• Home
  • தமிழ்நாடு
  • விவசாயிகள் 2 லட்சம் ரூபாய் வெல்லும் அரிய வாய்ப்பு! விண்ணப்பிப்பதற்கான முழு விவரம்

விவசாயிகள் 2 லட்சம் ரூபாய் வெல்லும் அரிய வாய்ப்பு! விண்ணப்பிப்பதற்கான முழு விவரம்

விவசாயிகள் 2 லட்சம் ரூபாய் வெல்லும் அரிய வாய்ப்பு | Farmers 2 Lakh Prize Apply Details Tamil!

தமிழ்நாடு அரசு, உயிர்ம விவசாயத்தை (Organic farming) ஊக்குவிக்கும் நோக்கில், 2023ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கி வருகிறது. இந்த விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அங்கீகரிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

விவசாயிகளுக்கு விருது வழங்கும் அறிவிப்பு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், 2025-2026 ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதை அறிவித்துள்ளார். இந்த விருதுடன், பாராட்டுப் பத்திரம் மற்றும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் உயிர்ம விவசாயிகளுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தென்காசி மாவட்டத்தில் இந்த விருதைப் பெற விரும்பும் விவசாயிகள் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 1 ஏக்கர் பரப்பளவில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

மேலும், முழு நேர உயிர்ம விவசாயியாக, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றியதற்கான சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.

Read also : மாதம் 1.50 லட்சம் சம்பளம்! நான் முதல்வன் திட்டத்தில் 126 காலியிடங்கள்! நான் முதல்வன் திட்டம் 2025 - 126 வேலைவாய்ப்புகள்; Rs. 1.5 Lakhs Salary per Month Jobs

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 15.09.2025-ம் தேதிக்குள், ரூ.100 பதிவுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளம் : Click here…

பரிசு விவரங்கள்

மாநில அளவில் வெற்றிபெறும் 3 உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுடன், தலா ரூ.2 இலட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். மேலும் விபரங்கள் அறிய, விவசாயிகள் தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம்.

சாணக்கிய நீதி

சாணக்கியர் கூறிய வாழ்க்கை நெறிகள் - Chanakya Needhi Quotes in Tamil

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!

எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!

Key Insights & Best Takeaways

The Tamil Nadu government has announced the Nammazhvar Award for the year 2025-2026 to promote organic farming. The award, which includes a cash prize of ₹2 lakh, a certificate, and a medal, will honor the top three organic farmers at the state level. To be eligible, farmers must have been engaged in full-time organic farming for at least three years on a minimum of one acre of land. Applications must be submitted by September 15, 2025, with a registration fee of ₹100.

Read also : ஸ்டாலின் அதிரடி – 6000 கோடி நகை கடன் தள்ளுபடி! ஸ்டாலின் அரசு 6000 கோடி நகைக்கடன் தள்ளுபடி - Tamil Nadu Government Relief Scheme 2025

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *