ஆம் ஆத்மி கட்சி
அசோக் விகாரின் ராம்லீலா மைதானத்தில் இன்று (ஜனவரி 3, 2025) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகப் பிரதமர், ஆம் ஆத்மி கட்சி மீது சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவர் கடந்த 10 ஆண்டுகளில் தேசியத் தலைநகரம் ஒரு “பேரழிவால்” சூழப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி – யால் “பேரழிவு”
ஆம் ஆத்மி கட்சி யை மறைமுகமாக விமர்சித்த பிரதமர், “அண்ணா ஹசாரேவை முன்னணியில் வைத்திருப்பதால், சில “கட்டார் பீமான்” (நேர்மையற்றவர்கள்) தேசியத் தலைநகரை “ஆப்டா” (பேரழிவு) நோக்கித் தள்ளிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், “டெல்லி மக்கள் இந்தப் பேரழிவிற்கு எதிராக ஒரு போராட்டம் மேற்கொண்டனர். அது மட்டுமில்லாமல், இந்தப் பேரழிவிலிருந்து டெல்லியை விடுவிக்க முடிவு செய்துள்ளனர்” என்று பிரதமர் அசோக் விகாரின் ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

வீடுகள் கட்டித் தருவேன்
அதிஷி தலைமையிலான டெல்லி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்த அவர், “முதலில் திருட்டில் ஈடுபட்டார்கள், பின்பு ஆணவத்துடன் நடந்து கொண்டார்கள்.
இப்போது அவர்கள் டெல்லியை மொத்தமாகக் கையாளும் நிலைக்கு வந்து விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டாமல் 4 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் எவ்வாறு வீடுகளை வழங்கினார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர், “இன்று இல்லை என்றால் நாளை நிச்சயமாக அவர்களுக்கு உறுதியாக வீடுகள் கட்டித் தரப்படும் என்று என் சார்பாக அவர்களிடம் கூறுங்கள்” என்று இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களிடம் கூறினார்.
முடங்கும் தலைநகரம்! 200 விமானங்கள் தாமதம்?
யமுனை குறித்துப் பேசியது
யமுனையின் தற்போதைய நிலை குறித்துப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அவர், “யமுனை நதியைச் சுத்தம் செய்வது ஒரு கடமையாக இருக்க வேண்டும்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் யமுனையைச் சுத்தம் செய்தால் வாக்குகள் கிடைக்காது என்று கூறுகின்றனர். இதனால் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விட முடியுமா? இப்படிப்பட்ட அணுகுமுறையால் யமுனையின் நிலைமை மோசமாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
பாஜக-விற்கு ஆதரவு
மேலும், பிரதமர் டெல்லியின் போக்குவரத்துப் பிரச்சனைகளைச் சரி செய்ய பல திட்டங்களுக்குத் தன்னுடைய அரசாங்கம் ஆதரவு வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், 2025-ஆம் ஆண்டில் டெல்லி தலைநகரம் ஒரு புதிய மற்றும் நல்ல நிர்வாகத்தின் திசையில் செல்லும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்த மோடி, பெரும் பிரச்சனைகளைக் கலைத்து பாஜக-வை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், எதிர்வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக-வை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தளபதி 69 – ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய் புதிய லுக்
முன்பாக பிரதமர் ஜேஜே கிளஸ்டர்களில் உள்ள குடிசைவாசிகளுக்குப் புதிதாகக் கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். மேலும், அசோக் விகாரின் ஸ்வாபிமான் அடுக்குமாடி குடியிருப்புகளில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Key Insights & Best Takeaways!
- PM Narendra Modi slammed the Aam Aadmi Party (AAP) for what he called a “disastrous administration.”
- The comments came during a public speech targeting recent issues in Delhi’s governance.
- Modi claimed AAP’s leadership led to infrastructure failure, mismanagement, and poor public service.
- The AAP party responded saying the accusations are politically motivated.
- This marks an intensified political battle ahead of the 2025 elections.
- Social media reactions are trending with #ModiVsAAP and #DelhiDisaster.
- Voters are now closely observing leadership accountability and election promises.
மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox