Infosys Email Alert : வேலை நேரத்தை மீறும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

Infosys Email Alert - வேலை நேரத்தை மீறும் ஊழியர்களுக்கு HR-இலிருந்து எச்சரிக்கை மின்னஞ்சல்! Work-life balance policy explained

Infosys Email Alert : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவமான இன்ஃபோசிஸ் (Infosys), தற்போது 9 மணி 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பத் தொடங்கியுள்ளது.

இது நிறுவனத்திலேயே முன்னாள் நிறுவனர் நாராயண மூர்த்தி வலியுறுத்திய 70 மணி நேர வேலை வார கருத்துக்கு நேரடியான மாறுபாடாகும்.

Infosys Email Alert

வேலை நேரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது?

இன்ஃபோசிஸ் தற்போது ஹைப்ரிட் வேலை முறையை வைத்துள்ளது. இதன் கீழ், ஊழியர்கள் மாதம் குறைந்தது 10 நாட்கள் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும்.

மீதமுள்ள நாட்களில் வீட்டில் இருந்தபடியே (Work from Home) பணியாற்றும் ஊழியர்களின் வேலை நேரம் தானாகக் கண்காணிக்கப்படும்.

ஒரு நாளில் 9.15 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்தால், அந்த ஊழியருக்கு HR பிரிவால் ஒரு தனிப்பட்ட மின்னஞ்சல் அனுப்பப்படும்.

இதில் அவர்கள் வேலை செய்த நாட்கள், ஒட்டுமொத்த நேரம் மற்றும் தினசரி சராசரி நேரம் உள்ளிட்ட விவரங்கள் சுட்டிக்காட்டப்படும்.

Read also : Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam

வேலை நேரத்தை மீறுவதால் என்ன பிரச்சனை?

இந்த எச்சரிக்கை மின்னஞ்சலில், “உங்கள் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மதிப்பு கொடுக்கிறோம். ஆனால், உங்கள் உடல்நலமும் வாழ்வியல் சமநிலையும் முக்கியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல், ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க கொண்டுவரப்பட்டுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மன அழுத்தம் குறைய புதிய வழிமுறை

மருத்துவர் சி.என். மஞ்சுநாத், “2013 முதல் 2018 வரை ஆய்வில் பங்கேற்ற இளம் வயது இதய நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பாரம்பரிய ஆபத்து காரணங்கள் எதுவும் இல்லை.

ஆனால் மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இது அளவிட முடியாத ஓர் ஆபத்து” என்று கூறியுள்ளார்.

இதை அடிப்படையாகக் கொண்டே இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை, இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களின் நலனை முதன்மையாகக் கொண்ட ஒரு முன்னேற்றமான முயற்சி.

இது இந்திய ஐடி துறையில் வேலை நேரம் குறித்த அணுகுமுறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read also : மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மூலம் ஆபத்து! வாய்ஸ் மெயில் மூலம் மோசடி – Voice Mail Scam Warning 2025

Infosys Email Alert – FAQs

1) இன்ஃபோசிஸ் ஏன் எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்புகிறது?

ஊழியர்கள் ஒரு நாளைக்கு 9 மணி 15 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்வதைத் தடுக்கவும், அவர்களின் உடல்நலம் மற்றும் வேலை-வாழ்வு சமநிலையை உறுதிப்படுத்தவும் இன்ஃபோசிஸ் இந்த மின்னஞ்சல்களை அனுப்புகிறது.

2) இன்ஃபோசிஸ் நிறுவனம் ஊழியர்களின் வேலை நேரத்தை எவ்வாறு கண்காணிக்கிறது?

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு தானியங்கி அமைப்பைக் கொண்டுள்ளது. இது வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தைக் கண்காணித்து, அதிக நேரம் வேலை செய்தால் எச்சரிக்கை மின்னஞ்சலை அனுப்பும்.

3) இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு எவ்வாறு உதவும்?

இந்த நடவடிக்கை ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்குவதன் மூலம் அவர்களின் நலனைப் பாதுகாக்கும்.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Read also : ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை – என்ன நடந்தது? ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை (Apple Hey Siri Issue)

Key Insights & Best Takeaways

Infosys is sending automated warnings to employees working over 9 hours and 15 minutes daily to promote work-life balance and address health concerns like stress. This move, contrasting with earlier calls for longer workweeks, highlights a shift towards employee well-being and sustainable productivity in the Indian IT sector.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *