• Home
  • வணிகம்
  • “அடல் பென்ஷன் யோஜனா” மாதம் ₹5000 வரை ஓய்வூதியம்!

“அடல் பென்ஷன் யோஜனா” மாதம் ₹5000 வரை ஓய்வூதியம்!

அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய திட்டம் - Atal Pension Yojana Pension Scheme

அடல் பென்ஷன் யோஜனா முழு விவரங்கள் 2025

  • அடல் பென்ஷன் யோஜனா திட்டம் : நாம் வேலை செய்யும்போதும், தொழில் செய்யும்போதும் அதற்கான சம்பளம் வந்து கொண்டிருக்கும். ஆனால், வயதாகி உடல் பலவீனமாகும் போது வேலைக்குச் செல்ல முடியாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்த்துள்ளீர்களா? “அந்த நேரத்தில் யார் உதவுவார்கள்?, செலவுக்கு எங்கே பணம் கிடைக்கும்?” என்பதை எல்லாம் எண்ணிப் பார்க்கும்போது இப்போதே கவலை வந்துவிடும்.
  • உங்கள் கவலையைப் போக்குவதற்காகத்தான் மத்திய அரசு ஒரு சிறப்பான திட்டத்தைக் கொண்டு வந்தது. அதுதான் அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana – APY) திட்டம். இந்தத் திட்டம் முதியோர்களின் வாழ்விற்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த திட்டம் ஆகும். 
  • இது மே, 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பான ஓய்வூதிய வாழ்க்கையை மக்கள் பெற வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. 
  • பொதுவாக தனியார் வேலைகளிலும், தினசரி சம்பளத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை. அவர்களுக்கு இந்தத் திட்டம் அதிக பயனளிக்கும்.
  • குறிப்பாக, இது கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
  • இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை சேமித்து வந்தால், 60 வயதிற்குப் பின் நமக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவில் பென்ஷன் கிடைக்கும். 
  • மேலும், இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு மிக எளிமையான நடைமுறைகளே உள்ளன. அது மட்டுமில்லாமல், இதில் வருமான வரி விலக்கு போன்ற சலுகைகளும் உள்ளன. இந்தத் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana)

முதியோர்கள் ஓய்வூதியம் பெறும் காட்சி - Senior Citizens Receiving Pension
மாதாந்திர ஓய்வூதியத்தை பெற்று மகிழும் மூதாட்டியும் மூதாரும்.
  • இந்த (Atal Pension Yojana) ஜூன், 2015-ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக ஏழை மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் தனியார் துறையில் வேலை செய்யும் பணியாளர்கள் (Unorganised Sector) ஆகியோருக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். 
  • அரசு ஊழியர்கள் பொதுவாக ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் பெறுவார்கள். ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் ஓய்வுக் காலப் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. 
  • அதனால், 60 வயதுக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது. 

A) திட்டத்தை நடத்துபவர்கள்

  • இந்தத் திட்டத்தைக் கண்காணித்தும், பாதுகாத்தும் நடத்தி வருவது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority – PFRDA) ஆகும். 
சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) – செல்வ மகள் திட்டம்! சுகன்யா சம்ரிதி யோஜனா – பெண்குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்

B) ஓய்வூதியம் எப்படிக் கிடைக்கிறது?

  • நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவரும், 40 வயதுக்கு உட்பட்டவருமாக இருந்தால் இந்தத் திட்டத்தில் சேரலாம். 
  • உங்களுடைய வயதைப் பொறுத்து நீங்கள் மாதம் ரூ. 42 முதல் ரூ. 1,454 வரை செலுத்தலாம். 
  • 60 வயது நிறைவடைந்தவுடன் மாதம் ரூ. 1,000 முதல் ரூ. 5000 வரை ஓய்வூதியம் பெறலாம். 
  • தொடர்ந்து பணத்தை செலுத்தத் தவறினால் இதற்கு அபராதம் விதிக்கப்படும். 

C) ஏன் அடல் பென்ஷன் திட்டம்

  • இந்தியாவில் வயதான மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
  • ஓய்வு பெற்றவர்களின் (Retired Citizens) எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில், வேலை செய்யும் வயதில் இருக்கும் மக்களின் (Working Age Citizens) எண்ணிக்கை குறைகிறது, இதனை சமப்படுத்தாமல் இருந்தால் நிதிப் பற்றாக்குறை ஏற்படக் கூடும்.
  • இதனால், ஓய்வுக் காலத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பு இல்லாமல் மக்கள் வறுமைக்குத் தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. 
  • இதனைத் தவிர்க்க அரசு பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் முக்கியமான ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana – APY) திட்டம்.
Post Office முதலீட்டு திட்டம் – அதிக வட்டி, சிறந்த முதலீடு! போஸ்ட் ஆஃபிஸ் முதலீட்டு திட்டங்கள் மற்றும் அதிக வட்டி வருமானம் | Post Office Investment Schemes with High Interest Returns

மக்கள் எண்ணிக்கையில் மாற்றம்

  • 2014-ஆம் ஆண்டு துவாரா ஆராய்ச்சி நிறுவனம் (Dvara Research) நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கும், வேலை செய்யும் வயது உடையவர்களுக்கும் உள்ள விகிதாச்சாரம் (Proportion) 9.5% ஆக இருந்தது. ஆனால், இது 2060-ஆம் ஆண்டிற்குள் 28% ஆக அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளது. 
  • அதே நேரத்தில், 2015-ஆம் ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 5.4% இருந்த நிலையில், 2060-ஆம் ஆண்டில் இது 16.7% ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது. இதில் வேலை செய்யும் வயது (20-64 வயது) உடையவர்களின் எண்ணிக்கை 3% மட்டுமே அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது. 
  • இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கைக்கு நிகராக ஓய்வு பெற்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அப்போது ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், வேலை செய்யும் மக்களின் வருமானம் குறைந்து நாட்டின் பொருளாதாரத்திற்கே சிரமம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதற்குத் தீர்வாய் வந்தது தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.

E) ஒழுங்கற்ற துறையில் வேலை செய்பவர்களுக்கான சிக்கல்கள்:

  • இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஒழுங்கற்ற துறைகளில் (Unorganised Sector) வேலை செய்து வருகிறார்கள். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கடைத் தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் இதில் அடங்குவர். இந்தத் துறையில் வேலை செய்யும் மக்களுக்குப் பல்வேறு வகையான சிக்கல்கள் உள்ளன. 
  • இவர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு கிடைபதில்லை. 
  • குறிப்பிட்ட வேலை நேரம் என்று நிர்ணயிக்காமல் வேலை செய்யும் நிலை உள்ளது. 
  • சில நாட்களில் வேலை இல்லாமல் வருமானம் இல்லாத சூழ்நிலையும் எதிர்கொள்கிறார்கள் (Cyclical Unemployment). 
  • இந்த சூழ்நிலையால் விபத்துக்கள் அல்லது மருத்துவச் செலவுகளுக்குப் தேவையான பொருளாதாரமும் அவர்களுக்கு கிடைபதில்லை. 
  • 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 93% மக்கள் ஒழுங்கற்ற துறைகளில் வேலை செய்பவர்கள் என்று ஆய்வுகள் கூறியுள்ளது. இந்தக் காரணங்களால் தான் மக்களுக்கு ஓய்வுக் காலப் பாதுகாப்பு தேவை என்பதை அரசு கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை நடைமுறை படித்தியுள்ளது.

அரசின் ஓய்வூதியத் திட்டங்கள்

அடல் பென்ஷன் யோஜனாவின் நன்மைகள் விளக்கம் - Atal Pension Yojana Benefits Chart
திட்டத்தின் முக்கிய நன்மைகள் மற்றும் மாத ஓய்வூதியம் விவரம்.

G) அடல் பென்ஷன் திட்டத்தின் தொடக்கம்

  • ஜூன் மாதம் 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு அடல் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது NPS-Swavalamban திட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகும். 
  • 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். 
  • இந்தத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 முதல் ரூ. 5000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
  • NPS-Swavalamban திட்டத்தில் கணக்கு வைத்திருந்தவர்கள், இந்தப் புதிய திட்டத்திற்கு மாறவும் அனுமதி அளிக்கப்பட்டது.

யார் சேரலாம்? 

A) வயது வரம்பு:

  • இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் சேரலாம். 
  • 18 – 40 வயதிற்கு உட்பட்ட விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு கடை வைத்திருப்பவர்கள், தினக் கூலியில் வேலை பார்ப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள் போன்ற அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். 
இந்தியப் பங்குச் சந்தை 2025 – Stock Market Trends & Tips! இந்திய பங்குச் சந்தை 2025 – Stock Trends & Tips Explained in Tamil

B) ஆதார் கார்டு:

  • இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் ஒவ்வொருவரிடமும் ஆதார் கார்டு (Aadhar Card) அவசியமாக இருக்க வேண்டும். 
  • ஏனென்றால், ஆதார் கார்டு என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு அடையாள ஆவணமாகும். இதில் நம்முடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, கைரேகை (Fingerprint) போன்ற தகவல்கள் இருக்கும். 

C) மொபைல் எண்:

  • கணக்கு தொடங்குபவர்களிடம் செயலில் உள்ள மொபைல் எண் (Active Mobile Number) இருக்க வேண்டும். 
  • ஏனென்றால், திட்டம் தொடர்பான தகவல்கள், மாதாந்திரத் தொகை செலுத்துதல் நிலை (Monthly Payment Status), ஓய்வூதியத் தகவல்கள் போன்றவை மொபைல் மூலம் தெரிவிக்கப்படும்.

மாதாந்திரக் கட்டண விவரங்கள்

அடல் பென்ஷன் யோஜனா ஆன்லைன் பதிவு - Atal Pension Yojana Online Enrollment
பேங்க் மற்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி என்பதை விளக்கும் படம்.
  • அடல் பென்ஷன் திட்டத்தில் சேரும் நபருக்கு 60 வயது ஆகும்போது, அவர் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவார். 
  • அவர் செலுத்தும் தொகையின் அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். 
  • இதற்கான தொகையை மாதம், காலாண்டு (3 மாதத்திற்கு ஒரு முறை) அல்லது அரையாண்டு(6 மாதத்திற்கு ஒரு முறை) என்ற 3 வகைகளில் செலுத்தலாம்.

A) குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான கட்டணங்கள்

  • இந்தத் திட்டத்தில் 18 வயதில் சேரும் நபர் 60 வயதில் ஓய்வூதியம் பெறுவதற்கு மாதந்தோறும் ரூ. 42 செலுத்த வேண்டும். 
  • அதுவே, அதிக ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால் அதிகக் கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் அதிகமாகும் போது ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா மாத தவணை எவ்வளவு? வயதிற்கேற்ப விவரங்கள்

வயது (Age)மாதத்திற்கான கட்டணம் (Monthly Contribution)
18 வயதுரூ. 42 (ரூ.1,000 ஓய்வூதியம் பெற) ரூ. 84 (ரூ.2,000 ஓய்வூதியம் பெற) ரூ. 126 (ரூ.3,000 ஓய்வூதியம் பெற)
ரூ. 168 (ரூ.4,000 ஓய்வூதியம் பெற) ரூ. 210 (ரூ.5,000 ஓய்வூதியம் பெற)
20 வயதுரூ. 50 (ரூ.1,000 ஓய்வூதியம் பெற)ரூ. 100 (ரூ.2,000 ஓய்வூதியம் பெற)ரூ. 150 (ரூ.3,000 ஓய்வூதியம் பெற)
ரூ. 198 (ரூ.4,000 ஓய்வூதியம் பெற) ரூ. 248 (ரூ.5,000 ஓய்வூதியம் பெற)
25 வயதுரூ. 76 (ரூ.1,000 ஓய்வூதியம் பெற) ரூ. 151 (ரூ.2,000 ஓய்வூதியம் பெற) ரூ. 226 (ரூ.3,000 ஓய்வூதியம் பெற) ரூ. 301 (ரூ.4,000 ஓய்வூதியம் பெற) ரூ. 376 (ரூ.5,000 ஓய்வூதியம் பெற)
30 வயதுரூ. 116 (ரூ.1,000 ஓய்வூதியம் பெற) ரூ. 231 (ரூ.2,000 ஓய்வூதியம் பெற) ரூ. 347 (ரூ.3,000 ஓய்வூதியம் பெற) ரூ. 462 (ரூ.4,000 ஓய்வூதியம் பெற) ரூ. 577 (ரூ.5,000 ஓய்வூதியம் பெற)
35 வயதுரூ. 181 (ரூ.1,000 ஓய்வூதியம் பெற)ரூ. 362 (ரூ.2,000 ஓய்வூதியம் பெற)ரூ. 543 (ரூ.3,000 ஓய்வூதியம் பெற)ரூ. 722 (ரூ.4,000 ஓய்வூதியம் பெற) ரூ. 902 (ரூ.5,000 ஓய்வூதியம் பெற)
40 வயதுரூ. 291 (ரூ.1,000 ஓய்வூதியம் பெற)ரூ. 582 (ரூ.2,000 ஓய்வூதியம் பெற) ரூ. 873 (ரூ.3,000 ஓய்வூதியம் பெற)ரூ. 1,164 (ரூ.4,000 ஓய்வூதியம் பெற) ரூ. 1,454 (ரூ.5,000 ஓய்வூதியம் பெற)

அடல் பென்ஷன் யோஜனா கணக்கு எவ்வாறு தொடங்குவது?

வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகவும் 

  • முதலில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். உங்கள் பெயரில் ஏற்கனவே சேமிப்புக் கணக்கு இருந்தால், அதனுடன் இந்தத் திட்டத்தை இணைத்துக் கொள்ளலாம். சேமிப்பு கணக்கு இல்லையென்றால், புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். 

ஸ்டெப் 2: கணக்கு எண்ணை வழங்கவும்

  • உங்களிடம் வங்கிக் கணக்கு அல்லது தபால் சேமிப்புக் கணக்கு இருந்தால், அந்தக் கணக்கு எண்ணை வழங்க வேண்டும். வங்கி அல்லது தபால் ஊழியர்கள் உங்களின் அடையாளம் மற்றும் விவரங்களை சரி பார்ப்பார்கள். 

ஸ்டெப் 3: விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும் 

  • வங்கியில் அல்லது தபால் நிலையத்தில் அடல் பென்ஷன் திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தை பெற்று, அதில் உங்கள் பெயர், வயது, விலாசம், ஓய்வூதியம் பெற விரும்பும் தொகை போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும். சந்தாக் கட்டணம் (monthly/quarterly/half-yearly) எவ்வாறு செலுத்த விரும்புகிறீர்கள் என்பதையும் அதில் தெரிவிக்க வேண்டும். 

ஸ்டேப் 4: ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை வழங்கவும்

  • உங்களின் ஆதார் எண்ணையும், மொபைல் எண்ணையும் வழங்க வேண்டும். இதைக் கொடுப்பதன் மூலம் சந்தாக் கட்டணத்தின் விவரங்கள், தகவல்கள், எஸ்எம்எஸ் (SMS) மூலம் நீங்கள் விவரங்களைப் பெற வசதியாக இருக்கும். 

ஸ்டெப் 5: கணக்கில் தேவையான இருப்புத் தொகையை வைத்திருக்கவும் 

  • உங்கள் வங்கிக் கணக்கில் மாதம், காலாண்டு, அரையாண்டு சந்தாக் கட்டணத்தை செலுத்துவதற்குப் போதிய இருப்பு தொகை கணக்கில் வைத்திருக்க வேண்டும். கட்டணத்திற்குரிய தேதி வந்தவுடன் உங்கள் கணக்கிலிருந்து தானாகப் பணம் பிடிக்கப்படும்.
அடல் பென்ஷன் யோஜனா வயது மற்றும் செலுத்த வேண்டிய தொகை விவரம் - APY Age-Wise Contribution Table
வயதுக்கேற்ப செலுத்த வேண்டிய மாத தவணை தொகை பட்டியல்.

கட்டணத் தேதியைத் தவறவிட்டால் என்ன ஆகும்?

  • கட்டணத் தேதியின்போது கணக்கில் போதுமான பணம் இல்லையென்றால், நீங்கள் தவறவிட்டதாகக் (Default) கணக்கிடப்படும். அடுத்த மாதம் அல்லது அடுத்த கட்டணத் தேதி வரும்போது, அந்தத் தவறிய தொகையுடன் கூடுதல் வட்டி (Overdue Interest) செலுத்த வேண்டும்.

B) அபராத வட்டி (Overdue Interest)

  • மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் போது, தவறியுள்ள தொகைக்கு ரூ. 100க்கு ரூ. 1 (Rs. 1 per Rs. 100) வீதம் அபராத வட்டி வசூலிக்கப்படும்.
  • காலாண்டு அல்லது அரையாண்டுக் கட்டணம் செலுத்தும்போது தாமதம் ஏற்பட்டாலும், அதற்கேற்ப வட்டி வசூலிக்கப்படும்.
  • இந்த அபராதத் தொகையும், நீங்கள் ஓய்வூதியம் பெறும் தொகையில் (Pension Corpus) சேர்க்கப்படும்.
  • ஒரே மாதத்தில் 2 மாதக் கட்டணம் அல்லது மேலும் பல மாதங்களுக்கான கட்டணங்களைச் செலுத்தினால், அதற்கான தொகை வசூலிக்கப்படும்.

C) கணக்கு பராமரிப்புக் கட்டணமும், பிற கட்டணங்களும்

  • உங்கள் கணக்குப் பராமரிப்புக்காகவும் (Account Maintenance Charges), பிற கட்டணங்களுக்காகவும், சில மாதக் கால இடைவெளியில் பணம் கழிக்கப்படும்.
  • உங்கள் கணக்கில் பணம் இல்லையென்றால், இதற்கான கட்டணமும் சேர்த்து கழிக்கப்படும்.

D) அரசு ஒத்துழைப்புத் தொகை (Government Co-Contribution) மீதான விளைவுகள்

  • சிலர் அரசின் கூட்டுத்தொகை (Co-Contribution) உதவியை பெற்றிருக்கலாம்.
  • பணம் செலுத்தாமல் இருந்தாலோ, கட்டணத்துடன் வட்டி, பராமரிப்புக் கட்டணங்கள் அதிகமாகிவிட்டாலோ, உங்கள் கணக்கில் இருக்கும் தொகை முழுமையாக குறைந்துவிட்டால், அரசு கொடுத்த உதவித் தொகையை மீண்டும் அரசே எடுத்துக் கொள்வார்கள். மேலும், உங்கள் ஓய்வூதியம் தொடர்பான நிதி (Corpus) முழுமையாகக் காலியாகி விடும்.
  • இதனால், திட்டத்தின் பயனைப் பெற முடியாமல் போகும் நிலை ஏற்படும்.
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) – பயிர் காப்பீடு திட்டம்! ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) Crop Insurance Scheme – விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டம்

அடல் பென்ஷன் யோஜனா கணக்கு மூட வழிமுறைகள்?

A) 60 வயது முடிந்த பிறகு

  • நீங்கள் 60 வயதை அடைந்த பிறகு, உங்கள் வங்கியில் சென்று விண்ணப்பம் கொடுத்து ஓய்வூதியத்தைப் பெறலாம். உங்கள் முதலீட்டில் லாபம் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப அதிக ஓய்வூதியம் கிடைக்கும். 

B) 60 வயதிற்கு முன்பே திட்டத்தை விட்டு வெளியேறினால்

  • நீங்கள் அரசின் கூடுதல் தொகையைப் (Government Co-Contribution) பெற்றிருக்கும்போது 60 வயதுக்கு முன்பு திட்டத்திலிருந்து வெளியேறினால், உங்கள் செலுத்திய பணமும், அதில் கிடைத்த லாபமும் (Income Earned) மட்டுமே திருப்பித் தரப்படும்.
  • ஆனால், அரசு கொடுத்த கூட்டுத் தொகையும் அதிலிருந்து கிடைத்த லாபமும் (Government Contribution & Income Earned on it) திருப்பிக் கிடைக்காது.

C) 60 வயதிற்கு முன் சந்தா செலுத்துபவர் இறந்துவிட்டால்

  • 60 வயதிற்கு முன்பே கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அவரின் மனைவிக்கு இரண்டு தேர்வுகள் இருக்கும்:

i) மனைவி அவர்களின் பெயரில் அந்தக் கணக்கைத் தொடரலாம்

  • கணக்கு வைத்திருந்தவரின் பெயரிலிருந்த திட்டத்தை மனைவி தன்னுடைய பெயருக்கு மாற்றிக்கொண்டு, கணக்கு வைத்திருந்தவர் 60 வயது அடையும் வரை சந்தா செலுத்தலாம். பிறகு, மனைவிக்கே அந்த ஓய்வூதியம் கிடைக்கும்.

ii) முழு தொகையையும் பெறலாம்

  • முழு தொகையைப் பெறுவதற்கான விருப்பம் இருந்தால், சேமித்த முழு தொகையை (Corpus) மனைவி அல்லது நியமனாளர் (Nominee) பெறலாம்.
அரசாங்க உறுதி பெற்ற ஓய்வூதியம் - Government Guaranteed APY Pension
இந்த திட்டம் அரசாங்கம் உறுதி அளிக்கும் ஓய்வூதியம் வழங்குகிறது.

அனைவருக்கும் ஓய்வூதியம், பாதுகாப்பான எதிர்காலம்!  

  • APY திட்டம் பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், சாதாரண மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 
  • இந்தத் திட்டம் தொடங்கிய காலத்தில் சிலர் மட்டுமே கணக்கைத் தொடங்கியிருந்தாலும், இன்று கோடிக்கணக்கான மக்கள் அவர்களின் எதிர்கால வாழ்விற்குப் பாதுகாப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். 
  • 2024 நிலவரப்படி, சுமார் 6.62 கோடி பேர் அடல் பென்ஷன் திட்டத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்க்க அரசாங்க வங்கிகள், தனியார் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், தபால் துறைகள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். 
  • மேலும், மக்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தின் பயன்பாட்டை எடுத்துச் செல்ல ஓய்வூதிய நிதி மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 
  • இளைஞர்கள் போல் உழைத்த வாழ்க்கை முடிந்தபின், முதுமையில் மகிழ்ச்சியோடு வாழ இந்தத் திட்டம் ஒரு நல்ல துணையாக இருக்கும். அதனால்,  இப்போதே சேமித்து உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்! இந்தப் பதிவின் மூலம் நீங்கள் பல்வேறு தகவல்களைப் பெற்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் குறித்த பொதுவான கேள்விகளை வழங்கியுள்ளோம் (FAQs)

1. அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?

(APY) – திட்டம் என்பது ஓய்வுபெறும் காலத்திற்கான அரசாங்க ஓய்வூதிய திட்டமாகும். இதில் மாதாந்திர தொகை செலுத்தி, ஓய்வுபெறும் காலத்தில் மாத சம்பளம் பெறலாம்.

2. (APY)அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு என்ன?

இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  

3. அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மூலமாக எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

60 வயது நிறைவடைந்தவுடன் மாதம் ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். நீங்கள் செலுத்தும் சந்தாத் தொகையைப் பொறுத்தே உங்களின் ஓய்வூதியத் தொகையும் இருக்கும்.

4. திட்டத்தில் சந்தாக் கட்டணம் (Monthly Contribution) செலுத்தத் தவறிவிட்டால் என்ன ஆகும்?

சந்தாக் கட்டணத்தை செலுத்தத் தவறினால் அபராத வட்டி (Penalty) விதிக்கப்படும். அதற்கு உங்கள் கணக்கில் போதுமான பணம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் திட்டம் ரத்து செய்யப்படக்கூடும்.

5. NPS மற்றும் அடல் பென்ஷன் யோஜனா வித்தியாசம் என்ன?

APY ஒரு fixed pension scheme ஆகும், ஆனால் NPS (National Pension System) ஒரு market-based investment ஆகும்.

6. கணக்கு தொடங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:

  • Aadhaar Card
  • Bank Account
  • Mobile Number
  • Nominee Details

7. எந்த வங்கிகளில் அடல் பென்ஷன் யோஜனா கணக்கு தொடங்கலாம்?

SBI, Indian Bank, Canara Bank, HDFC, ICICI, Axis Bank போன்ற அனைத்து தேசியகீத மற்றும் தனியார் வங்கிகளிலும் இந்த திட்டத்தில் சேரலாம்.

8. மாத தவணை எவ்வளவு?

நீங்கள் ஓய்வுபெறும் காலத்தில் பெற விரும்பும் தொகைக்கு ஏற்ப மாத தவணை ரூ.42 முதல் ரூ.1,454 வரை இருக்கலாம்

Official Website : அடல் பென்ஷன் யோஜனா திட்டம் Click Here..

உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – 5 எளிய வழிகள்!

மேலும், இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற tnnewsbox.com -ஐ subscribe செய்யுங்கள்!

Releated Posts

SSC CHSL 2025 பதிவு தொடங்கியது – விண்ணப்பிக்கக் கடைசி தேதி இதோ

SSC CHSL 2025: மத்திய அரசின் கீழ் உள்ள பல பிரிவுகளில் கீழ்நிலை அலுவலகத் தேர்வான SSC CHSL 2025-க்கான ஆன்லைன் பதிவு தொடங்கிவிட்டது.…

ByByVignesh MJun 25, 2025

PM-Kisan பயனாளிகள் பட்டியல் 2025 – உங்கள் பெயர் உள்ளதா?

PM-Kisan 2025 : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) யோஜனா என்பது இந்திய அரசின் ஒரு முக்கியத் திட்டமாகும். இது தகுதியான…

ByByVignesh MJun 23, 2025

ITR ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி? Easy Step-by-Step Guide!

ITR : வருமான வரி தாக்கல் செய்வது என்பது இனி கடினமான பணியாக இருக்காது. ஏனென்றால், நீங்கள் ஒரு சம்பளதாரர் மற்றும் எளிய நிதி…

ByByVignesh MJun 22, 2025

ரூ.3,000-க்கு FASTag Annual Pass – செயல்படுத்துவது எப்படி?

FASTag Annual Pass : மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, FASTag பயன்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதியை…

ByByAmirthavarshini RJun 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *