- சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) : குழந்தைகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் ஆவர். அதிலும், குறிப்பாக சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை எதிர்காலத்தில் நிர்வகிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது.
- இதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு பெண் குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான், “சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY)” திட்டமாகும். இதனை “செல்வ மகள் சேமிப்புத் திட்டம்” என்று கூறுவர். இந்த சேமிப்புத் திட்டத்தின் மூலம், ஆரம்பத்தில் சிறிய தொகையிலிருந்து சேமிக்கத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற வேண்டும்.
- இது குறைந்த முதலீட்டில் அதிக சேமிப்பு மற்றும் வருமான வரி விலக்கை வழங்கி வருவதால், இது பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியாக செயல்படுகிறது. மேலும், இது பெற்றோர்களுக்கு மிகவும் உதவியான திட்டமாகும். இதில் அதிக வட்டி கிடைப்பதால், குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
- இந்தப் பதிவில் சுகன்யா சம்ரிதி யோஜனா பற்றிய முழுமையான தகவல்கள் குறித்தும், அதன் நன்மைகள் பற்றியும், எப்படி செயல்படுகிறது என்பது பற்றியும், வரிச் சலுகைகள் பற்றியும், அதன் பயன்பாட்டு முறைகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா

- “சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY)” கணக்கு ஜனவரி 22, 2015 அன்று இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த சேமிப்புத் திட்டம் ஆகும்.
- இந்தத் திட்டம் “பெட்டி பச்சாவ், பெட்டி பதாவ் (Beti Bachao, Beti Padhao – Save the Girl Child, Educate the Girl Child)” என்ற அமைப்பின் முயற்சியில் தொடங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
கணக்கைத் திறப்பதற்கான தகுதி
- இந்தக் கணக்கைத் திறப்பதற்குப் பெண் குழந்தையின் வயது 0 முதல் 10 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பேருக்கு மட்டுமே கணக்கைத் திறக்க முடியும். இரட்டைக் குழந்தைகள் அல்லது 3 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தால் அதற்கு விதிவிலக்கு உண்டு.
- உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் முதலில் பெண் குழந்தை பிறந்து, இரண்டாவது முறை இரட்டைப் பெண் குழந்தைகளாக பிறந்திருந்தால், மூவருக்குமே கணக்கைத் திறக்க முடியும். முதலில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்து, இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால், 3 பேருக்கும் கணக்கைத் திறக்க முடியும்.
- ஒரு பெண் குழந்தைக்கு நாடு முழுவதும் ஒரே ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!
கணக்கை எப்படித் திறப்பது?
பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் (Nominee) அருகில் உள்ள தபால் நிலையம் (Post office) அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் சுகன்யா சம்ரிதி கணக்கைத் திறக்கலாம்.
கணக்கைத் திறப்பதற்குத் தேவைப்படும் ஆவணங்கள்
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் (Birth certificate).
- பெற்றோர் அல்லது நாமினியின் அடையாளச் சான்றிதழ்கள் (ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவை).
- பெற்றோர் அல்லது நாமினியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் (Passport size photos).
- பான் கார்டு இல்லையென்றால், ஃபார்ம் 60 (Form 60) வைப்பது அவசியமாகும்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை
- கணக்கின் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 250 ஆகும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். டெபாசிட் தொகையை ரூ. 50 மடங்குகளில் செலுத்த வேண்டும்.
- இதை மொத்தமாகவும் (lump-sum), பல தவணைகளாகவும் செலுத்தலாம். ஒரு மாதத்தில் அல்லது ஒரு நிதியாண்டில் டெபாசிட்டுகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.
டெபாசிட் காலம்
- கணக்கைத் திறந்த தேதியிலிருந்து 15 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம்.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு செயல்படும். ஆனால், புதிதாக டெபாசிட் செய்ய முடியாது.
- பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான பிறகு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
கணக்கு செயலிழந்தால் என்ன செய்யலாம்?
- ஆண்டிற்குக் குறைந்தபட்சத் தொகையான ரூ. 250 செலுத்தவில்லை என்றால், கணக்கு செயலிழந்ததாகக் கருதப்படும்.
- கணக்கை மீண்டும் செயல்படுத்த குறைந்தபட்சம் ரூ. 250 மற்றும் ஆண்டுக்கு ரூ. 50 அபராதம் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதம்

- வட்டி விகிதம் அரசாங்கத்தால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும். தற்போது, ஜனவரி 1, 2024 முதல் ஆண்டிற்கு 8.2% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. வட்டியானது ஆண்டுதோறும் கணக்கிடப்பட்டு கூட்டு வட்டி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
- ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் அந்தக் கணக்கிற்கு வட்டி வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு “வருமான வரி விலக்கு உண்டு”.
வட்டி எப்படிக் கணக்கிடப்படும்?
- மாதத்தின் 5ம் தேதி முதல் அந்த மாதத்தின் இறுதி வரை கணக்கில் உள்ள குறைந்தபட்ச தொகைக்கு வட்டி கணக்கிடப்படும்.
- வட்டி ஆண்டின் இறுதியில் கணக்கில் சேர்க்கப்படும்.
கணக்கை இயக்கும் வயது வரம்பு
- பெண் குழந்தை 18 வயதை அடையும் வரை அவர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் நாமினி (Nominee) கணக்கை இயக்குவார்.
- 18 வயதிற்குப் பிறகு, பெண் குழந்தையே அந்தக் கணக்கை இயக்க முடியும்.
“PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!”
பணத்தை எப்படி எடுப்பது?
- பெண் குழந்தை 18 வயது ஆன பிறகு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
- பணத்தை எடுப்பதற்கு, முந்தைய நிதியாண்டின் இறுதியில் உள்ள இருப்பின் 50% வரை எடுத்துக் கொள்ள முடியும்.
- பணம் எடுப்பதில் மொத்தமாகவோ (lump-sum) அல்லது தவணைகளிலோ எடுத்துக் கொள்ளலாம்.
- ஒவ்வொரு ஆண்டும் 1 முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்குள் பணத்தை எடுக்க வேண்டும்.
- எடுக்கப்படும் தொகையானது கல்வி கட்டணம் அல்லது பிற செலவுகளின் உண்மையான தேவைக்காக இருக்க வேண்டும்.
முன்கூட்டியே கணக்கை மூடுதல்
- கணக்கைத் திறந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கணக்கை முன்கூட்டியே மூடலாம்.
- கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், அந்தக் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இறந்த தேதியில் இருந்து அந்தத் தொகையைக் குடும்பம் பெறும் நாள் வரை தபால் நிலைய சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டுக் கொடுக்கப்படும்.
- கருணை அடிப்படையிலான காரணங்களுக்கும் இதில் விலக்கு உள்ளது.
- கணக்கு வைத்திருப்பவருக்கு உயிருக்கு ஆபத்து உள்ள நோய் ஏதேனும் இருந்தால், கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம்.
- கணக்கை இயக்கிய பெற்றோர் அல்லது பாதுகாவலர் இறந்துவிட்டால், அந்தக் கணக்கை மூடிக்கொள்ளலாம்.
- முன்கூட்டியே கணக்கை மூடுவதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்துடன் கணக்கைத் திறந்த தபால் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
முதிர்ச்சி காலத்தில் (Maturity period) கணக்கை மூடுதல்
- கணக்குத் திறந்த தேதியில் இருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சி அடையும். அப்போது, கணக்கை மூடி பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
- அப்படி இல்லாமல், பெண் குழந்தைக்கு 18 வயதை அடைந்த பிறகு திருமணம் செய்தால் கணக்கை மூடிக் கொள்ளலாம். ஆனால், திருமணத் தேதிக்கு 1 மாதத்திற்கு முன்போ அல்லது 3 மாதங்களுக்குப் பின்போ கணக்கை மூடக் கூடாது.
உதாரணங்கள்

உதாரணம் 1
- ஒரு பெண் குழந்தைக்கு “சுகன்யா சம்ரிதி கணக்கு” தொடங்கப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கணக்கில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்யப்படுகிறது.
- இந்தக் கணக்கு 15 ஆண்டுகள் முடிவடையும்போது, ஆண்டுதோறும் 8.2% கூட்டு வட்டியில், கணக்கில் தோராயமாக ரூ. 29,83,993/- (சுமார், ரூ. 29.84 லட்சம்) கிடைக்கும். இந்தத் தொகையை குழந்தையின் கல்வி அல்லது திருமணச் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணம் 2
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு “சுகன்யா சம்ரிதி கணக்கு” தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் ரூ. 1,50,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு,
- ஒவ்வொரு குழந்தையின் கணக்கில் கிடைக்கக்கூடிய தொகை தோராயமாக ரூ. 44,75,989/- (சுமார் ரூ. 44.76 லட்சம்) ஆகும்.
- 2 குழந்தைகளுக்கான மொத்த தொகை ரூ. 89,51,978/- (சுமார் ரூ. 89.52 லட்சம்) ஆகும்.
இந்தத் தொகையைப் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்காகவும், திருமணச் செலவுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருமான வரி விலக்கு (Tax Benefits)
- இந்தக் கணக்கில் செய்யும் டெப்பாசிட்களுக்கு “வருமான வரி சட்டம் (Income Tax Act) 80C” பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
- கணக்கில் கிடைக்கும் வட்டியும் வரி விலக்கிற்கு உட்பட்டதாகும்.
சுகன்யா சம்ரிதி கணக்கின் நன்மைகள்
- இந்தக் கணக்கின் கீழ் போடப்படும் டெபாசிட்களுக்கு “கூட்டு வட்டி” முறையில் பணம் வழங்கப்படுவதால், குழந்தைகளின் எதிர்காலக் கல்விச் செலவுகளுக்கும், திருமணச் செலவுகளுக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.
- இந்தக் கணக்கில் போடப்படும் டெபாசிட் தொகைக்கும், வட்டித் தொகைக்கும் “வருமான வரி விலக்கு” உள்ளது.
- இது பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்தத் திட்டம் அரசாங்கத்தின் முழு ஆதரவைக் கொண்டுள்ளதால், இது ஒரு பாதுகாப்பான சேமிப்புத் திட்டம் ஆகும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா பற்றி தெளிவான அட்டவணை இதோ!
தகவல் | விவரம் |
திட்டத்தின் பெயர் | சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) |
தொடங்கப்பட்ட நாள் | ஜனவரி 22, 2015 |
திட்டத்தின் நோக்கம் | பெண் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகத் தொடங்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம் |
தகுதி | 0-10 வயதிற்குள் உட்பட்ட பெண் குழந்தைகள் |
கணக்கின் எண்ணிக்கை | ஒரு குழந்தைக்கு 1 கணக்கு, ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 |
எங்கு திறக்கலாம்? | தபால் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் |
குறைந்தபட்ச வைப்புத் தொகை | ரூ. 250 |
அதிகபட்ச வைப்புத் தொகை | 1 ஆண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரை |
வைப்புக் காலம் | 15 ஆண்டுகள் |
வட்டி விகிதம் | 2024 நிலவரப்படி 8.2% |
வட்டிக் கணக்கீடு | ஆண்டுதோறும் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படும் |
பணத்தை எடுக்கும் வயது | 18 வயது அல்லது 10-ம் வகுப்பு முடித்த பிறகு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் |
முழுமையான நிலுவைத் தொகை (Maturity amount) | 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும் |
வரி விலக்கு | “வருமான வரி சட்டம் 80C” பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு |
முன்கூட்டியே மூடுதல் | 5 ஆண்டுகளுக்குப் பிறகு சில விதிமுறைகளுடன் கணக்கை மூடிக் கொள்ளலாம் |
நன்மைகள் | பாதுகாப்பான முதலீடு, அதிக வட்டி, வரி விலக்கு |
சிறப்புகள்
- “சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY)” கணக்கு பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த சேமிப்புத் திட்டம் ஆகும்.
- இதன் “சிறந்த வட்டி விகிதம், வருமான வரி விலக்கு மற்றும் நீண்ட காலப் பயன்பாடு” போன்ற சிறப்பம்சங்கள் பல நன்மைகளை வழங்குகிறது.
- பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச முதலீட்டில் அதிக சேமிப்பை உருவாக்கித் தர முடியும். குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குக்கான பாதுகாப்பான ஒரு பொருளாதார ஆதாரத்தை உருவாக்கித் தர முடியும்.
- குறிப்பாக, இந்தக் கணக்கில் வைக்கப்படும் டெபாசிட்டுகளுக்குக் “கூட்டு வட்டி” முறையில் பணம் வழங்கப்படுவதால், இது பெற்றோருக்குக் கூடுதல் சலுகையை வழங்குகிறது.
- அது மட்டுமில்லாமல், இது குடும்பங்களின் பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்தும் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் ஆகும்.
- குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் கனவாகும். இந்தத் திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் வாழ்க்கையை சிறப்பான முறையில் எடுத்துச் சென்று அந்தக் கனவை நனவாக்க முடியும்.
- இந்தத் திட்டத்தால் பெண் குழந்தைகள் நம்பிக்கையோடு வளர்ந்து, அவர்களின் எதிர்காலத்தைத் தன்னம்பிக்கையோடு அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.
- எனவே, இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளின் வாழ்க்கையைப் பிரகாசமாக்குங்கள்!
(முக்கியக் குறிப்பு: இந்தத் திட்டம் தொடர்பான விதிகள் மற்றும் வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் அவ்வப்போது மாற்றப்படும். அதனால், தற்போதைய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு தபால் நிலையம் அல்லது வங்கிக் கிளையை அணுகவும், அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்).
- Official Details: இந்திய அரசு இணையதளம்
- Expert Insights: Economic Times
- Related Link: சிறந்த திட்டங்கள் – TNNEWSBOX
Post Office முதலீட்டு திட்டம் – அதிக வட்டி, சிறந்த முதலீடு!
FAQ
1. சுகன்யா சம்ருத்தி திட்டம் (SSY) என்றால் என்ன?
சுகன்யா சம்ருத்தி திட்டம் (SSY) என்பது இந்திய அரசால் பெண்குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக தொடங்கப்பட்ட சிறந்த முதலீட்டு திட்டமாகும். இது உயர்ந்த வட்டி விகிதம் மற்றும் வரி சலுகைகளை வழங்குகிறது.
2. சுகன்யா சம்ருத்தி திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர்கள் யார்?
இந்த திட்டத்தில் பெண்குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம்.குழந்தை 10 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.
3. சுகன்யா சம்ருத்தி திட்டத்தின் நன்மைகள் என்ன?
- உயர்ந்த வட்டி விகிதம்
- வரி விலக்கு (பிரிவு 80C கீழ்)
- மகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு பாதுகாப்பான சேமிப்பு
- குறைந்த முதலீடு தொகையுடன் ஆரம்பிக்கலாம்
4. SSY திட்டத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு எவ்வளவு?
குறைந்தபட்சம்: ரூ. 250
அதிகபட்சம்: ரூ. 1.5 லட்சம் வருடத்திற்கு
5. சுகன்யா சம்ருத்தி கணக்கை எங்கு திறக்கலாம்?
இந்த கணக்கை அஞ்சல் அலுவலகங்களில் அல்லது அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் திறக்கலாம்.
6. SSY கணக்கை மூடும் முன் பணத்தை எப்போது எடுத்துக் கொள்ளலாம்?
மகளின் 18வது வயதில் கல்விக்காக பகுதி பணம் எடுக்கலாம். முழு தொகையை 21 ஆண்டுகளுக்குப் பிறகு பெறலாம்.
7. SSY திட்டத்தில் பணம் செலுத்த தவறினால் என்ன செய்ய வேண்டும்?
குறைந்தபட்ச பணம் செலுத்த தவறினால், ரூ. 50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்படுத்தலாம்.
இந்தத் திட்டத்தைப் பற்றிய உங்களின் கருத்துக்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! மேலும், இது போன்ற தகவல்களைப் பெறுவதற்கு “tnnewsbox.com“-ஐ subscribe செய்யுங்கள்!