- Beti Bachao, Beti Padhao : பெண் குழந்தைகள் நம் நாட்டின் கண்கள் ஆவர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்குப் பெரும்பாலான இடங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது சமூகத்தில் பாலின பாகுபாடு இருந்து வந்தது. இப்போதும் ஒரு சில இடங்களில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
- இதனால் பெண் குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற வாய்ப்புகளை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலைமையை மாற்றவும், பெண்களை மேம்படுத்தவும் இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
- அவற்றில் ஒன்றுதான் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachao, Beti Padhao – BBBP) திட்டம். இது பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களைப் பின்வருமாறு பார்ப்போம்.
மகளிர் முன்னேற்ற திட்டங்கள் 2025
Beti Bachao, Beti Padhao

- Beti Bachao – Beti Padhao: இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் என்றால் பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைக்குக் கல்வி கொடுங்கள் (Save the girl child, Educate the girl child) என்பது பொருளாகும்.
- இந்தத் திட்டம் நாட்டில் நிலவும் பாலினப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும், பெண்கள் முன்னேற்றம், பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பெண் குழந்தைகள் பிறக்க கூடாது என்ற மனப்பான்மை பல இடங்களில் இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல், கருவிலேயே பெண் சிசுக்களைக் கொல்லும் சம்பவங்கள் கூட நடக்கின்றன.
- இந்தக் கொடுமையான செயல்பாடுகளைத் தடுத்து, பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிப்பதே (மகளிர் பாதுகாப்பு திட்டம்) இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்ங்களில் ஒன்றாகும். அதைப் போல், பெண்களுக்குக் கல்வி கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்கள்
A) குறைந்த குழந்தை பாலின விகிதம்
2011-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளில், குழந்தைப் பாலின விகிதம் (Child Sex Ratio – CSR) மற்றும் பிறப்பு பாலின விகிதம் (Sex Ratio at Birth – SRB) ஆகியவற்றில் பெரும் சரிவு காணப்பட்டது. இந்த இரண்டு விகிதங்களும் ஒரு நாட்டின் பாலின சமத்துவத்தைக் குறிக்கும் முக்கியக் காரணிகளாகும். குறிப்பாக, குழந்தை பாலின விகிதம் என்பது 0 – 6 வயது வரையில் இருக்கும் 1000 சிறுவர்களில் எத்தனை பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதைக் குறிக்கும். இந்த விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது கவலைக்குரியதாக இருந்தது.
- 1999-ஆம் ஆண்டில் 945 ஆக இருந்த இந்த விகிதம்,
- 2001-ஆம் ஆண்டில் 927 ஆகவும்,
- 2011-ஆம் ஆண்டில் 918 ஆகவும் குறைந்தது.
இந்தப் புள்ளி விவரங்கள் நாட்டில் பாலினப் பாகுபாடு அதிகரித்து வருவதைக் காட்டின.
முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!
B) பிறப்பு பாலின விகிதத்தில் குறைவு
- பொதுவாக நாட்டில் 1000 குழந்தைகளுக்கு 950 பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். அது குறையும் போது தான் பாலின விகிதத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
- இதற்குப் பெண் குழந்தைகள் பிறப்பதை விரும்பாத ஒரு சில மக்களின் மனப்பான்மை தான் காரணமென்று ஆய்வுகள் கூறுகின்றன. கருவிலேயே பெண் சிசுக்களைக் கலைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுவே பிறப்பு பாலின விகிதத்தைக் குறைக்கிறது.
C) பாலின பாகுபாட்டின் விளைவுகள்
- பெண்களின் பிறப்பு விகிதம் குறைவதால் சமூகத்தில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
- பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பாகவே கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என்பதைத் தெரிந்து கொண்டு கருக்கலைப்பு செய்வது மற்றும் பிறந்த பிறகு அவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் கல்வித் தேவைகளைப் புறக்கணிப்பது போன்ற செயல்கள் பாலின பாகுபாட்டின் வெளிப்பாடுகள் ஆகும்.
