக் காப்பீடு பாலிசிகளில் 34.2% மட்டுமே பெண்களைச் சென்றடைந்துள்ளன. இது, அதற்கு முந்தைய நிதியாண்டான 2021-22-இல் 34.7%-ஆக இருந்தது.
இந்தப் புள்ளி விவரங்கள், பெண்களுக்கான காப்பீட்டின் அவசியம் மற்றும் அதன் குறைந்த அளவிலான பயன்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் உள்ளன.
காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு
National Centre for Financial Education (NCFE) நடத்திய ஆய்வில், இந்தியாவில் வெறும் 21% பெண்களுக்கு மட்டுமே நிதி உதவி தொடர்பான விழிப்புணர்வு இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான குடும்பங்களில் நிதிசார்ந்த முடிவுகளை ஆண்களே எடுப்பதுதான்.
இது பெண்களின் தொழில் முயற்சிக்குத் தேவையான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யத் தடையாக இருக்கிறது என்று கிரிஜா சுப்பிரமணியம் கவலை தெரிவித்துள்ளார்.
பெண்கள் காப்பீட்டுத் திட்டம்–Women Udyam Bima Policy-யின் முக்கியத்துவம்

பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் Women Udyam Bima Policy திட்டம், Beti Bachao, Beti Padhao போன்ற அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று கிரிஜா சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பெண்கள் மத்தியில் நிலவும் காப்பீடு தொடர்பான சிக்கல்களைக் குறைக்க முடியும். மேலும், வருமானம் ஈட்டுவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டும் போது, அவர்களுக்கு நிதி பாதுகாப்பு அளிப்பதன் மூலம் அவர்களை மேலும் ஊக்கப்படுத்த முடியும்.
மற்ற காப்பீட்டு திட்டங்களின் குறைபாடுகள்
தற்போது வழக்கத்தில் உள்ள பல காப்பீட்டு திட்டங்கள் பெண்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று கிரிஜா சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெண்களுக்கு ஏற்ற வகையில் சில திட்டங்கள் இருந்தாலும், அது குறித்த சரியான புரிதல் பெண்கள் மத்தியில் இல்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே Women Udyam Bima Policy திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக மாத வருவாய் திட்டம் MIS vs TD எது சிறந்தது?
இந்தத் திட்டம் குறித்து விரிவான விளம்பரங்களை மேற்கொள்ளவும், விநியோகஸ்தர்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்க்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Women Udyam Bima Policy திட்டத்தின் சிறப்பம்சங்கள்
Women Udyam Bima Policy என்ற பெண்கள் காப்பீட்டுத் திட்டம் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
உயர்ந்த காப்பீட்டுத் தொகை
இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் ரூ. 5 கோடி வரை காப்பீடு பெற முடியும். பொதுவாக, சிறு தொழில்களுக்கு ரூ. 25 முதல் 30 லட்சம் வரை மட்டுமே காப்பீடு வழங்கப்படும் நிலையில், இந்தத் திட்டத்தில் ரூ. 5 கோடி ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.
பல்வேறு இழப்புகளுக்கு பாதுகாப்பு
தீ விபத்து, திருட்டு, தொழிலில் ஏற்படும் லாப – நஷ்டம் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் இழப்புகளுக்கும் இந்தக் காப்பீடு திட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.
இதன் மூலம், பெண்கள் தங்கள் தொழிலில் ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
எளிதான பிரீமியம் செலுத்தும் முறை
இந்தத் திட்டத்தின் பிரீமியம் தொகையைப் பயனர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப மாதந்தோறும், 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மொத்தமாகவும் செலுத்தலாம்.
மேலும், பிரீமியம் செலுத்த முடியாத சூழ்நிலையில், காப்பீட்டுத் தொகையைக் குறைத்துக் கொள்ளும் வசதியும் இந்தத் திட்டத்தில் உள்ளது. இது பெண்களுக்கு கூடுதல் வசதியை வழங்குகிறது.
பல்வேறு தொழில்களுக்குப் பொருந்தும்
தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்-இன் இந்த Udyam Bima Policy, உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டு துறைகளுக்கும் பொருந்தும்.
ஏற்கனவே உள்ள Bharat Sukshma Udyam காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தி துறையில் பல தொழில்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தப் புதிய திட்டம் சேவைத் துறையில் உள்ள பெண்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
ஆனால், இதன் தொழிலின் வகை மற்றும் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் பிரீமியம் தொகையில் மாறுபாடுகள் இருக்கலாம்.
காப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கும் வசதி
இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, பெண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகையை மாற்றிக் கொள்ள முடியும். அதாவது, தொழில் வளர்ச்சி அடையும் போது, அவர்கள் தங்கள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும்.
மற்ற பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்களில் காப்பீட்டுத் தொகை நிலையாக இருக்கும் நிலையில், இந்த அம்சம் திட்டத்தை மிகவும் சிறப்பானதாகக் காட்டியுள்ளது.
“அடல் பென்ஷன் யோஜனா” மாதம் ₹5000 வரை ஓய்வூதியம்!
பிரீமியத்தில் தள்ளுபடி
தொழில் நேரத்தில் ஆபத்து ஏற்படும்போது, பிரீமியத்தில் 20% வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது பெண்களுக்கு நிதிச்சுமையைக் குறைக்க உதவும்.
பெண்கள் காப்பீட்டில் குறைந்த பங்கேற்புக்கான காரணங்கள்

இந்தியாவில் பெண்கள் மத்தியில் காப்பீடு தொடர்பான புரிதல் குறைவாக இருப்பதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன என்று கிரிஜா சுப்பிரமணியம் கூறியுள்ளார். அவற்றில் முக்கியமானவை,
- பெண்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப ஆண்களைச் சார்ந்திருப்பது.
- நிலையான வருமானம் இல்லாமல் இருப்பது.
- வெளியில் சென்று நிதி சார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை.
இந்தப் காரணங்களால்தான் பெண்கள் மத்தியில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. “பெண்கள் மத்தியில் காணப்படும் இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பெண்களுக்காக நிதி மற்றும் கல்வித் திட்டங்களையும் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 1,680 அலுவலகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம்” என்று கிரிஜா சுப்பிரமணியன் அவர்கள் உறுதியளித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தை பெண்கள் சிரமமின்றி அணுகுவதற்கு டிஜிட்டல் மயமாக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம்
“தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்” நிறுவனத்தில் அனைத்து பாலிசிகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. ஆனால் “Women Udyam Bima” போன்ற எளிய பாலிசிகளை டிஜிட்டல் மயமாக்க நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இதன் மூலம், பெண்கள் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே பாலிசி எடுக்கவும், க்ளைம் (claim) செய்யவும் முடியும். இதற்கான டிஜிட்டல் இடைமுகம் (Digital Interface) விரைவில் பயன்பாட்டிற்கு வரும். சில செயல்முறைகள் ஏற்கனவே தானாகவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விரைவில் மற்ற பாலிசிகளையும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் வடிவமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று கிரிஜா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தானியங்கி க்ளைம் கண்காணிப்பு முறை
“தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்”-ன் இந்த தானியங்கி அம்சம் மூலம், பயனாளர்கள் தங்கள் பாலிஸிகளின் க்ளைம் நிலையை SMS மூலம் அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.
Post Office முதலீட்டு திட்டம் – அதிக வட்டி, சிறந்த முதலீடு!
இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் க்ளைம் நிலையை எளிதாகவும், வெளிப்படையாகவும் கண்காணிக்க முடியும். இது காப்பீட்டு நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.
நிறுவனத்தின் நிதி நிலை
“தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்” கடந்த ஜனவரி 2025-ல் ரூ. 3,788 கோடி பிரீமியம் வருமானம் ஈட்டியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நிறுவனத்தின் நிலையான நிதி நிலையைக் காட்டுகிறது. மேலும், இது தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய பங்களிப்பாகவும் கருதப்படுகிறது.
பெண்களின் தலைமைத்துவம்
“தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்” நிறுவனத்தில் 30% ஊழியர்கள் பெண்களாக உள்ளனர். குறிப்பாக உயர் பதவிகளிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. தற்போது CMD, ED மற்றும் 5 பொது மேலாளர்களில் 3 பேர் பெண்கள் உள்ளனர்.
மேலும், 50% தலைமை மேலாளர்களும் பெண்களே. இது நிறுவனத்தில் பெண்களின் தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பெண்களின் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் பெண்களுக்கான கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் உதவுகிறது என்று கிரிஜா சுப்பிரமணியம் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ஊதிய ஏற்றத்தாழ்வு மற்றும் தாக்கம்
World Economic Forum (WEF)-ன் 2023-2024 அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும், அவர்கள் 60% குறைவான சம்பளமே வாங்குகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது, ஆண்கள் ரூ. 100 சம்பாதித்தால், பெண்கள் ரூ. 40 மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.
பெண்கள் ஊதியத்தில் காணப்படும் இந்த ஏற்றத்தாழ்வு, அவர்களை காப்பீடு போன்ற நிதித் திட்டங்களில் சேர முடியாமல் தடுக்கிறது. மேலும், வருமானம் குறைவாக இருப்பதால், பெண்களால் நிதி திட்டமிடல் மற்றும் காப்பீடு போன்ற திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை என்று கிரிஜா சுப்பிரமணியன் அவர்கள் கவலை தெரிவித்தார்.
2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு
2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை இந்தியா கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். சமீபத்திய ஆய்வுகளின்படி, நிதி திட்டமிடல் மற்றும் ஆபத்து மேலாண்மை போன்ற விஷயங்களில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், அதிக பெண்கள் காப்பீட்டு முகவர்களாகவும், ஆலோசகர்களாகவும் உள்ளனர். Bima Sugam மற்றும் Bima Vahak போன்ற ஒழுங்குமுறை முயற்சிகள் பெண்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில், அதிக பெண்கள் காப்பீட்டுத் துறையில் தலைமைப் பதவிகளை அடைந்துள்ளனர்.
மேலும், actuarial science, health insurance மற்றும் underwriting போன்ற சிறப்புத் துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தலைமைத்துவத்தில் பாலின வேறுபாடு இல்லாமல் இருந்தால், சரியான முடிவுகளை எடுக்க முடியும். அதற்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கிரிஜா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டங்கள்
காப்பீட்டுத் திட்டங்களைத் தவிர்த்து பெண்களின் முன்னேற்றத்திற்கான பல CSR திட்டங்களிலும் “தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்” நிறுவனம் பணியாற்றி வருகிறது.
கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மருத்துவ முகாம்கள் மற்றும் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்த நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கிரிஜா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மை
நிறுவனம் நிதி ரீதியாக மிகவும் நிலையான நிலையில் உள்ளது என்று கிரிஜா சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தில் கடனளிப்பு விகிதம் (Solvency Ratio) 1.90 மடங்கு அதிகமாக உள்ளது.
மேலும், “தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்”, ISO 27001:2022 சான்றிதழ் பெற்றுள்ளது. இவை அனைத்தும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு, நிறுவனத்தின் மீதான பாலிஸிதாரர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
விண்ணப்பிக்கும் முறை

“தி நியூ இந்தியா அஸுரன்ஸ் கோ. லிமிடெட்” நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள “Women Udyam Bima Policy” திட்டத்தில் விண்ணப்பிப்பது எளிமையானதாகும்.
தற்போது இந்தத் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு https://www.newindia.co.in/ தளத்தைப் பார்வையிடவும்.
கோடைக்கால உணவுகள் : உடலுக்கு நல்ல 12 தேர்வுகள்!
பெண்கள் காப்பீட்டுத் திட்டம் FAQs
1) Women Udyam Bima Policy என்றால் என்ன?
சிறு தொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ. 5 கோடி வரை காப்பீடு வழங்கும் திட்டமே Women Udyam Bima Policy ஆகும்.
2) பெண்கள் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
தொழில் தொடங்கும் பெண்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிப்பதே பெண்கள் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
3) இந்தத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையை எப்படிச் செலுத்தலாம்?
பெண்கள் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையை மாதந்தோறும், 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மொத்தமாக செலுத்தலாம்.
4) இந்தத் திட்டம் எந்த மாதிரியான தொழில்களுக்கு பொருந்தும்?
இந்தத் திட்டம் உற்பத்தி மற்றும் சேவை ஆகிய 2 துறைகளுக்கும் பொருந்தும்.
5) காப்பீட்டுத் தொகையை மாற்ற முடியுமா?
ஆம், தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ள முடியும்.
Successful SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்!
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
அதிகாரப்பூர்வத் தரவுகள்
New India Assurance – Women Udyam Bima Policy pdf
Key Insights & Best Takeaways
Women’s Insurance Scheme offers coverage up to ₹5 Crore, ensuring financial security for women entrepreneurs. Government-backed policies provide affordable premiums and extensive benefits. Learn how to apply for the best women’s insurance plans and maximize your coverage. Don’t miss out on exclusive government schemes designed for women’s financial empowerment!