பொதுவெளியில் நடக்கும் எந்த சம்பவத்துக்கும் தனிநபர் மட்டும்தான் காரணமா? ஒரு சமுதாயத்தில் நாம் கூட்டத்தை கூட்டி காட்டுவதில் காட்டும் ஆர்வம் எதைக் உணர்த்துகிறது? எந்த ஒரு பிரபலமான ஒருவரின் பேச்சு, அவர் பேசிய கருத்துக்கு மாறாக தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போது, அதற்க்கு மற்றவர்களின் விளக்கமும் விமர்சனங்களும் எதிர்வினையாக அமைகின்றன? அதே போல் விஜய்க்கு எதிராக அஜித், பேசியதாக கூறப்படும் கரூர் சம்பவத்தை பற்றி அஜித் பேசிய கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கமும், அதனைத் தொடர்ந்து அவர் அளித்துள்ள விளக்கமும் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் அஜித்குமாரின் அண்மைக் கருத்து
நடிகர் அஜித் அவர்கள் அண்மையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் குறித்துத் தன் கருத்தைத் தெரிவித்தார். அந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குக் சம்பந்தப்பட்ட தனிநபர் மட்டுமே காரணமில்லை என்றும், நாம் அனைவருமே பொறுப்பாளிகள்தான் என்றும் அவர் கூறியிருந்தார். எந்த ஒரு கட்சியும், தங்கள் பலத்தைக் ஒரு மக்களை கூட்டமாக கூட்டி காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இது போன்ற நிலைமை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
2026 தேர்தல் வியூகம்! எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு?
அஜித்தின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களும் விவாதங்களும்:
அஜித்குமார் சொன்ன இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக மக்களிடையே பரவி பெரும் கவனத்தைப் பெற்றது. இது பல்வேறு விதமான விமர்சனங்களும், விவாதப்பொருளாகவும் மாறியது. ஒரு தரப்பினர், அஜித்குமாரின் இந்த கருத்து நடிகர் விஜய்க்கு ஆதரவாகப் இருப்பதாகவும், மற்றொரு தரப்பினர், இந்தக் கருத்து விஜய்க்கு எதிராக அஜித் பேசியுள்ளதாகவும் கூறிவருகின்றனர், கரூரில் நடந்த துயர சம்பவத்தை நடிகர் அஜித் அவர்கள் மறைமுகமாகச் குறிப்பிட்டுள்ளதாகவும் விமர்சனங்களை முன்வைத்தனர்.இந்நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு எதிராக அஜித் – அஜித்குமார் அளித்த விளக்கம்
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் கூறியதாவது, அவர் கரூர் சம்பவத்தை துரதிர்ஷ்டவசமானது என்றும். இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன் ஒரு சினிமா திரையரங்கிலும், பெங்களூரு கிரிக்கெட் மைதானத்திலும் கூட நடந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, பொதுவெளியில் எப்படிக் கண்ணியமாக நடக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அனைவரும் பின்பற்றவேண்டும் என்றும், அந்த விதிமுறைகள் தனக்கும் பொருந்தும், அனைவருக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்க்கு அஜித்தின் ஆதரவும் வேண்டுகோளும்
என்னுடைய பேட்டியை நான் விஜய்க்கு எதிராகக் பேசியதாக உருவாக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என்று அஜித்குமார் தெரிவித்துள்ளார். நான் எப்போதும் நடிகர் விஜய்க்கு நல்லதையே நினைத்திருக்கிறேன், விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் வாழ்த்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில ரசிகர்கள் மீது பழியைச் சுமத்துவது தவறு என்றும், இனியும் தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படமாட்டாது, என்று நம்புவதாகவும் அவர் தன் விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது – BJP
நடிகர் அஜித்குமாரின் இந்த விளக்கத்தைப் பற்றிய உங்கள் கருத்தை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
இந்த பதிவில்,
கரூர் சம்பவம் குறித்து அஜித்குமார் என்ன சொன்னார்?
அஜித்குமார் கூறியதாவது, ஒரு சம்பவத்துக்கு ஒரே நபர் மட்டும் காரணமல்ல, சமூகமே பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதாகும்.
விஜய்க்கு எதிராக அஜித் – விளக்கம் அளித்த அஜித்?
அவர் கூறியது — இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன, எல்லோரும் பொது இடங்களில் விதிகளை பின்பற்ற வேண்டும்.
விஜய்க்கு எதிராக அஜித் பேசினாரா?
இல்லை, அவர் தெளிவாக கூறியுள்ளார் – விஜய்க்கு எதிராக அல்ல, பொதுவாக சமூகத்தைப் பற்றிப் பேசியது தான்.
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
Key Insights & Best Takeaways!
Actor Ajithkumar’s comments on the Karur incident sparked online debates about whether he spoke against actor Vijay. Later, Ajith clarified that his words were not against Vijay, but a general call for collective responsibility and safety in public gatherings.













