Mutual Fund SIP Plan : இன்றைய உலகில் சேமிப்பு இல்லாத வீடே இல்லை. இப்போது பல சேமிப்புத் திட்டங்களில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.
- அந்த வரிசையில், “மியூச்சுவல் ஃபண்ட்” மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக எஸ்ஐபி (SIP) திட்டத்தில்தான் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-யில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால் இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- “இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்” (Securities and Exchange Board of India (SEBI)), மியூச்சுவல் ஃபண்டின் எஸ்ஐபி திட்டத்தை ரூ. 250-க்குத் தொடங்கலாம் என்று கூறியுள்ளது.
இதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
எஸ்ஐபி என்றால் என்ன?
- எஸ்ஐபி என்பது “சிஸ்டமாட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்” (Systematic Investment Plan) ஆகும். இது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய உதவும் ஒரு வழியாகும்.
நீரிழிவு நோய் உணவுமுறை – சிறந்த 7 நாள் திட்டம் 2025
- இதில் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமாகவோ அல்லது சீராகவோ (உதாரணமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை) முதலீடு செய்து வந்தால், குறிப்பிட்ட காலத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
- இது நீண்ட காலத்திற்கான ஒரு முதலீட்டுத் திட்டமாக இருக்கும். அது மட்டுமில்லாமல், சந்தையின் ஏற்றத்தாழ்வுகள் இதில் பாதிப்பை ஏற்படுத்தாது.
Mutual Fund SIP Plan – ரூ. 250 முதலீட்டின் நோக்கம்
- SEBI வெளியிட்டுள்ள ஆலோசனைக் கட்டுரையில், மக்களிடையே பொதுவான சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நிதிச் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் புதிய முதலீட்டாளர்களுக்கு சிறிய தொகையில் முதலீடு செய்யும்படியான வசதியை ஏற்படுத்தித் தருவதற்கும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
- மேலும், இதன் மூலம் அதிகமான மக்கள் முதலீடு செய்யலாம் என்று கூறியுள்ளது. SEBI இதற்கு “சாட்சிடைஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் ப்ராடக்ட்” (Sachetised mutual fund product) என்று பெயரிட்டுள்ளது.
முதலீடு செய்வதற்கான விதிகள்
- SEBI-யின் விதிப்படி, ஒரு முதலீட்டாளர் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் உள்ள எஸ்ஐபி-களில் ரூ. 250-க்கு முதலீடு செய்யலாம்.
- இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது முதலீடு செய்ய வேண்டும்.
NIH Brain Research 2025 – மூளை பற்றி அறிய தகவல்கள்!
- மேலும், முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் பணத்தை எடுக்கலாம். அது மட்டுமில்லாமல், முதலீடு செய்வதையும் நிறுத்தலாம். இதற்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது.
- இந்தத் திட்டங்களில் “நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் (NACH) மற்றும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI)-வின் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI)” மூலம் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
இந்தத் திட்டம் சிறிய நிறுவனங்களின் பங்குகள் (Small-Cap), நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் (Mid-Cap), குறிப்பிட்ட துறை (உதாரணமாக தொழில்நுட்பம், மருத்துவம்), கடன்களுடன் கூடிய திட்டங்கள் ஆகிய பல வகைகளில் இருக்கலாம்.
SEBI-யின் முக்கிய நோக்கம் – Mutual Fund SIP Plan
- “Mutual Fund SIP Plan முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருந்தாலும், பலரால் தொடர்ந்து முதலீடு செய்ய முடியவில்லை.
- அதனால், அனைவருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று SEBI கூறியுள்ளது.
- மேலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுடன் பணிபுரியும் பிற நிறுவனங்களும் இந்தப் புதியத் திட்டத்தை ஊக்குவிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர், இந்தத் திட்டம் குறித்து பிப்ரவரி 6, 2025 அன்று மக்களின் கருத்தைக் கேட்கவுள்ளதாகவும், பிறகு இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் SEBI கூறியுள்ளது.
ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை – என்ன நடந்தது?
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..
எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways
SEBI has introduced a new ₹250 Mutual Fund SIP Plan to encourage small investments and boost financial savings across India. Investors can now start SIPs with just ₹250 through NACH or UPI systems, with flexible withdrawal options. The plan mainly targets new investors, promoting disciplined, long-term savings habits. Different investment categories like Small-Cap, Mid-Cap, and sector-specific funds are available under this scheme.