AI மூலம் வேலை : இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. முன்பு, தகவல்களைத் தேடுவதற்கு “கூகுள்” போன்ற பிரவுசர்கள் இருந்தன. ஆனால், இப்போது நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் AI தொழில்நுட்பம் Chatbot-ஐ உருவாக்கியுள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்கள் வளர்ச்சியை சந்தித்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தும் தனிப்பட்ட நபரும் பயன்பெறுகின்றனர். அப்படியிருக்க, இந்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் செய்துள்ள சம்பவம் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1000 வேலைகளுக்கு விண்ணப்பம் – AI மூலம் வேலை

Reddit என்னும் தளத்தில் ஒருவர் தான் 1000 வேலைகளுக்கு விண்ணப்பித்து, அதன் மூலம் வேலை கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதற்காக, தனக்கென்று AI Bot-ஐ தானாகவே உருவாக்கியுள்ளார். அது அவருடைய சுயவிவரக் குறிப்பை (CV& Resume) உருவாக்கி சரி பார்ப்பது முதல், பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி விண்ணப்ப செயல்முறைகளை முடிக்கும் வரை அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மேலும், இது ஒவ்வொரு வேலைக்கான விவரங்களை எடுத்து, அதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கவர் லெட்டரையும் தயார் செய்து அனுப்பும். இவ்வாறு 1000 வேலைகளுக்கு விண்ணப்பித்து, 1 மாதத்தில் 50 நிறுவனங்கள் இவரை இன்டர்வியூவிற்கு அழைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய TV வெளியீடு – TCL QD Mini LED TV!
நபரின் பேட்டி
AI மூலம் 1000 வேலைக்கு விண்ணப்பித்த நபர் : ஒரே இரவில் தான் உறங்கும் போது AI இந்த வேலையைத் தனக்காக செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல், இதன் மூலம் எப்படி வேலை கிடைக்கும் என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர், “வேலை தேடுபவர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்பை சில நொடிகளில் உருவாக்க முடியும். மேலும், தங்களின் திறனுக்கு ஏற்ப என்ன வேலை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு நமக்கு அது ஃபில்டர் செய்து தருகிறது. AI தொழில்நுட்பம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனால், இதில் இருக்கும் ஆழமான தாக்கங்களைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இப்படியே அனைத்துத் தேவைகளுக்கும் இந்த AI-யைப் பயன்படுத்தினால், அனைத்து விஷயங்களும் மனிதர்கள் இல்லாமல் இயங்கத் தொடங்கி விடுமோ என்ற பயமும் இருக்கிறது. இனி வரப்போகும் காலங்களில் மனிதர்களுக்கும், டெக்னாலஜிக்கும் இடையே இருக்கும் பிரச்சனையைத் தாண்டி, சமூக நெறிமுறைகள் குறித்து பெரிய கேள்வி எழ வாய்ப்பு இருக்கிறது. எனவே AI மற்றும் மனிதர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்” என்று அந்த நபர் கூறியுள்ளார்.
IT hub in Coimbatore – தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு!
AI வளர்ச்சியால் ஏற்படும் முன்னேற்றங்கள்
1) கற்றுக் கொள்ளும் திறன்
AI, மனிதர்கள் அளிக்கும் தரவுகளைக் கற்று வளர்கிறது. உதாரணமாக, ஒரு ட்ரான்ஸ்லேட்டர் தொடர்ந்து மொழிகளைக் கற்றுக்கொண்டு, அதன் பிழைகளைத் திருத்தி, சரியாகப் பணியாற்றி வருகிறது.
2) கடினமான பிரச்சனைகளுக்குத் தீர்வு
AI, மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்குகிறது.
3) முடிவுகளை எடுக்க உதவுதல்
AI, மனிதர்களுக்கு சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு வேலையைத் தேர்வு செய்வதற்கும், ஒரு பொருளை வாங்குவதற்கும் AI உங்கள் தேவைகளைத் தெரிந்துகொண்டு, அதற்கான வேலையைச் செய்கிறது.
4) பல துறைகளில் பயன்பாடு
i) நிதித்துறை
வங்கிப் பணமோசடிகளை கண்டுபிடிப்பது மற்றும் பொருளாதார மேலாண்மைக்கு உதவுகிறது.
ii) மருத்துவத்து
நோய்களை விரைவில் கண்டறிந்து, சரியான சிகிச்சைகளைப் பரிந்துரை செய்கிறது.
iii) சில்லறை விற்பனை
வாங்குபவர்களின் பழக்கங்களைப் புரிந்து பொருட்களைப் பரிந்துரைக்கிறது.
Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை!
Key Insights & Best Takeaways
AI is transforming job applications by enabling candidates to apply for 1000 jobs simultaneously, saving time and increasing efficiency. AI tools automate resume customization and cover letters, streamlining the application process. The job market is evolving, with AI breaking traditional barriers and creating more opportunities. To stay competitive, professionals must embrace AI-driven job applications. AI offers career growth by providing personalized job opportunities and insights into skill development.
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com