வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!

"வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை – WhatsApp Scam Mistakes Tamil 2025"

வாட்ஸ்அப் மோசடி 2025 : இன்றைய தொழில்நுட்பக் காலகட்டத்தில் வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. நண்பர்களுடன் உரையாடுவது முதல் பணம் அனுப்புவது வரை  வாட்ஸ்அப் ஃபீச்சர்கள் (WhatsApp Features) வளர்ந்து விட்டன. ஆனால், இது மோசடி செய்பவர்களுக்கும் வசதியாக மாறி வருகிறது. 

உங்கள் பணம், தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், இந்த மோசடிகளைப் பற்றித் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்த மோசடிகள் எப்படி நடக்கிறது? அதிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.

இந்தப் பதிவில்,

  • வாட்ஸ்அப் மோசடி எவ்வாறு நடைபெறுகிறது?  
  • WhatsApp Scam 2025.
  • வாட்ஸ்அப் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
  • வாட்ஸ்அப் மோசடி குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்தல். 
  • FAQs.

ஆகிய தகவல்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

WhatsApp Scam 2025

"சந்தேகமான லிங்குகள் – WhatsApp Fraud Tamil 2025"
“சந்தேகமான லிங்குகள் மூலம் மோசடி”

1) வாட்ஸ்அப் மோசடி எவ்வாறு நடைபெறுகிறது?

வாட்ஸ் அப் மோசடிகள் காலப்போக்கில் எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொண்டால், தற்போதைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு உதவியாக இருக்கும். 

A) ஆரம்பக்கட்ட மோசடிகள்

ஆரம்பக் காலத்தில், மோசடி செய்பவர்கள் எளிமையான வழிகளைப் பயன்படுத்தி ஏமாற்றினார்கள். அதாவது, பொய்யான தகவல்களைச் சொல்லி மக்களை நம்ப வைப்பது.

வைரஸ் இணைப்புகளை அனுப்பி தொலைபேசிகளைப் பாதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள்.

“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!” 2025 புதிய விதிகள் – Indian Citizens Daily Life Changes

B) வைரஸ் பரவல் 

வாட்ஸ்அப்-பில் வரும் சில எளிமையான இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் தொலைபேசியில் வைரஸ் பரவும். இந்த வைரஸ்கள், உங்கள் தொலைபேசியின் வேகத்தைக் குறைத்து, செயல்திறனைப் பாதிக்கும்.

மேலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களான புகைப்படங்கள், வீடியோக்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவை திருடப்படவும் வாய்ப்பு உள்ளது.  

C) நவீன மோசடிகள் 

நவீன மோசடிகள் மிகவும் சிக்கலானதாக இருந்தன. அவை மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் வகையில் இருந்தன. இதன் மூலம் மோசடி செய்பவர்கள், பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு போலியான அடையாளங்களையும், நம்பகமான தகவல்களையும் பயன்படுத்துவர்.

Gift & Lottery Scams – பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள்

வாட்ஸ்அப் OTP மோசடி எச்சரிக்கை – Tamil WhatsApp OTP Scam 2025"
“OTP-ஐ பகிர வேண்டாம்!”

i) மோசடி எப்படி நடைபெறுகிறது?

மோசடி செய்பவர்கள், பிரபலமான நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, “நீங்கள் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்!” அல்லது “உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு காத்திருக்கிறது!” என்பது போன்ற போலிச் செய்திகளை அனுப்பி, உங்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்.

அவர்கள் உங்களை அவசரப்படுத்தி, சிந்திக்காமல் பணம் செலுத்தவும், தகவல்களைப் பகிரச்  செய்யவும் முயற்சிப்பார்கள்.

உதாரணம்

“வாழ்த்துக்கள்! நீங்கள் ரூ. 50,000 பரிசு வென்றுள்ளீர்கள்! உங்கள் பரிசைப் பெற கீழே உள்ள link-ஐ கிளிக் செய்யவும்.” 

ii) பாதுகாப்பு நடவடிக்கைகள் 

அறியாத நபர்களிடமிருந்து வரும் பரிசு அல்லது லாட்டரி செய்திகளைத் தவிர்ப்பது நல்லதாகும். மேலும், எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன்பு, அந்தத் தகவலின் நம்பகத்தன்மையை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

சிறந்த 5G பட்ஜெட் போன்கள் 2025 – Best 5G Smartphones! 2025-ல் சிறந்த 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் | Best 5G Budget Smartphones in 2025

போலி வேலை வாய்ப்பு மோசடிகள்

i) மோசடி எப்படி நடைபெறுகிறது?

மோசடி செய்பவர்கள், “அதிக சம்பளம், எளிய வேலை மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்” போன்றவற்றைச் சொல்லி மக்களை ஈர்ப்பார்கள். 

அவர்கள் நம்பகமான நிறுவனங்களாக நடித்துத் தொடர்பு கொண்டு, உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் (ஆதார், பாஸ்போர்ட், பேங்க் விவரங்கள்) கேட்கலாம் அல்லது பணம் செலுத்துமாறு சொல்லலாம்.  

உதாரணம்

“நீங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து மாதம் ரூ. 30,000 சம்பாதிக்கலாம்! விரைவாகப் பதிவு செய்ய ரூ. 500 செலுத்துங்கள்.”  

ii) பாதுகாப்பு நடவடிக்கைகள்

அறியாத நிறுவனங்களிடம் இருந்து வரும் வேலை வாய்ப்புகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், உண்மையான வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் எந்தவிதக் கட்டணமும் கேட்காது.

வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொண்டு விண்ணப்பிக்கவும்.

மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு – 10 பயனுள்ள டிப்ஸ்! மொபைல் பேட்டரி சேமிப்பு டிப்ஸ் - Mobile Battery Saving Tips

வாட்ஸ்அப் மோசடி 2025 Fake Loan Scams – போலிக் கடன் மோசடி

i) மோசடி எப்படி நடைபெறுகிறது?

மோசடியாளர்கள், உடனடிக் கடன் அல்லது நிதி உதவி வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவார்கள்.

அவர்கள், “குறைந்த வட்டி, ஆவணங்களின்றி கடன்” போன்றவற்றைக் கூறி, உங்கள் பேங்க் விவரங்கள், OTP, அல்லது பணம் செலுத்துமாறு வற்புறுத்துவார்கள்.

உதாரணம்

“உங்களுக்கு உடனடிக் கடன் ரூ. 1,00,000 கிடைக்கிறது! அதுவும் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. உங்கள் ஆதார் மற்றும் PAN பதிவு செய்தால் உடனடியாக நிதி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். கீழே உள்ள link-ஐ கிளிக் செய்யவும்!”  

Best iPhone models 2025 – Top 5 லிஸ்ட் ரெடி! 2025 சிறந்த ஐபோன் மாடல்கள் பட்டியல் | Best iPhone Models 2025 Top 5 List in Tamil

ii) பாதுகாப்பு நடவடிக்கைகள்

அறியாத நபர்களிடம் இருந்து கடன் வாங்குவது அல்லது நிதி உதவிகளைத் தவிர்ப்பது நல்லது.

மேலும், எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன்பு, அந்தத் தகவலின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொண்டு செலுத்துவது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

D) போலி வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடிகள்

i) மோசடி எப்படி நடைபெறுகிறது?

மோசடியாளர்கள், வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் போல நடித்து, உங்கள் கணக்குத் தகவல்கள், OTP, PIN போன்றவற்றைக் கேட்கலாம். அவர்கள், உங்களின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் எனக் கூறி, உங்கள் தகவலைப் பகிரச் செய்ய முயற்சிப்பார்கள். 

உதாரணம் 

“உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மீண்டும் செயல்பட கீழே உள்ள OTP-ஐ உள்ளிடவும்.”  

ii) பாதுகாப்பு நடவடிக்கைகள்

வங்கிகள், உங்கள் OTP, PIN, CVV போன்ற தகவல்களை ஒருபோதும் கேட்காது. எனவே, சந்தேகமான அழைப்புகள், மெசேஜ்கள் ஏதேனும் வந்தால், அதற்குப் பதில் அளிக்காமல், வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். மேலும், எந்த ஒரு தனிப்பட்ட தகவலையும் வாட்ஸ்அப் மூலம் பகிர வேண்டாம்.

WhatsApp Scam Safety Tips வாட்ஸ்அப் மோசடி பாதுகாப்பு வழிகள்!

"போலி வாட்ஸ்அப் கணக்குகள் – Tamil Scam Awareness 2025"
“போலி கணக்குகளால் வரும் ஆபத்து”

வாட்ஸ்அப் மோசடி 2025-ல் மோசடி செயல்கள் அதிகமாக நடந்து கொண்டு இருப்பதால், மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது நல்லதாகும். இதன் மூலம், ஆன்லைனில் ஏற்படும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

A) அறியாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளைத் தவிர்த்தல் 

இன்றைய காலத்தில், மோசடியாளர்கள் அறியாத எண்களில் இருந்து அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்து, உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். வாட்ஸ்அப் குழுக்களில் (Whatsapp Groups) இருந்து வரும் அறியாத நபர்களின் தனிப்பட்ட செய்திகளும் ஆபத்தானதாக இருக்கலாம்.

அதனால், எந்தவொரு அறியாத எண் அல்லது சந்தேகமான மெசேஜ்கள் வந்தால், அதைத் திறப்பதற்கும், பதிலளிப்பதற்கும் முன்பாக அது நம்பகமானதா என்பதைச் சரிபாரிக்க வேண்டும். இதனால் மோசடிகள் மற்றும் தகவல் திருட்டுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

B) தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருத்தல்

இணையத்தில் உங்கள் கடவுச்சொற்கள் (Passwords), OTP, ஆதார், பான் கார்டு போன்ற தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ்அப் அல்லது எந்த சமூக ஊடகங்களிலும் பகிர வேண்டாம். ஏனென்றால் மோசடியாளர்கள், இந்தத் தகவல்களைத் திருடி, உங்கள் வங்கிக் கணக்கு அல்லது சமூக ஊடகங்களை முடக்கலாம்.

வங்கிகள் அல்லது அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் எப்போதும் OTP அல்லது கடவுச்சொற்களைக் கேட்க மாட்டார்கள். எனவே, எந்தத் தகவலும் பகிர்வதற்கு முன்பு பாதுகாப்பாக இருப்பது நல்லது.

2025 சிறந்த Budget Smartphones – Top picks under 10,000! 2025 சிறந்த Budget Smartphones பட்டியல் | Best Budget Phones Under ₹10,000 in 2025

போலி இணைப்புகள் – Avoid Fake Links!

மோசடியாளர்கள், வங்கி, லாட்டரி, பரிசு, அல்லது அரசு இணையதளம் போல் இருக்கும் போலி இணைப்புகளை அனுப்பலாம். நீங்கள் அந்த இணைப்புகளை கிளிக் செய்தால், உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.

அதனால், எந்த இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன்பு, அது நம்பகமானதா? அதன் URL சரியாக உள்ளதா? என்ற தகவல்களைச் சரிபாரிக்க வேண்டும். வலைத்தளத்தின் பாதுகாப்புச் சான்றிதழை (SSL certificate) சரிபார்க்கவும். அறியாத அல்லது சந்தேகமான இணையதள இணைப்புகளைத் தவிர்ப்பது உங்கள் பாதுகாப்பிற்கு நல்லது.

D) வாட்ஸ்அப் மோசடி 2025 – பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துதல்

i) இரண்டு-படி சரிபார்ப்பு (Two-Step Verification)
வாட்ஸ்அப்-ன் இரண்டு-படி சரிபார்ப்பு அம்சத்தை செயல்படுத்தி, வலுவான PIN எண்ணைப் பயன்படுத்துவதால், உங்கள் கணக்கு பாதுகாப்பாக  இருக்கும். இது மோசடியாளர்கள் உங்கள் கணக்கை முடக்குவதைத் தடுக்கிறது.

ii) புதுப்பித்தல் (Updates)
“உங்கள் வாட்ஸ்அப் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா?” என்பதை சரிபார்க்கவும். மேலும், தானியங்கி புதுப்பித்தலை (automatic updates) செயல்படுத்துவது, புதிய பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்க உதவுகிறது.

சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் – Report Suspicious Activities!

"வாட்ஸ்அப் மோசடி பாதுகாப்பு அமைப்புகள் – Tamil Privacy Guide 2025"
“தனியுரிமை அமைப்புகளை சரி பார்த்திடுங்கள்”

i) வாட்ஸ்அப் ஆதரவு
மோசடி, ஸ்பாம் (Spam) அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் ஏதேனும் நடந்தால், அதை வாட்ஸ்அப் ஆதரவு குழுவிற்குப் புகார் அளிக்கவும். புகார் செய்யும்போது, சந்தேகமான மெசேஜ்கள், எண்கள், ஸ்க்ரீன்‌ஷாட்கள் போன்ற ஆதாரங்களை வழங்குவது உதவியாக இருக்கும்.

ii) சைபர் கிரைமில் புகார் அளித்தல்
தவறான தகவலைப் பரப்புதல், மோசடி அல்லது ஆன்லைன் மோசடிகள் ஏதேனும் நடந்தால், சைபர் கிரைம் அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கவும். புகார் செய்யும்போது, தகவல் நடந்த தேதி, நேரம், மற்றும் ஆதாரங்களை வழங்குவது முக்கியம். இவ்வாறு புகாரளிப்பதன் மூலம், உங்களின் பாதுகாப்பையும், பிறரின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) – செல்வ மகள் திட்டம்! சுகன்யா சம்ரிதி யோஜனா – பெண்குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்

F) ஆட்டோ டவுன்லோட் வசதியைத் தவிர்த்தல்

i) தரவு பாதுகாப்பு
வாட்ஸ்அப்-பில் ஆட்டோ டவுன்லோட் (Auto Download) அம்சத்தை நிறுத்துவதன் மூலம், அறியாத ஃபைல்கள் (Files) அல்லது புகைப்படங்கள் தானாக பதிவேற்றம் ஆகாமல் பாதுகாப்பாக இருக்கும். தகவல் திருட்டு அல்லது மோசடியைத் தவிர்க்க, எந்த ஃபைலையும் (Files) திறப்பதற்கு முன் சரிபார்த்துக் கொள்வது நல்லதாகும்.

ii) சாதன பாதுகாப்பு (Device Security)
ஆட்டோ டவுன்லோடை (Auto Download) முடக்குவதன் மூலம், வைரஸ் மற்றும் மெல்வேர் (malware) தாக்குதல்களிலிருந்து உங்கள் கைபேசியைப் பாதுகாக்கலாம். தேவையில்லாத மற்றும் சந்தேகத்திற்கிடமான ஃபைல்களை நீக்கி, சாதனத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

புகாரளிக்கும் செயல்முறை – How to Report Scams?

இணையத்தில் மோசடி, வங்கிக் கணக்கு தகவல் திருட்டு, சமூக ஊடகத் தவறான பயன்பாடு, புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் வெளியே வருதல், வலைத்தள ஹேக்கிங் போன்றவற்றை சைபர் குற்றங்கள் என்று அழைக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால், உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும்.

A) செயல்முறை 
i) சைபர் கிரைம் ஹெல்ப்லைன் (1930)
உடனடி சைபர் குற்றங்கள் (மோசடி, பணப் பறிப்பு) ஏதேனும் நடந்தால், 1930 என்ற இலவச உதவி எண்ணிற்கு அழைக்கலாம். மிகவும் முக்கியமான விவரங்களை (நேரம், இடம், சம்பவம் நடந்த விதம்) சைபர் கிரைம் பிரிவினரிடம்தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

ii) சைபர் கிரைம் இணையதளம்ஆன்லைன் மூலம் புகார் அளிக்க விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளமான www.cybercrime.gov.in – இல் புகாரைப் பதிவு செய்யலாம். புகார் அளிக்கும் போது, மெசேஜ்கள், ஸ்கிரீன்ஷாட்கள், மின்னஞ்சல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை ஆதாரங்கள் போன்றவற்றைப் பதிவேற்ற (Upload) வேண்டும்.
சில முக்கியமான அல்லது தனிப்பட்ட தரவுகள் (Datas) கசியும் சம்பவங்கள் நடந்தால், நேரடியாக உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.

Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் வெற்றி கதை! Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் வெற்றி கதை | Deepinder Goyal Success Story in Tamil

B) புகாரளிப்பதன் முக்கியத்துவம்
i) குற்றத் தடுப்பு
குற்றவாளிகளை வெளியே கொண்டு வருவதற்கும், அவர்களைக் கைது செய்வதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கும்  புகாரளிப்பது அவசியம். இது மற்றவர்களும் மோசடியில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க உதவும்.

ii) பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, புகார் அளிப்பது அவசியம் ஆகும். அதிகமான புகார்கள் வந்தால், அரசாங்கமும், அதிகாரிகளும் தீவிரமாக செயல்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உதவலாம்.

வாட்ஸ்அப் மோசடி 2025 – WhatsApp Scam FAQs!

1) வாட்ஸ்அப் மோசடிகள் என்றால் என்ன?
வாட்ஸ்அப் மூலம் மக்களை ஏமாற்றி, அவர்களின் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது பிற உரிமைகளைத் திருடும் செயல்களே வாட்ஸ்அப் மோசடிகள் ஆகும்.

இவை பல்வேறு வடிவங்களில் நடக்கலாம். அதாவது போலி பரிசுச் செய்திகள், வேலை வாய்ப்பு மோசடிகள், கடன் மோசடிகள் போன்றவை.

2) வாட்ஸ்அப் மோசடிகள் காலப்போக்கில் எப்படி மாறி வந்துள்ளன?
ஆரம்பத்தில், மோசடிகள் எளிமையானவையாக இருந்தன, அதாவது, போலி செய்திகள் மற்றும் வைரஸ்களை பரப்புதல் போன்றவை. ஆனால், இப்போது மோசடிகள் மிகவும் சிக்கலானவையாக மாறிவிட்டன. அவை மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றன.

3) போலிப் பரிசு மற்றும் லாட்டரி மோசடிகள் எப்படி நடக்கின்றன?
மோசடி செய்பவர்கள் பிரபலமான நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, “நீங்கள் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்!” அல்லது “உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு காத்திருக்கிறது!” போன்ற போலிச் செய்திகளை அனுப்புவார்கள். பின்னர், பரிசு அல்லது பணத்தைப் பெற, பயனர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கேட்பார்கள்.

4) போலி வேலை வாய்ப்பு மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?
அறியாத நிறுவனங்களிடம் இருந்து வரும் வேலை வாய்ப்புகளைத் தவிர்க்கவும். ஏனென்றால், உண்மையான வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் எந்தவிதக் கட்டணமும் கேட்காது.

வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.

உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – 5 எளிய வழிகள்! உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – 5 எளிய வழிகள் | Weight loss tips – 5 easy ways in Tamil

5) போலிக் கடன் மற்றும் நிதி உதவி மோசடிகள் எவ்வாறு நடக்கின்றன?
மோசடியாளர்கள் உடனடிக் கடன் அல்லது நிதி உதவி வழங்குவதாகக் கூறி, குறைந்த வட்டி மற்றும் ஆவணங்களின்றி கடன் வழங்குவதாகக் கூறுவார்கள். அவர்கள் உங்கள் வங்கி விவரங்கள், OTP அல்லது பணம் செலுத்துமாறு வற்புறுத்துவார்கள்.

6) போலி வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடிகளை எப்படி அடையாளம் காண்பது?
வங்கிகள் உங்கள் OTP, PIN, CVV போன்ற தகவல்களை ஒருபோதும் கேட்காது. எனவே, சந்தேகமான அழைப்புகள் அல்லது செய்திகள் வந்தால், பதில் அளிக்காமல் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

7) வாட்ஸ்அப்-ல் வரும் போலி இணைப்புகளை எப்படித் தவிர்ப்பது?

எந்த இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன்பு, அது நம்பகமானதா, அதன் URL சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். வலைத்தளத்தின் பாதுகாப்புச் சான்றிதழைச் சரிபார்க்கவும். அறியாத அல்லது சந்தேகமான இணையதள இணைப்புகளைத் தவிர்க்கவும்.

8) வாட்ஸ்அப்-ல் பாதுகாப்பாக இருக்க என்ன பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்த வேண்டும்?

இரண்டு-படி சரிபார்ப்பு (Two-step verification) அம்சத்தை செயல்படுத்தவும் மற்றும் வலுவான PIN எண்ணைப் பயன்படுத்தவும். வாட்ஸ்அப்பை எப்போதும் புதுப்பித்து (Update) வைத்திருக்கவும்.

9) வாட்ஸ்அப் மோசடியால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930-ஐ அழைக்கவும் அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளிக்கவும். அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.

10) ஆட்டோ டவுன்லோட் வசதியை முடக்குவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும்?
ஆட்டோ டவுன்லோடை முடக்குவதன் மூலம், அறியாத ஃபைல்கள் தானாக பதிவேற்றம் ஆகாமல் தடுக்கலாம். இது வைரஸ் மற்றும் மெல்வேர் (Malware) தாக்குதல்களிலிருந்து உங்கள் கைபேசியைப் பாதுகாக்கும்.

தொழில்நுட்பம் வளர வளர, புதிய மோசடிகளும் உருவாகிக் கொண்டு இருக்கும். எனவே, மோசடிகள் குறித்து விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகும். இதன் மூலம் ஆன்லைனில் நடக்கும் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways!

  • WhatsApp Scam 2025 – Advanced Fraud Tactics Exposed
  • Cybercriminals use fake links, OTP theft, and phishing attacks – Stay alert
  • Never click unknown links or share personal data – Your privacy is at risk
  • Fake loan, lottery, and financial aid scams are increasing – Identify and avoid
  • Secure your WhatsApp with 2FA, privacy lock, and strong security measures
  • Report and block suspicious accounts immediately to prevent data breaches

Master WhatsApp safety, outsmart scammers, and stay secure in 2025

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *