முடங்கும் தலைநகரம் : டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி நிலவி வருகின்றது, இதனால் விமானங்கள் மற்றும் ரயில்களின் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்துள்ளன.
டெல்லியில் வெப்பநிலை
IMD-யின் 24 மணி நேரத் தகவலின்படி, டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ், அதாவது இயல்பை விட 3 டிகிரி குறைவாகவும், குறைந்தபட்சம் 7.6 டிகிரி செல்சியஸாகவும் இருந்துள்ளது.
ஜனவரி 8-ம் தேதி வரை டெல்லியில் மூடுபனி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனவரி 6-ம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸ் இருந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, டெல்லி விமான நிலையம் 0 மீட்டர் தெரிவு நிலையைப் பதிவு செய்துள்ளது. தெரிவுநிலை என்பது ஒரு பொருளை எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்க முடியும் என்பதைக் குறிக்கும். மூடுபனி காரணமாக தெரிவு நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
CPCB-யின் படி, லோத்தி சாலையில் காற்றின் தரக் குறியீடு 309 ஆக உள்ளது. இது “very poor” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முடங்கும் தலைநகரம்!

FlightRadar24-யின் அறிக்கை
FlightRadar24 கொடுத்த தகவலின்படி, டெல்லிக்கு வரும் விமானங்கள் சராசரியாக 6 நிமிடங்கள் தாமதமாக வருகின்றன என்றும், டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்கள் சராசரியாக 47 நிமிடங்கள் தாமதமாகின்றன என்றும் கூறியுள்ளது.
இந்தத் தாமதம் SpiceJet, Indigo, Air India உள்ளிட்ட பெரிய விமான நிறுவனங்களைப் பாதித்துள்ளது.
பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிடும்போது விமான அட்டவணைகளை சரி பார்க்குமாறு விமான நிலையங்கள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், தெரிவு நிலை மோசமாக இருந்தால் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.
OnePlus offer 2025 – ரூ.4500 வரை தள்ளுபடி!
ரயில்கள் தாமதம்
டெல்லியில் இருந்து புறப்படும் ரயில்களும், வரும் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. வானிலை நிலைமைகள் காரணமாக டெல்லியில் இருந்து புறப்படும் 24 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
இந்த ரயில்களில் அயோத்தி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமாகவும், கோரக்தாம் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகவும், பீகார் கிராந்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாகவும் இயக்கப்பட்டுள்ளது.
IMD வெளியிட்டுள்ள தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் நாட்களில் இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முடங்கும் தலைநகரம் – டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த மூடுபனி இருக்கும் என்றும்,
ராஜஸ்தானில் கோட்டா, பூண்டி, சிகார், ஜுன்ஜுனு, சுரு, ஸ்ரீ கங்காநகர் மற்றும் டோங்க் ஆகிய பகுதிகளிலும், பஞ்சாபில் அமிர்தசரஸ், குருதாஸ்பூர், டர்ன் தரன் மற்றும் கபுர்தலா ஆகிய பகுதிகளிலும்,
ஹரியானாவில் குருக்ஷேத்ரா, அமபால், பஞ்ச்குலா மற்றும் யமுனாநகர் ஆகிய பகுதிகளிலும் மூடுபனி நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் நவ்காஸ்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடியை சந்தித்த பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ்!
Key Insights & Best Takeaways!
- Over 200 flights were delayed at Delhi Airport, causing major inconvenience for travelers.
- The delay is primarily due to severe weather conditions and technical/operational issues.
- Airlines affected include IndiGo, Air India, Vistara, and more.
- Passengers faced long wait times, overcrowding at terminals, and lack of updates.
- Authorities are working on rescheduling and offering compensation options in some cases.
- The incident raises concerns over airport preparedness and real-time passenger communication.
- Travelers are advised to check flight status frequently and arrive early at the airport during such disruptions.
மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox