முன்னாள் பிரதமர்
“காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது” : நாட்டின் முதல் சீக்கிய பிரதமரும், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாகவும் விளங்கிய “மன்மோகன் சிங்கின்” இறுதிச்சடங்கு டிசம்பர் 28, 2024 அன்று நிகம்போத் காட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, பிற உயர்தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்களின் முன்னிலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
மன்மோகன் சிங் அவர்களின் இறுதிச் சடங்கின் போது பாஜக அவ மரியாதை செய்ததாகவும், அவர்களின் நிர்வாகம் சரியில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், தவறான நிர்வாகக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்து வருவதாகவும், அவர்கள் “மோசமான அரசியலில்” ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது”

முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கை ராஜ்காட்டில் நடத்துவதற்குப் பதிலாக டெல்லியின் நிகம்போத் காட்டில் நடத்தியுள்ளதாக ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!”
2 முறை பிரதமராக இருந்தவரின் மரபுக்கு அவ மரியாதை அளிக்கும்படி இருக்கின்றது என்று கூறியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் டிசம்பர் 28, 2024 அன்று ஹர்தீப் சிங் பூரி ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர், “இதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், இது போலியான சர்ச்சையாக உருவாக்கப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்து வருகின்றது” என்று கூறியுள்ளார்.
“காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது” – BJP vs Congress

மேலும், இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளைக் கூறும் வகையில் காங்கிரஸ் எழுதிய கடிதம் தாமதமாக வந்ததை விளக்கி, பாஜக நெறிமுறைகளைப் புறக்கணித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மறுத்துள்ளார்.
அவர், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். உள்துறை அமைச்சகம் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சிங் இறந்த மறுநாள் நள்ளிரவு அந்த கடிதம் எங்களுக்கு வந்தது.
ராஜ்காட்டை சுற்றியுள்ள பகுதியில் நீர் தேங்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. வானிலை மையம் பலத்த மழை பெய்யும் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தது.
குறுகிய காலத்தில் இது போன்ற சூழ்நிலைகளில் கட்டமைப்புகளை அமைக்க முடியுமா என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.
அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – நிதியமைச்சர் சந்திப்பு!
அது மட்டுமில்லாமல், அவரின் அமைச்சகம் கட்டுப்பாடுகளுக்குள் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
“பி. வி. நரசிம்ம ராவ்”
மேலும் அவர், “பி. வி. நரசிம்ம ராவின் உடலைக் கட்சித் தலைமையகத்திற்குக் கொண்டுவர அனுமதிக்காத காங்கிரஸ்தான் இன்று இவ்வாறு பேசி வருகின்றது.
அவரது இறுதிச் சடங்கு ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது. அவர்கள் தங்களின் சொந்த தலைவர்களையே அவமதித்துள்ளனர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் பெய்ஜிங்கிற்குச் சென்று அவருக்குத் தெரியாமல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
2 முறை அவரின் பதவிக்காலம் முடிந்தபோதும், கட்சியினர் அவரின் பிரியாவிடை விழாவிற்கு வரவில்லை.
2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி!
இன்றும் அவருடைய அஸ்தி கரைக்கப்பட்ட போது எங்களுடைய மக்கள்தான் அங்கு இருந்தனர், காங்கிரஸ் இல்லை. நாங்கள் எப்போதும் அவருடைய பணியைப் பாராட்டி அவரிடமிருந்து ஒரு உத்வேகத்தைப் பெற்றுள்ளோம். அவரின் நினைவாக ஒரு “நினைவுச் சின்னம்” அமைக்கப்படும்.
சர்ச்சையை உருவாக்குபவர்களை சுதந்திரமாக ஓட அனுமதிக்க கூடாது என்று நான் நினைக்கிறேன். நாம் அவரது மரபுக்கு மரியாதை செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
Quick English Recap – Key Insights & Best Takeaways
- Congress political controversy heats up as Hardeep Singh Puri accuses them of poor governance and political failures.
- Indian politics latest news – BJP supports the allegations, while Congress defends its leadership, calling it a false narrative.
- Will this impact 2025 elections? Public reaction to Congress vs BJP political fight is turning intense. Stay tuned.