• Home
  • வணிகம்
  • முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!

முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!

முத்ரா யோஜனா தொழில் கடன் – 20 லட்சம் பெற எளிய வழிகள் | Mudra Loan Easy Steps in Tamil
  • முத்ரா யோஜனா தொழில் கடன் : இன்றைய உலகில் பலரும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்பதைத் தான் விரும்புகிறார்கள். ஆனால், தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு ஒரு தடையாக இருப்பது முதலீடு தான். 
  • இதனால் தொழில் தொடங்கத் தேவையான பணம் இல்லாமல் பலருக்கு அது கனவாகவே ஆகிவிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, மக்களுக்கு நன்மைகளை அளித்து வருகிறது. 
  • அந்த வகையில் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தான் சாதாரண மக்களும் தொழில் தொடங்கும் வகையில் கடன்களை அளித்து வருகிறது. 
  • இந்தத் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியும், எளிய முறையில் விண்ணப்பம் செய்வது எப்படி என்பது பற்றியும், கடனைப் பெறுவதற்கான தகுதிகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

முத்ரா யோஜனா தொழில் கடன்

  • பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் என்பது பல சிறு தொழில் முனைவோர்களுக்கான ஒரு வரம் என்றே சொல்லலாம்.
  • இதன் மூலம் சிறு தொழில்களை தொடங்கும் நபர்கள், இளம் தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் யோசனைகளை உருவாக்குபவர்கள் ஆகியோருக்கு இந்த நிதி கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
“PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!” PPF முதலீடு – Long-term savings plan India, பாதுகாப்பான முதலீட்டு விருப்பம்

முத்ரா யோஜனா தொழில் கடன் – முக்கியப் பயனாளர்கள்

சிறு வணிகர்கள்

  • துணிக்கடை, பழக்கடை, மளிகைக் கடை மற்றும் காய்கறிகள் விற்கும் சிறு வியாபாரிகள் ஆகியோர் இதன் மூலம் பயன் பெறுவர். 

சுயதொழில் செய்பவர்கள்

  • வீட்டு உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தல், தையல், சிறு சர்விஸ் தொழில்களை நடத்துபவர்கள் ஆகியோருக்கு இந்தத் திட்டத்தால் பயன் உண்டு. 

புதிய தொழில் முனைவோர்கள்

  • புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள், முதலீடு இல்லாததால் தொழிலைத் தொடங்க முடியாமல் இருப்பர். அவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கிறது.இதனால்,
  •  தொழில் தொடங்குவதற்கான பணத் தட்டுப்பாடு குறைகிறது. 
  • தொழில் முனைவோர்களின் வளர்ச்சி அதிகரிக்கின்றன. 
  • இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகுவதால், பலரின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
  • இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது.

கடன் தொகை

  • முன்பாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்தத் தொகை ரூ. 20 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இது தொழில் முனைவோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைகிறது. இதனால் பல பேர் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வர்.
“10 லட்சம் கல்விக்கடன் – மத்திய அரசு அறிவிப்பு!” மத்திய அரசு கல்விக்கடன் அறிவிப்பு – 10 லட்சம் வரை உதவி 2025

கடன் வகைகள்

  • திட்டத்தின் கீழ் 3 வகையான கடன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
  • இதனால், தொழில் முனைவோர் அந்தந்த தொழிலுக்கு ஏற்ப சுலபமாகக் கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • அவை சிசு, கிஷோர் மற்றும் தருண் என்ற 3 வகைகள் ஆகும். 

சிசு

  • சிசு வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 50,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.
  • இதன் மூலம் சிறு தொழில் முனைவோர் பயன்பெறலாம். 

கிஷோர் 

  • கிஷோர் வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

தருண்

  • தருண் வகையின் கீழ் ஒரு நபருக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.

Mudra Loan Application Process – விண்ணப்பிக்கும் முறை

  • இந்தத் திட்டத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கு https://www.udyamimitra.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடவும். இதன் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கலாம். 
  • ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கு அருகில் உள்ள வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அல்லது மைக்ரோ ஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் (MFI) கிளைகளில் விண்ணப்பிக்கலாம்.
  • பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் சிறு மற்றும் குறு தொழில் முனைவோரின் கனவுகளை நனவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் வேலை வாய்ப்புகளும், தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. அது மட்டுமில்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.
  • எனவே, இந்தத் திட்டத்தின் முழு பயன்களையும் பயன்படுத்தி, தொழில் முனைவோர்கள் தங்களின் திறமையையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
10ம் வகுப்பு அரசு வேலை – அஞ்சல் துறையில் வேலை! 10ம் வகுப்பு அரசு வேலை – Post Office Job Tamil 2025

மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..

அதிகாரப்பூர்வ குறிப்பு: முத்ரா கடன் அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Key Insights & Best Takeaways!

Pradhan Mantri Mudra Yojana is a government-backed business loan scheme offering up to ₹20 lakhs for startups, small businesses, and entrepreneurs. It provides loans under three categories: Shishu, Kishor, and Tarun, based on funding needs. These Mudra loans require no collateral and are available through banks, NBFCs, and online portals. The scheme aims to support self-employment and entrepreneurship, making it easier for individuals to access funding for their business growth.

Releated Posts

SSC CHSL 2025 பதிவு தொடங்கியது – விண்ணப்பிக்கக் கடைசி தேதி இதோ

SSC CHSL 2025: மத்திய அரசின் கீழ் உள்ள பல பிரிவுகளில் கீழ்நிலை அலுவலகத் தேர்வான SSC CHSL 2025-க்கான ஆன்லைன் பதிவு தொடங்கிவிட்டது.…

ByByVignesh MJun 25, 2025

PM-Kisan பயனாளிகள் பட்டியல் 2025 – உங்கள் பெயர் உள்ளதா?

PM-Kisan 2025 : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) யோஜனா என்பது இந்திய அரசின் ஒரு முக்கியத் திட்டமாகும். இது தகுதியான…

ByByVignesh MJun 23, 2025

ITR ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி? Easy Step-by-Step Guide!

ITR : வருமான வரி தாக்கல் செய்வது என்பது இனி கடினமான பணியாக இருக்காது. ஏனென்றால், நீங்கள் ஒரு சம்பளதாரர் மற்றும் எளிய நிதி…

ByByVignesh MJun 22, 2025

ரூ.3,000-க்கு FASTag Annual Pass – செயல்படுத்துவது எப்படி?

FASTag Annual Pass : மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, FASTag பயன்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதியை…

ByByAmirthavarshini RJun 22, 2025

அமெரிக்காவிற்கு முதன் முறையாக முட்டை ஏற்றுமதி செய்யும் நாமக்கல்!

நாமக்கல் முட்டைகள் : இந்தியாவின் முட்டை உற்பத்திக்கு நாமக்கல் பெயர் பெற்றதாகும். தற்போது, முதன்முறையாக, நாமக்கல் பண்ணைகளில் இருந்து 12 மில்லியன் முட்டைகள் அமெரிக்காவிற்கு…

ByByVignesh MJun 19, 2025

Top 5 பங்குகள் 2025 : முதலீட்டுக்கான சிறந்த தேர்வு

Top 5 பங்குகள் 2025 : இந்தியப் பங்குச்சந்தை தற்போது ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் உள்ளது. ஆனாலும், சில தரகு நிறுவனங்கள் (Brokerage firms)…

ByByVignesh MJun 17, 2025

Railway Recruitment 2025 : டிப்ளமோ & BE வேலைவாய்ப்பு!

Railway Recruitment 2025 : ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்டெல் (RailTel) நிறுவனத்தில் அசிஸ்டென்ட் மேனேஜர் மற்றும் டெபுடி மேனேஜர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

ByByVignesh MJun 15, 2025

2025-26 கல்வியாண்டிற்கான Calendar வெளியீடு!

2025-26 கல்வியாண்டிற்கான Calendar-ஐ பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு வசதியாக, அரசு விடுமுறை நாட்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றிய முழு விவரங்களை இந்தப்…

ByByVignesh MJun 14, 2025

SSC CGL 2025 : 14,582 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

SSC CGL 2025 : மத்திய அரசுப் பணிகளுக்கான பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission – SSC) நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி…

ByByVignesh MJun 14, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *