- ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர் : நம்மில் பல பேருக்கு வேலை செய்வதை விட ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பதில் தான் அதிக ஆர்வம் இருக்கும். குறிப்பாக “குறைந்த முதலீட்டில் அதிக லாபம்” தரக்கூடிய ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெறவேண்டும்!” என்பதுதான் பெரும்பாலான மக்களின் கனவாக இருந்து வருகிறது.
- ஆனால் குடும்ப சூழல், வறுமை, தகுந்த வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் சிலருக்கு அது அவர்கள் மனதிலேயே தங்கிவிடுகிறது.
- ஆனால், நம்மைப் போல் இருக்கும் பல பேர் பெரிய அளவில் சாதித்துள்ளார்கள் என்பதையும், எப்படி சாதித்துள்ளார்கள், என்ன வழிமுறைகளை பின்பற்றியுள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொண்டால், நாம் நிச்சயம் தொழிலை தொடங்க உறுதுணையாக இருக்கும்.
- ஆம், நம்மைப் போல் இருக்கும் மக்களில் சிலர் அல்ல, பலர் தங்கள் நம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றால் தான் சிறு தொழில்களைப் பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.
- உதாரணத்திற்கு, ஒரு சிறிய டீக்கடையில் தொடங்கி இன்று பல ஊர்களில் கிளைகளை வைத்து பெரிய கடைகளாக வளர்ந்துள்ள கதைகள், வீட்டில் ஊறுகாய் விற்று வெளியூரில் தங்களுடைய பிராண்டை நிலை நாட்டிய பெண்களின் கதைகள், கையால் செய்த பொருட்களை விற்று உலகமெல்லாம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த கலைஞர்களின் கதைகள் – போன்ற உண்மையாக நடந்த நம் நாட்டின் சிறு தொழில் வெற்றியாளர்களின் வாழ்க்கை கதை திகழ்கிறது. இது நம்மை போற்ற தொழில் தொடங்க வாய்ப்பு தேடும் அனைவருக்கும் முன் உதாரணமாக அமைந்து நம்மை வழிநடத்தவும் செய்கிறது.
- இந்த சிறிய தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. இது போன்ற கதைகளை நாம் தெரிந்து கொண்டால் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படும்.
- அதற்காக இந்தப் பதிவில் ஒரு சில தன்னம்பிக்கை மனிதர்கள் கடந்து வந்த பாதையைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இவர்களின் வெற்றிக் கதைகள் நமக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதோடு, உங்களை வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாற்ற கண்டிப்பாக உதவும். வாருங்கள் அவர்களை பார்ப்போம்!
ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர்
பாஸ்கரின் புரன் போளி
- பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான புரன் போளியைத் தனது முக்கிய விற்பனைப் பொருளாகக் கொண்டு பாஸ்கர் என்பவர் உருவாக்கிய இந்த சிறிய கடை தான் இன்று கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறது.
- தெருவில் கடை வைத்து போளி விற்ற ஒருவரின் கடின உழைப்பும், தளராத நம்பிக்கையும் இன்று அவரை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது.
- Bhaskar’s Puranpoli Ghar – என்ற பெயர் கர்நாடகாவில் மட்டுமில்லாமல், மகாராஷ்டிராவிலும் பிரபலமாக இருந்து வருகிறது. இவரின் வெற்றிக் கதையின் ஒவ்வொரு கட்டத்தையும் விரிவாகப் பார்ப்போம்.

A) ஆரம்ப வாழ்க்கை
- 2015-ஆம் ஆண்டில் பாஸ்கரின் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்துள்ளது. குடும்ப சூழல் காரணமாக அவர் பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளார்.
- 8-க்கும் மேம்பட்ட வேலைகளைச் செய்தும், அவருடைய குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படவில்லை. இந்த சூழலில் தனக்கென ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்துள்ளது.
- ஏற்கனவே உணவுத் தயாரிப்பில் ஆர்வம் கொண்ட அவர் மனதில், போளி செய்து விற்றால் என்ன என்ற எண்ணம் தோன்ற அவர் அதற்க்கு செயல் வடிவம் கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
B) பாஸ்கரின் புதிய தொடக்கம்
- பாஸ்கர் தன்னுடைய சிறிய முதலீட்டில், வீட்டிலேயே போளிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளார். தினமும் புதிய போளிகளைச் செய்து ஒரு தூக்கு வாளியில் சுமந்து தெருத்தெருவாக சென்று விற்பனை செய்துள்ளார்.
- அவருடைய போளிகளின் தரம் மற்றும் சுவை மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவரின் விற்பனைக்கு மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பக் கட்டத்தில் பாஸ்கர் தன்னுடைய போளிகளின் தரத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
- சிறந்த பொருட்களைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் போளிகளைத் தயாரித்துள்ளார். அதுவே அவருடைய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
C) தெருவோரக் கடைகளில் சுடச்சுட போளி
- போளிக்குக் கிடைத்த வரவேற்பு பாஸ்கருக்கு ஊக்கம் அளித்துள்ளது. தெருவின் ஒரு மூலையில் சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு சுடச்சுட போளிகளைத் தயாரித்து விற்கத் தொடங்கியுள்ளார்.
- அவருடைய கடின உழைப்பைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும், வியாபாரிகளும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
- வாடிக்கையாளர்கள் அவருடைய கடையைத் தேடி வந்து போளிகளை வாங்கிச் சென்றுள்ளனர். இந்தக் கட்டத்தில் பாஸ்கர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார்.
D) கனவை நனவாக்கிய நெகிழ்ந்த தருணம்
- தெருவோரக் கடையில் கிடைத்த வெற்றியின் மூலம் பாஸ்கருக்குத் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. ஒரு கடையைத் திறக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது.
“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!”
- பெங்களூரில் உள்ள டாக்டர் டி.வி.ஜி சாலையில் தனது முதல் கடையை Bhaskar’s Puranpoli Ghar என்ற பெயரில் திறந்துள்ளார்.
- இந்தப் புதிய கடை பாஸ்கரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
E) வியாபாரத்தின் விரிவாக்கம்
- கடையைத் திறந்த பிறகு பாஸ்கரின் வியாபாரம் வேகமாக வளர தொடங்கியுள்ளது.
- அப்போது போளியின் பல்வேறு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனிப்பு மற்றும் கார போளிகளைத் தயாரித்துள்ளார்.
- அது மட்டுமில்லாமல், போளியுடன் சேர்த்து தின்பண்டங்கள், ஊறுகாய், அப்பளங்கள், மசாலா வகைகள், ஸ்வீட்ஸ் மற்றும் உலர் பழங்கள் போன்ற பல பொருட்களையும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
- இதனால் அவருடைய கடை ஒரு முழுமையான உணவு விற்பனை நிலையமாக மாறியுள்ளது. இந்த விரிவாக்கம் அவருடைய வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது.
F) உருவாகிய புதிய பிராண்ட் (Brand)

- ஆரம்பக் கட்டத்தில் Bhaskar’s Puranpoli Ghar என்ற பிராண்டை உருவாக்க பாஸ்கர் அதிக கவனம் செலுத்தியுள்ளார். போளிகளின் தரம் மற்றும் சுவையில் எந்தவித சமரசமும் செய்யாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
- கடையில் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உறுதி செய்துள்ளார். பணியாளர்களின் பணிவும், வாடிக்கையாளர்களை அணுகும் விதமும் அவருடைய பிராண்டின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
G) கர்நாடகா முதல் மும்பை வரை கிளை
- பாஸ்கரின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரை மேலும் உயரத்திற்குக் கொண்டு சென்றது. கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் கிளைகளைத் திறந்துள்ளார். பின்பு மகாராஷ்டிராவிலும் தன்னுடைய கிளைகளை நிறுவியுள்ளார்.
- இன்று பாஸ்கரின் நிறுவனம் 2 மாநிலங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 10-க்கும் மேற்பட்ட கடைகளுடன் மாதத்திற்கு ரூ. 1.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார். வருடத்திற்கு சராசரியாக ரூ. 18 கோடி வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
H) வெற்றியின் ரகசியம்
- பாஸ்கரின் வெற்றிக்குக் காரணம் அவருடைய கடின உழைப்பும், விடாமுயற்சியும்தான். எந்த நிலையிலும் அவர் தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்கவில்லை.
- பல தடைகள் வந்தாலும் அவற்றை தடையாக நினைக்காமல் தொடர்ந்து முன்னேறியுள்ளார். தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கு ஏற்ப தனது வியாபாரத்தை மாற்றி அமைத்துள்ளார்.
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) – பயிர் காப்பீடு திட்டம்!
- தரமான பொருட்களைப் பயன்படுத்தி சுவையான உணவை வழங்கியுள்ளார். இவை அனைத்துமே அவருடைய வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
I) பாஸ்கரின் கதையால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
- வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும், மனம் தளராமல் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று பாஸ்கரின் கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
- இவரின் வாழ்க்கைக் கதை புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஒரு வெளிச்சமாக அமைந்து வழிநடத்தும்.
ரூ.2500 முதலீட்டில் தொடங்கிய சிறந்த தொழில்!
லலிதா பாட்டில்

- வெறும் “ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர்” – ஒரு சிறிய உணவுத் தொழிலைத் தொடங்கி, இன்று மும்பையில் பல கிளைகளுடன் பிரம்மாண்டமான உணவு சாம்ராஜ்யத்தை நிறுவிய சிங்கப் பெண் தான் லலிதா பாட்டில் என்பவர்.
- கர்சி அதவன் என்ற இவருடைய பிராண்ட், சுவை மிகுந்த வீட்டு உணவிற்குப் பெயர் பெற்றது.
- லலிதா பாட்டிலின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு அவரின் வெற்றிக்குப் படிக்கல்லாக இருந்துள்ளது. சவால்கள் பல வந்தாலும், அவற்றைத் தகர்த்துவிட்டு தன்னுடைய தொழில் கனவை நனவாக்கிய லலிதா பாட்டிலின் பயணத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
A) இளமைப் பருவம்
- லலிதா பாட்டில், இளங்கலைப் பிரிவில் இயற்பியல் பட்டம் பெற்றுள்ளார். படிப்பு முடிந்தவுடன் தொழில் தொடங்க வேண்டும் என்னும் கனவு அவருக்கு இருந்துள்ளது.
- ஆனால், 20 வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆனாலும், அது அவருடைய தொழில் கனவுக்குத் தடையாக இருக்கவில்லை.
- நிதி ரீதியாக சுயமாக நிற்க வேண்டும் என்றும், தனக்கென ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றும் அவர் உறுதியாக இருந்து வந்துள்ளார்.
“அடல் பென்ஷன் யோஜனா” மாதம் ₹5000 வரை ஓய்வூதியம்!
B) குடும்ப சூழ்நிலை
- லலிதா பாட்டிலின் கணவர் நடத்தி வந்த கேஸ் ஏஜென்சியை அரசு கொள்முதல் செய்ததால், அவருடைய கணவருக்கு வருமானம் இல்லாமல் போனது. குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு லலிதா பாட்டில் ஒரு பார்மசியில் (Pharmacy) வேலை செய்துள்ளார்.
- குடும்பத்திற்காக வருமானம் ஈட்டினாலும், அவருடைய தொழில் கனவு அவர் மனதில் மறைந்து போகவில்லை. ஏதாவது ஒரு சிறு தொழில் செய்ய வேண்டும் என்று அவர் தொடர்ந்து சிந்தித்து வந்துள்ளார்.
C) வீட்டு உணவு சேவை
- லலிதா பாட்டிலின் கையில் வெறும் ரூ. 2,500 மட்டுமே இருந்துள்ளது. மும்பையில் பேச்சிலர்கள் (Bachelors) மற்றும் கல்லூரி மாணவர்கள் வீட்டு உணவுக்காக ஏங்குவதை அவர் உணர்ந்துள்ளார்.
- அதற்காக வீட்டிலேயே சமைத்து அவர்களுக்கு உணவு வழங்கலாம் என்ற ஒரு யோசனை வந்துள்ளது. கையில் இருந்த ரூ. 2500-யில் ரூ. 2,000-ஐ உணவு தயாரிப்பதற்காக செலவு செய்துள்ளார். மீதமுள்ள ரூ. 500-ஐ விளம்பரத்திற்காக பிட் நோட்டீஸ்கள் அச்சிடப் பயன்படுத்தி உள்ளார்.
D) வாடிக்கையாளர்களின் ஆதரவு
- லலிதா பாட்டில் தயாரித்த வீட்டு உணவு, மாணவர்கள் மற்றும் பேச்சிலர்களை மிகவும் கவர்ந்துள்ளது. லலிதாவின் கைப் பக்குவம் அவர்களை மீண்டும் மீண்டும் அவருடைய இடத்திற்கு அழைத்து வந்துள்ளது.
- சிறிது காலத்திலேயே அவருடைய உணவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வருமானமும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. இது அவருக்கு மேலும் ஊக்கமளித்துள்ளது.
E) திருப்புமுனை
பிரிட்டானியா ஸ்டார்ட் அப் (Start up) போட்டி:
- பிரிட்டானியா நிறுவனம் நடத்திய ஸ்டார்ட் அப் (Start up) போட்டியில் லலிதா பாட்டில் கலந்து கொண்டுள்ளார். அவருடைய முயற்சியையும், திறமையையும் பார்த்து போட்டியின் நடுவர்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
- அவர் போட்டியில் வெற்றி பெற்று ரூ. 7 லட்சம் பரிசாக வென்றுள்ளார். இந்தப் பரிசுத்தொகை அவருடைய தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.
F) உணவு சாம்ராஜ்யத்தின் தொடக்கம்

ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர்
- பிரிட்டானியா போட்டியில் கிடைத்த பரிசுத் தொகையை வைத்துக்கொண்டு தானேவில் (Thane) கர்சி அதவன் என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கியுள்ளார்.
- அதில் பாரம்பரிய மகாராஷ்டிர உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். சுவையான உணவும், சிறந்த சேவையும் அவருடைய உணவகத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
- இதைத் தொடர்ந்து, கர்சி அதவன் மும்பையில் பல பகுதிகளில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்துள்ளது.
G) பல கிளைகளுடன் வலம் வரும் கர்சி அதவன்:
- இன்று பல கிளைகளுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் கர்சி அதவன், இன்று மும்பையில் ஒரு பிரபலமான உணவு பிராண்டாக வளர்ந்துள்ளது.
- லலிதா பாட்டில், இன்று பல கிளைகளுடன் மாதத்திற்கு ரூ. 8 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். அது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார்.
H) லலிதா பாட்டில் வெற்றியின் ரகசியம்
- “ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர்” ஆன லலிதா பாட்டிலின் இந்த வெற்றிக் கதை பல பெண்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும். அவர் உணவின் தரத்தில் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார்.
- மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளார். அது மட்டுமில்லாமல், எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய நோக்கத்தில் இருந்து விலகாமல் உழைத்துள்ளார்.
- இவைதான் அவரின் வெற்றிக்குக் காரணங்களாக அமைந்தது. குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு சிறு தொழில், கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் எப்படி பெரிய வெற்றியைப் பெற்றது என்பதற்கு லலிதா பாட்டிலின் கதை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.
“ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர்” : இந்தப் பதிவில் நாம் பார்த்த பாஸ்கர் மற்றும் லலிதா பாட்டில் இருவருமே சாதாரண மக்களில் இருந்து வந்து, தங்களுடைய கடின உழைப்பாலும், திறமையாலும், தன்னம்பிக்கையாலும் இன்று பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்.
குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய தொழில், கடின உழைப்பு மற்றும் நம்பிக்கை மூலம் எப்படி ஒரு பெரிய சாம்ராஜ்யமாக மாறியுள்ளது என்பதற்கு இவர்களின் கதைகள் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்.
சீனாவின் மிகப்பெரிய அணை – இந்தியாவுக்கு ஆபத்தா?
இவர்களின் பயணம் பலருக்கு ஊக்கம் அளித்திருக்கும் என்று நம்புகிறோம். சிறுதுளிப் பெருவெள்ளம் என்பது போல், ஒரு சிறிய முயற்சி, அதை தொடர்ந்து செய்து வரும் போது பெரிய வெற்றியில் முடியும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
எனவே, உங்களின் கனவுகளை நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருங்கள், உங்கள் தொடர் முயற்சி உங்களை கண்டிப்பாக வெற்றியடைய செய்யும்.. உங்கள் நோக்கம் வெற்றியடைய எங்களுடைய வாழ்த்துக்கள்! எங்களுடைய இந்த பதிவு உங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் தரும் என நம்புகிறோம், இதுபோன்ற பல சிறந்த தகவல்களை பெற எங்களுடன் இணைந்திருங்கள்.. (tnnewsbox.com)
ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர் – FAQs
1) சிறு தொழில் தொடங்க என்ன தேவை?
சிறு தொழில் தொடங்குவதற்கு முக்கியமாக தன்னம்பிக்கை, தொடர் உழைப்பு, ஒரு நல்ல யோசனை, மற்றும் சிறிய முதலீடு.
2) பாஸ்கரின் புரன் போளி எப்படி வெற்றி பெற்றது?
தரம், சுவை, வாடிக்கையாளர் சேவை, மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஆகியவற்றால் தான் பாஸ்கரின் புரன் போளி வெற்றி பெற்றது.
3) லலிதா பாட்டிலின் உணவு சாம்ராஜ்யத்தின் ரகசியம் என்ன?
சுவையான வீட்டு உணவு, தரம், விடாமுயற்சி, மற்றும் தன்னம்பிக்கைதான் அவருடைய உணவு சாம்ராஜ்யத்தின் ரகசியங்கள் ஆகும்.
4) சிறு தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வாறு உதவுகின்றன?
வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்தல் போன்றவை தான் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகின்றன.
5) இந்த வெற்றிக் கதைகள் நமக்கு என்ன உணர்த்துகின்றன?
கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால், சிறு துளி பெரு வெள்ளமாக மாற்றம் அடைந்தே ஆகும்.
நியூட்ரினோ ஆராய்ச்சி 2025 – முடிவுக்கு வருமா?
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
Key Insights & Best Takeaways
Two ordinary individuals turned into crorepatis with just a ₹2500 investment, proving that smart financial planning and timely stock market decisions can lead to massive success. Their journey highlights the power of long-term investing and discipline in wealth building. Even small savings, when invested wisely, can unlock life-changing returns. This real-life story inspires every common man to explore smart investment opportunities.