D) மகளிர் சமூக முன்னேற்றம் – கலாச்சார காரணங்கள்
- ஆண் குழந்தைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வலுவான சமூக – கலாச்சார நடைமுறைகள் மற்றும் மத நம்பிக்கைகள் தான் இந்தப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- ஆண் குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு என்றும், பெண் குழந்தைகளை சுமையாக நடத்துவதும் இதற்கு காரணங்களாக அமைகின்றன. இந்த மனப்பான்மையை மாற்றவும், பெண் குழந்தைகளுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கவும் தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) – செல்வ மகள் திட்டம்!
Beti Bachao, Beti Padhao திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

இந்தத் திட்டம் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான திட்டம் ஆகும். இதன் நோக்கத்தை 2 முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை அளவீட்டு நோக்கங்கள் (Quantitative Objectives) மற்றும் பண்பு ரீதியான நோக்கங்கள் (Qualitative Objectives) ஆகும்.
A) அளவீட்டு நோக்கங்கள்
அளவீட்டு நோக்கங்கள் என்பவை புள்ளி விவரங்கள் மற்றும் அளவீடுகளின் மூலம் அடையக்கூடிய இலக்குகளைக் குறிக்கின்றன.
i) குழந்தைப் பாலின விகிதத்தை மேம்படுத்துதல்
- குழந்தைப் பாலின விகிதம் என்பது 0 – 6 வயது வரையில் இருக்கும் 1000 சிறுவர்களில் எத்தனைப் பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதைக் காட்டும் ஒரு குறியீடு ஆகும்.
- இந்த விகிதம் குறைந்தால், பாலினப் பாகுபாடு அதிகரிக்கும். இந்த விகிதத்தை மேம்படுத்துவதே திட்டத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும்.
ii) பிறப்பு பாலின விகிதத்தை மேம்படுத்துதல்
- பிறப்பு பாலின விகிதம் என்பது 1000 ஆண் குழந்தைகளில் எத்தனைப் பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
- இந்த விகிதம் குறைந்தால், பெண் சிசுக்கொலைகள் மற்றும் பாலினத் தேர்வுகள் நடப்பதைக் குறிக்கிறது. எனவே, பிறப்பு விகிதத்தை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கிறது.
iii) பெண் குழந்தைகளின் வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்தல்
- பெண் குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களின் உடல் நலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியமாகும்.
- இந்தத் திட்டம் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தடுப்பூசிகள் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை ஆகியவற்றை அமைத்துத் தர உறுதி செய்கிறது. (மகளிர் பாதுகாப்பு திட்டம்)
B) பண்பு ரீதியான நோக்கங்கள்
பண்பு ரீதியான நோக்கங்கள் என்பது மக்களின் மனப்பான்மை மற்றும் நடத்தையில் உள்ள மாற்றங்களைக் குறிக்கும்.
i) பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்தல்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகள் உள்ளன என்பதை மக்களுக்கு உணர்த்துவது இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
ii) பாலினத் தேர்வு மற்றும் பெண் சிசுக்கொலைகளைத் தடுத்தல்
பெண் குழந்தைகள் பிறக்கக் கூடாது என்ற மனப்பான்மையை மாற்றி, பாலினத் தேர்வு மற்றும் பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
iii) மகளிர் கல்வி திட்டம் ஊக்குவித்தல்
பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களைப் பள்ளிகளில் சேர்ப்பதையும், அவர்களின் கல்வியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
C) இரண்டு பிரிவுகளாகப் பிரித்த காரணங்கள்
- திட்டத்தின் தாக்கத்தை அளவிடுவதற்கும், அதன் வெற்றியை மதிப்பிடுவதற்கு வசதியாக இருப்பதற்கும்தான் இவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- அளவீட்டு நோக்கங்கள் மூலம் விவரங்களை வைத்து நேரடியாகக் கண்காணிக்க முடியும். அதே சமயம், பண்பு ரீதியான நோக்கங்கள் மூலம் மக்களின் மனப்பான்மையில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட முடியும்.
- அவற்றை அளவிடுவது சற்று கடினமாக இருந்தாலும், கருத்துக்கணிப்புகள் மற்றும் சமூக ஆய்வுகள் மூலம் மதிப்பீடு செய்ய முடியும். இவை பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – 5 எளிய வழிகள்!
Beti Bachao, Beti Padhao திட்டத்தை வழிநடத்துபவர்கள்

பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டம், பெண் குழந்தைகளைப் பாதுகாத்து அவர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் 3 அமைச்சகங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women & Child Development – MoWCD).
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health & Family Welfare – MoH&FW).
- மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resources Development – MoHRD).
ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட பொறுப்புக்கள் உள்ளன.
A) நிதி மற்றும் நிர்வாகம் (Finance and Administration)
- இந்தத் திட்டத்தின் நிதி மற்றும் நிர்வாகத்தின் முழு பொறுப்பும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் ( MoWCD) உள்ளது.
- அதாவது, இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, செலவு மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகம் அனைத்தும் MoWCD-யால் கவனிக்கப்படுகிறது.
B) திறன் மேம்பாட்டு மற்றும் தரக் கட்டுப்பாடு (Capacity Building and Quality Control)
- இந்தத் திட்டத்தின் திறன் மேம்பாடு மற்றும் தரக் கட்டுப்பாட்டிற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoH&FW) பொறுப்பாக உள்ளது.
- அதாவது, இந்தத் திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது, திட்டத்தின் தரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்வது போன்ற பணிகளை MoH&FW மேற்கொண்டு வருகிறது.
C) சமூக ஈடுபாடு திட்டங்கள் (Community Engagement Programmes)
- சமூக ஈடுபாடு திட்டங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MoHRD) நிர்வகித்து வருகிறது.
- அதாவது, இந்தத் திட்டம் மக்களிடம் சென்றடையவும், பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் பல்வேறு சமூக நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆன 2 எளியவர்கள்!
திட்டத்தின் பிரிவுகள்
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டம் 3 முக்கியக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
A) ஆதரவுப் பிரச்சாரங்கள் (Support Campaigns)
- குறைந்து வரும் பாலின விகிதம் (Child Sex Ratio – CSR) மற்றும் பாலினக் கருக்கலைப்பு (Sex Ratio at Birth – SBR) போன்ற பிரச்சனைகளை சமாளிக்க விழிப்புணர்வுகள் நடத்தப்படும்.
- பெண் குழந்தைகளின் பிறப்பை மதிக்கவும், அவர்களைப் பாகுபாடு இல்லாமல் வளர்க்கவும், கல்வி கற்பிக்கவும் பெற்றோர்களுக்குக் கற்பிப்பதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இது ஊடகங்கள் மற்றும் பல்வேறு தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
B) பாலின முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் தலையீடுகள் (Interventions in Gender Critical Districts)
- நாடு முழுவதும் உள்ள பாலின முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் பல்துறைத் தலையீடுகள் (Multidisciplinary interventions) திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
- இதன் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களும், நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
C) சுகன்யா சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Yojana)
- பெற்றோரை ஊக்குவித்து, பெண் குழந்தைகளுக்கு மேம்பட்ட வாழ்க்கையை உருவாக்குவதே சுகன்யா சம்ரிதி திட்டத்தின் நோக்கமாகும்.
- இதன் மூலம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற செலவுகளுக்கு சிறு வயது முதல் சேமிக்க முடியும்.
D) ஆதரவு மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் (Support and Media Campaigns)
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டத்தில் தேசிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. இது பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் கல்வி கற்பிப்பதையும், பெண் குழந்தைகளின் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – நிதியமைச்சர் சந்திப்பு!
Beti Bachao, Beti Padhao திட்டத்தின் பயனாளர்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.
A) முதன்மைப் பிரிவு (Primary Category)
- இளம் மற்றும் புதிதாகத் திருமணமான தம்பதிகள்.
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.
- பெற்றோர்கள்.
B) இரண்டாம் நிலைப் பிரிவு (Secondary Category)
- இளைஞர்கள்.
- இளம் பருவத்தினர் (பெண்கள் மற்றும் சிறுவர்கள்).
- மருத்துவர்கள்.
- பயிற்சியாளர்கள்.
- தனியார் மருத்துவமனைகள்.
- முதியோர் இல்லங்கள்.
C) மூன்றாம் நிலைப் பிரிவு (Tertiary Category)
- அதிகாரிகள்.
- பஞ்சாயத்து சங்கங்கள்.
- முன்னணித் தொழிலாளர்கள்.
- பெண்கள் சுய உதவிக் குழுக்கள்/கூட்டுப்பயனியாளர்கள்.
- மதத் தலைவர்கள்.
- தன்னார்வ அமைப்புகள்.
- மருத்துவ சங்கங்கள்.
- ஊடகங்கள்.
- பொதுமக்கள்.
2025 Best Budget Smartphones – 20,000-க்கு கீழ் டாப் லிஸ்ட்!
எதிர்காலத் திட்டம்
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் கடந்த 9 ஆண்டுகளில் பல முக்கிய இலக்குகளை அடைந்துள்ளது. மேலும், சிறப்பான வெற்றியை அடைவதற்கு அரசு சிலத் திட்டங்களை வகுத்துள்ளது.
A) மாவட்ட அளவிலான ஆய்வு (District Level Survey)
திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகளைக் கண்டறிவதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விரிவான ஆய்வு நடத்த அரசு திட்டமிடும்.
B) ஆய்வு அமைப்பு (Survey Agency)
இந்த ஆய்வு Niti Aayog-உடன் இணைந்து நடத்தப்படும்.
C) ஆய்வுகளின் நோக்கம் (Objective of the Survey):
- குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் திட்டத்தை வலுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.
- இதன் மூலம் திட்டத்தின் செயல்முறை மேம்படுத்தப்பட்டு, அதன் பலன்கள் முழுமையாக மக்களுக்குக் கிடைக்க வழி வகுக்கப்படும்.
Beti Bachao, Beti Padhao – அட்டவணை விளக்கம்
அம்சம் | விளக்கம் |
நோக்கம் | பாலினப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுதல், பெண்குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துதல், பெண்சிசுக்கொலைகளைத் தடுத்தல், பெண் குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பதை ஊக்குவித்தல் |
முக்கியப் பயனாளிகள் | இளம் தம்பதிகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், இளம் பருவத்தினர், மருத்துவர்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் |
அமைச்சகங்கள் | பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் |
முக்கியக் கூறுகள் | ஆதரவுப் பிரச்சாரங்கள், பாலின முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் தலையீடுகள், சுகன்யா சம்ரிதி திட்டம் |
ஒவ்வொரு பெண்ணும் மதிப்புடனும், பாதுகாப்புடனும், சுகந்திரமுடனும் வாழ வேண்டும் என்பதே பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டம் வெறும் அரசாங்கத்தின் முயற்சி மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பாகும். எனவே, பெண் குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்ற நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!
TOP 3 பட்ஜெட் ஹெட்போன்கள் ரூ.500-க்கு – ஒப்பீடு 2025!
Beti Bachao, Beti Padhao – FAQs
1) பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டம் 2015 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது.
2) இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
பாலினப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடி, பெண் குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
3) இந்தத் திட்டத்தின் முக்கியப் பயனாளிகள் யார்?
இளம் தம்பதிகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், பெற்றோர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் முக்கியப் பயனாளிகள் ஆவர்.
4) இந்தத் திட்டம் எந்த அமைச்சகங்களின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படுகிறது?
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Women & Child Development – MoWCD).
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health & Family Welfare – MoH&FW).
- மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resources Development – MoHRD).
5) சுகன்யா சம்ரிதி திட்டம் என்றால் என்ன?
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக சேமிக்க உதவும் ஒரு திட்டமே சுகன்யா சம்ரிதி திட்டம் ஆகும்.
சிறந்த 5G பட்ஜெட் போன்கள் 2025 – Best 5G Smartphones!
மேலும், இது போன்ற தகவல்களைத் தொடர்ந்து பெற tnnewsbox.com – ஐ subscribe செய்யுங்கள்!
TNNEWSBOX.COM – You tube Link Click Here..
Key Insights & Best Takeaways
The Beti Bachao, Beti Padhao initiative empowers girl children by promoting their education and protecting their rights, creating a pathway for women’s development. It emphasizes equal opportunity, gender equality, and social awareness to uplift young girls in every sector. This movement strengthens women’s participation in education, employment, and leadership, fostering long-term national growth. As a result, it serves as a foundation for a more inclusive and progressive society.