- முத்ரா யோஜனா தொழில் கடன் : இன்றைய உலகில் பலரும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்பதைத் தான் விரும்புகிறார்கள். ஆனால், தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு ஒரு தடையாக இருப்பது முதலீடு தான்.
- இதனால் தொழில் தொடங்கத் தேவையான பணம் இல்லாமல் பலருக்கு அது கனவாகவே ஆகிவிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை அளித்து வருகிறது.
- அந்த வகையில் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தான் சாதாரண மக்களும் தொழில் தொடங்கும் வகையில் கடன்களை அளித்து வருகிறது.
- இந்தத் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும், எளிய முறையில் விண்ணப்பம் செய்வது எப்படி என்பது பற்றியும், கடனைப் பெறுவதற்கான தகுதிகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
முத்ரா யோஜனா தொழில் கடன்
- பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் என்பது பல சிறு தொழில் முனைவோர்களுக்கான ஒரு வரம் என்றே சொல்லலாம்.
- இதன் மூலம் சிறு தொழில்களை தொடங்கும் நபர்கள், இளம் தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர்கள் ஆகியோருக்கு இந்த நிதி கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
“PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!”
முத்ரா யோஜனா தொழில் கடன் – முக்கியப் பயனாளர்கள்
சிறு வணிகர்கள்
- துணிக்கடை, பழக்கடை, மளிகைக் கடை மற்றும் காய்கறிகள் விற்கும் சிறு வியாபாரிகள் ஆகியோர் இதன் மூலம் பயன் பெறுவர்.
சுயதொழில் செய்பவர்கள்
- வீட்டு உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தல், தையல், சிறு சர்விஸ் தொழில்களை நடத்துபவர்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தால் பயன் உண்டு.
புதிய தொழில் முனைவோர்கள்
- புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள், முதலீடு இல்லாததால் தொழிலைத் தொடங்க முடியாமல் இருப்பர். அவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கிறது.இதனால்,
- தொழில் தொடங்குவதற்கான பணத் தட்டுப்பாடு குறைகிறது.
- தொழில் முனைவோர்களின் வளர்ச்சி அதிகரிக்கின்றன.
- இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகுவதால், பலரின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
- இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.
கடன் தொகை
- முன்பாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்தத் தொகை ரூ. 20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- இது தொழில் முனைவோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைகிறது. இதனால் பல பேர் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வர்.
“10 லட்சம் கல்விக்கடன் – மத்திய அரசு அறிவிப்பு!”
கடன் வகைகள்
- திட்டத்தின் கீழ் 3 வகையான கடன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
- இதனால், தொழில் முனைவோர் அந்தந்த தொழிலுக்கு ஏற்ப சுலபமாகக் கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
- அவை சிசு, கிஷோர் மற்றும் தருண் என்ற 3 வகைகள் ஆகும்.
சிசு
- சிசு வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 50,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- இதன் மூலம் சிறு தொழில் முனைவோர் பயன்பெறலாம்.
கிஷோர்
- கிஷோர் வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தருண்
- தருண் வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
Mudra Loan Application Process – விண்ணப்பிக்கும் முறை
- இந்தத் திட்டத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கு https://www.udyamimitra.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடவும். இதன் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கலாம்.
- ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கு அருகில் உள்ள வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அல்லது மைக்ரோ ஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் (MFI) கிளைகளில் விண்ணப்பிக்கலாம்.
- பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சிறு மற்றும் குறு தொழில் முனைவோரின் கனவுகளை நனவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் வேலை வாய்ப்புகளும், தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. அது மட்டுமில்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.
- எனவே, இந்தத் திட்டத்தின் முழு பயன்களையும் பயன்படுத்தி, தொழில் முனைவோர்கள் தங்களின் திறமையையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
10ம் வகுப்பு அரசு வேலை – அஞ்சல் துறையில் வேலை!
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..
அதிகாரப்பூர்வ குறிப்பு: முத்ரா கடன் அதிகாரப்பூர்வ இணையதளம்
எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways!
Pradhan Mantri Mudra Yojana is a government-backed business loan scheme offering up to ₹20 lakhs for startups, small businesses, and entrepreneurs. It provides loans under three categories: Shishu, Kishor, and Tarun, based on funding needs. These Mudra loans require no collateral and are available through banks, NBFCs, and online portals. The scheme aims to support self-employment and entrepreneurship, making it easier for individuals to access funding for their business growth.