- ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) : விவசாயம் என்பது நம் வாழ்க்கையின் ஆதாரமாகவும், இந்தியாவின் முதன்மைத் தொழிலாகவும் (Primary sector) இருந்து வருகிறது. பல கிராமங்களில் மக்கள் விவசாயத்தைத் தங்களுடைய உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர்.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உணவு உற்பத்திக்கும் விவசாயம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், என்னதான் விவசாயம் ஒரு முதன்மை வாய்ந்த தொழிலாக இருந்தாலும், இந்தத் தொழிலை செய்து வரும் விவசாயிகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
- பயிர்கள் வளர்ந்தாலும், பல நேரங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள், மழை இல்லாமல் போவது, கனமழை, புயல், காற்று மற்றும் பயிர் நோய்கள் ஆகியவற்றின் காரணங்களால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
- விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசும் அதற்கு ஏற்றவாறு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- அந்த வகையில், விவசாயிகளின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana – PMFBY) என்னும் திட்டத்தை 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்தப் பதிவில்,
- PMFBY திட்டம் என்றால் என்ன?
- PMFBY திட்டத்தின் நோக்கங்கள்.
- PMFBY-யின் காப்பீட்டுப் பாதுகாப்பு.
- PMFBY திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரீமியம்.
- PMFBY திட்டத்தில் பங்கேற்கும் காப்பீட்டு நிறுவனங்கள்.
- விவசாயிகள் பெறும் நன்மைகள்.
- முன்னோக்கிய பாதை.
- விண்ணப்பிக்கும் முறை.
- FAQs.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY)

ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இது விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான காப்பீட்டுத் திட்டம். விவசாயிகளின் பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்கி, அவர்களின் வருமானத்தையும் வாழ்க்கையையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதே இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
இந்தத் திட்டம் ஒரு நாடு – ஒரு திட்டம் (One Nation – One Scheme) என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இந்தப் புதியத் திட்டம்,
- மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் (Modified National Agricultural Insurance Scheme – MNAIS).
- வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் (Weather-based Crop Insurance Scheme).
- தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் (National Agricultural Insurance Scheme – NAIS).
ஆகிய 3 பழைய திட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்தப் பழைய திட்டங்களில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி இந்தப் புதியத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் (Department of Agriculture, Cooperation and Farmers’ Welfare) ஆகியவை நிர்வகித்து வருகிறது. இதை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் (Insurance Companies) இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
இந்தத் திட்டம் விவசாயிகள் விதை போட்ட தினத்திலிருந்து அறுவடை முடிந்த பிறகும் பயிருக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதற்கு நிவாரணம் வழங்கும் வரை முழுவதையும் கவனித்து வருகிறது.
எப்படி சேதம் ஏற்படலாம்?
- புயல், வெள்ளம், மிகுந்த மழை, இடி மின்னல் போன்ற இயற்கைப் பேரழிவுகள்.
- பயிர் நோய்கள் மூலம் பயிர்கள் பாதிக்கப்படுதல்.
- பூச்சிகள் வந்து பயிர்களை அழித்தல்.
- அறுவடை முடிந்த பிறகும் கூட, மழை காரணமாக பயிர் சேதமடைதல்.
இந்த எல்லா சூழ்நிலைகளிலும், விவசாயிக்கு இழப்பீடு (Insurance Claim) தருவதற்கு இந்தத் திட்டம் உதவி வருகிறது.
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் நோக்கங்கள்

பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் ஒரு நாடு, ஒரு பயிர், ஒரு காப்பீட்டுக் கட்டணம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பல வகையான ஆதரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் முக்கியமான நோக்கங்களைப் பற்றிப் பின்வருமாறு பார்ப்போம்.
A) விவசாயிகளுக்கு மலிவான காப்பீடுகளை வழங்குதல்:
- இயற்கை சீற்றங்கள் (புயல், வெள்ளம், வறட்சி), பூச்சிகளின் தாக்குதல், பயிர் நோய்கள் ஆகியவற்றால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாக வாய்ப்பு உள்ளது.
- அந்த நேரத்தில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் இந்தக் காப்பீட்டு திட்டம் உதவி வருகிறது. இதற்காக விவசாயிகள் மிகக் குறைந்த தொகையை (Premium) செலுத்தினாலே போதும்; மீதமுள்ள தொகையை அரசே வழங்கிவிடும்.
- இதனால் நஷ்டம் வந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்காமல் இருக்கும்.
B) அனைத்து நிலங்களையும் காப்பீட்டில் சேர்த்தல்:
- பயிரிட்ட அனைத்து நிலங்களையும் இந்தக் காப்பீட்டில் சேர்ப்பதே அரசின் நோக்கமாகும். இதனால் சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
- மேலும், அனைத்து விவசாய நிலங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் இயங்கி வருகிறது.
மீன ராசி பலன் 2025 : சதுர்கிரக யோகத்தால் பண வரவு!
C) விவசாயிகளின் வருமானத்தை நிலையாக வைத்துக் கொள்ள உதவுதல்:
- விவசாயத்தில் சில நேரங்களில் நல்ல லாபம் வந்தாலும், சில நேரங்களில் நஷ்டம் ஏற்படும்.
- ஆனால், நஷ்டம் ஏற்பட்டாலும் அதன் காப்பீட்டுத் தொகை (Claim) கிடைப்பதன் மூலம் வருமான இழப்பு சரி செய்யப்படும். இதனால் விவசாயிகளின் எதிர்காலம் பாதிப்படையாமல் இருக்கும்.
விவசாயக் கடன்கள் பெறுவதை எளிதாக்குதல்
- விவசாயிகள் இந்தக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தால், வங்கியில் இருந்து வேளாண் கடன்களைப் பெறுவது எளிதாக இருக்கும்.
- ஏனென்றால், வங்கிகளுக்குப் பயிர்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுவதன் மூலம், கடன்கள் சுலபமாக வழங்கப்படும்.
E) புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தல்:
- விவசாயத்தில் பழைய முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சில சமயங்களில் நஷ்டம் ஏற்படக்கூடும். ஆனால், புதிய தொழில் நுட்பங்களான (Modern Techniques) மழைநீர் சேமிப்பு, சரியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைப் பயன்டுத்துவதால், பயிர்களால் ஏற்படும் நஷ்டங்கள் குறையும்.
- இதை விவசாயிகள் சோதித்துப் பார்க்க இந்தத் திட்டம் ஊக்குவித்து வருகிறது.
F) வேளாண் துறையில் போட்டியை அதிகரித்தல்:
- பயிர் காப்பீட்டு சேவைகளை வழங்கும் பொது நிறுவனங்களும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் (Insurance Companies) விவசாயிகளுக்குக் காப்பீடுகளை வழங்குவதற்கு அதிகமாகப் போட்டியிடும்.
- இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல சேவை கிடைப்பது மட்டுமில்லாமல், நிவாரணத் தொகையும் விரைவாகக் கிடைக்கும்.
G) விவசாயிகளை அபாயத்திலிருந்து பாதுகாத்தல்:
- விவசாயத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க இந்தக் காப்பீட்டுத் திட்டம் உதவுகிறது.
- நஷ்டம் வந்தாலும் இந்தத் திட்டத்தால் விவசாயிகள் பயப்படாமல் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட முடியும்.
H) GST வரி விலக்கு:
- இந்தக் காப்பீட்டு திட்டத்தில் சேரும் விவசாயிகள் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax – GST) செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- இதனால் காப்பீட்டுத் தொகை மிகவும் மலிவாக இருக்கும்.
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) – காப்பீட்டுப் பாதுகாப்பு

இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பயிர்கள் மற்றும் விவசாய அபாயங்களுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
A) எந்தெந்த பயிர்களுக்குக் காப்பீடு கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் சில குறிப்பிட்ட பயிர்களுக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும்.
- உணவுப் பயிர்கள் – அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், பருத்தி, துவரம் பருப்பு போன்ற உணவுப் பொருட்கள்.
- எண்ணெய் விதைகள் – நிலக்கடலை, சோயா, வெள்ளை எள் போன்ற எண்ணெய்ப் பயிர்கள்.
- வர்த்தகப் (Commercial) பயிர்கள் – சர்க்கரைக்கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள்.
- தோட்டக்கலைப் பயிர்கள் – மிளகாய், தக்காளி போன்ற வருடாந்திரத் தோட்டப் பயிர்கள்.
B) பயிர் வளர்ச்சி (Crop Cycle)
i) விதைப்பு நிலை (Initial Stage):
- விதை போட்டதும் முளைக்காத பயிர்கள் அல்லது உலர்வதால் வளராத பயிர்களுக்குக் காப்பீடு கிடைக்கும்.
- குறைவான மழை அல்லது மோசமான காலநிலை காரணமாக பயிர் வளரவில்லை என்றால் காப்பீடு கிடைக்கும்.
ii) வளர்ச்சி நிலை (Growth Stage):
நின்ற பயிர்கள் (Standing Crops) வளர்ந்து கொண்டிருக்கும் போது வறட்சி, வெள்ளம், நீர் நிறைவு (Water saturation), பூச்சி தாக்குதல், நோய்கள், நிலச்சரிவு, இடி, புயல், ஆலங்கட்டி மழை போன்ற காரணங்களால் பயிர் சேதமடைந்தால் நிவாரணம் கிடைக்கும்.
iii) அறுவடை நிலை (Harvest Stage):
அறுவடைக்குப் பிறகு ஆலங்கட்டி மழை, புயல், மழைக்காற்று, காலமற்ற மழை காரணமாக 2 வாரத்திற்குள் பயிர்கள் சேதமடைந்தால் பாதுகாப்பு கிடைக்கும்.
2025 சில்லறை பணவீக்கம் 3.34%-ஆகக் குறைவு!
C) உள்ளூர் அபாயங்களுக்கான பாதுகாப்பு (Localised Risks):
ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, இயற்கைத் தீ காரணமாக பயிர் சேதமடைந்தால் பாதுகாப்பு வழங்கப்படும்.
D) எதற்குப் பாதுகாப்பு இல்லை? (Exclusions)
போர், அணு வெடிப்பு, கள்ளச் செயல்கள் (Counterfeit activities) போன்றவற்றால் ஏற்படும் நஷ்டத்திற்குக் காப்பீடு கிடையாது.
E) நஷ்டத்தொகை (Claim) எப்படி கணக்கிடப்படும்?
- பயிரில் எவ்வளவு மகசூல் இழப்பு (Yield Loss) ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, வங்கி வழங்கிய தொகையை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு (Claim) அளிக்கப்படும்.
- இது 7 வருடத்திற்கான பயிர் விளைச்சல் தரவின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
PMFBY திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரீமியம்

A) பிரீமியம் என்றால் என்ன?
- காப்பீட்டுத் திட்டத்தில் சேரும்போது விவசாயிகள் ஒரு சிறிய தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தத் தொகை செலுத்தினால்தான் பயிர் சேதமாகும்போது அதற்கான நஷ்ட ஈடைப் பெற முடியும்.
- PMFBYதிட்டத்தின் கீழ் விவசாயிகள் மிகக் குறைந்த தொகையை மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகையை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செலுத்தும்.
B) எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு பிரீமியம் கிடைக்கும்?
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் (Premium) தொகை பின்வருமாறு:
- காரீப் (கோடை/மழைக்காலப் பயிர்கள்) – 2%
(எ.கா: நெல், கோதுமை, சோளம், சிறுதானியங்கள் போன்றவை). - ராபி (குளிர்காலப் பயிர்கள்) – 1.5%
(எ.கா: கோதுமை, பருத்தி, பருப்பு வகைகள்) - வணிக (Commercial) மற்றும் தோட்டக்கலைப் (Horticulture) பயிர்கள் – 5%
(எ.கா: பருத்தி, சர்க்கரைக் கரும்பு, மிளகாய் போன்றவை).
C) மீதமுள்ள தொகையை யார் செலுத்துவார்கள்?
விவசாயிகள் இந்தக் குறைந்த தொகையை மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள 95% முதல் 98.5% வரை உள்ள பிரீமியம் தொகையை மத்திய அரசு மற்றும் மாநில அரசு 50:50 விகிதத்தில் சேர்ந்து செலுத்தும்.
எடுத்துக்காட்டு:
- ஒரு விவசாயி ஒரு ஹெக்டேர் (Hectare) நிலத்திற்கு ரூ. 35,000 காப்பீடு செய்ய வைத்திருந்தால், காப்பீட்டு நிறுவனத்தால் வசூலிக்கப்படும் முழு பிரீமியம் ரூ. 4,000 ஆக இருக்கும்.
- அந்த விவசாயி காரீப் பயிர் (நெல், சோளம்) பயிரிட்டால், அவர் 2% (ரூ. 800) மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள ரூ. 3,200 (95%-98.5%) தொகையை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செலுத்தும்.
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் வெற்றி கதை!
PMFBY திட்டத்தில் பங்கேற்கும் காப்பீட்டு நிறுவனங்கள்
A) PMFBY திட்டத்தை செயல்படுத்துபவர்கள் யார்?
- பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா திட்டத்தை இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் உள்ள 18 காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகிறது.
- இந்த நிறுவனங்கள் விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களாகும்.
B) காப்பீட்டு நிறுவனங்கள்:
- வேளாண் காப்பீட்டு நிறுவனம் (Agriculture Insurance Company).
- SBI பொதுக் காப்பீடு (SBI General Insurance).
- HDFC எர்கோ (HDFC Ergo General Insurance).
- ICICI லோம்பார்ட் (ICICI Lombard General Insurance).
- நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (New India Assurance).
- யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (United India Insurance).
C) பிற முக்கிய நிறுவனங்கள்:
- பஜாஜ் அலையன்ஸ் (Bajaj Allianz).
- பாரதி ஆக்ஸா (Bharathi Axa).
- சோழமண்டலம் (Cholamandalam).
- ரிலையன்ஸ் (Reliance).
- ராயல் சுந்தரம் (Royal Sundaram).
- டாடா ஏஐஜி (Tata AIG).
- IIFCO டோக்கியோ (IFFCO Tokyo).
- ஸ்ரீராம் ஜெனரல் (Sriram General).
- யுனிவர்சல் சோம்போ (Universal Zombo).
- பியூச்சர் ஜெனரல் (Future General).
- நேஷனல் இன்சூரன்ஸ் (National Insurance).
D) விவசாயிகளுக்குப் பயன்:
- உங்கள் மாவட்டத்தில் அரசால் நியமிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் எது என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த நிறுவனத்திடம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.
- இந்த நிறுவனங்கள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ஆகும். எனவே, நம்பிக்கையுடன் விவசாயிகள் காப்பீடை எடுக்கலாம்.
- சேதம் ஏதேனும் ஏற்பட்டால், இதன் மூலம் சுலபமாக நிவாரணம் பெற முடியும்.
- வங்கிகள் மூலமாகவும், கிராம சேவை மையங்கள் (CSC) மூலமாகவும், நேரடியாகக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம்.
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) – விவசாயிகள் பெறும் நன்மைகள்

A) நம்பிக்கை:
“நாளை என்ன ஆகும்?”, “பயிர் நஷ்டம் ஆகுமா?” என்று கவலை இல்லாமல் விவசாயிகளுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டத்தால் நம்பிக்கை கிடைக்கும்.
B) நிதி நிலை சீராகும்:
ஒரு பருவத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும், அதற்கு உடனடி நிவாரணம் கிடைப்பதால் விவசாயிகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
PMFBY-யின் முன்னோக்கிய பாதை
- 2016 முதல் 2020 வரை விவசாயிகள் சந்தித்த சவால்கள் குறித்து அரசு தொடர்ந்து ஆராய்ச்சி செய்து புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தது. 2019-20 ராபி பருவத்தில் இருந்து விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
- 2023 நிலவரப்படி, இந்தத் திட்டம் உலக அளவில் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டமாக மாறியது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் 4 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
- 2024-25 பட்ஜெட்டில் ரூ. 14,600 கோடி ஒதுக்கப்பட்டு, மேலும் பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
Post Office முதலீட்டு திட்டம் – அதிக வட்டி, சிறந்த முதலீடு!
விண்ணப்பிக்கும் முறை
A) வங்கி மூலம் விண்ணப்பிப்பது:
- உங்கள் பயிர்க் கடனுக்காக நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கியிலேயே PMFBY காப்பீட்டுத் திட்டத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.
- தேவையான ஆவணங்களை (Aadhar, நிலத்தின் பட்டா, பயிர் விவரங்கள், வங்கி பாஸ்புக்) கொடுத்து விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம்.
B) கிராம சேவை மையங்கள் (CSC):
- அருகிலுள்ள CSC (Common Service Center) சென்று PMFBY திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
- ஆவணங்களை எடுத்துச் சென்றால், மையத்திலுள்ள ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
C) ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
- ஸ்டேப் 1: ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://pmfby.gov.in/
- ஸ்டேப் 2: Farmer Corner பகுதியில் உள்ள Apply for Crop Insurance என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஸ்டேப் 3: உங்கள் விவரங்களை Aadhar எண்ணுடன் பதிவு செய்து, நிலத் தகவல், பயிர் விவரம், வங்கி விவரம் போன்றவற்றை சரியாக பூர்த்தி செய்யவும்.
- ஸ்டேப் 4: பிரீமியம் தொகையை ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
D) தேவையான முக்கிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை.
- நில உரிமை ஆவணம் (பட்டா, சிட்டா, RTI போன்றவை).
- பயிர் விதைப்பதற்கான விவரங்கள்.
- வங்கிக் கணக்கு புத்தகம் (Passbook) நகல்.
- புகைப்படம் (தேவையென்றால்).
E) விண்ணப்பிக்கக் கால அவகாசம்:
- காரீஃப் பருவம்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்(மழைக்காலம்).
- ராபி பருவம்: டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
F) முக்கியக் குறிப்பு:
உங்கள் பகுதிக்கு (ஜில்லா) எந்தக் காப்பீட்டு நிறுவனம் பொறுப்பாக உள்ளது என்பதை வங்கி அல்லது வேளாண்மை அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கவும்.
பிரதான் மந்திரி ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இயற்கைப் பேரழிவுகள், திடீர் காலநிலை மாற்றங்கள், பயிர் நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் நஷ்டங்களுக்கு நிவாரணம் வழங்கி, விவசாயிகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த இந்தத் திட்டம் உதவி வருகிறது. இதைப் பற்றி விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், விவசாயிகளின் வாழ்க்கைதான் நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். விவசாயிகளைப் பாதுகாப்போம்!
இந்தியப் பங்குச் சந்தை 2025 – Stock Market Trends & Tips!
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) – FAQs
1) PMFBY திட்டத்தில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
விவசாயிகள் தங்களது வங்கிகள், கிராம சேவை மையங்கள் (CSC) அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.pmfby.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
2) PMFBY திட்டத்தில் பிரீமியம் கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்?
- காரீப் (மழைக்காலப் பயிர்கள்) – 2%
- ராபி (குளிர்காலப் பயிர்கள்) – 1.5%
- வணிக மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் – 5%
மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து செலுத்தும்.
3) பயிர் சேதம் ஏற்பட்டால் நஷ்ட ஈடு (Claim) பெற எப்படி விண்ணப்பிப்பது?
சேதம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் விவசாயிகள் வங்கியில் அல்லது PMFBY இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும். அதிகாரிகள் பயிர் சேதத்தை மதிப்பீடு செய்தவுடன், நஷ்ட ஈடு தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் இதுபோன்ற சிறந்த தகவல்களை பெற – TNNEWSBOX.COM
முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!
Key Insights & Best Takeaways
The Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) is a vital crop insurance scheme launched to support farmers facing crop losses due to natural calamities. It offers low premium rates, faster claim settlements, and encourages risk-free farming. The scheme aims to ensure financial security and promote confidence among Indian farmers. With government subsidies and wide coverage, PMFBY strengthens agricultural sustainability.