5000 முதலீட்டில் 7.5 கோடி : இன்றைய காலக்கட்டத்தில் திருமணமான பெண்கள் தொழில் தொடங்குவது சாத்தியமா என்ற கேள்வி பல பேருக்கு இருந்து வந்தது. ஆனால், இந்தக் கருத்தை உடைத்து பல திருமணமான பெண்கள் தொழில்முனைவோர் ஆகி, தங்களின் குடும்பத்தையும், தொழிலையும் சமநிலையாகப் பார்த்து வருகின்றனர். அவர்களின் கடின உழைப்பு, புதிய யோசனைகள் மற்றும் உறுதியான மனதினால் வெற்றி அடைந்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் தொழில்நுட்பம், ஆடை வடிவமைப்பு, உணவுத் தொழில் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இவ்வாறு திருமணமான பெண்களும் சிறந்த தொழில் முனைவோராக வளர முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கின்றனர்.
அந்த வரிசையில், 3 திருமணமான கல்லூரித் தோழிகள் தங்களின் குழந்தைகள் நலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கி, BeeLittle என்னும் brand-ஐ உருவாக்கியுள்ளனர்.
இவர்களின் கதை பல பேருக்கு முன்னுதாரணமாக இருக்கும்.
5000 முதலீட்டில் 7.5 கோடி
இந்தப் பதிவில்,
- BeeLittle நிறுவனம் தொடங்கிய கதை.
- BeeLittle நிறுவனத் தயாரிப்புகளின் தனித்துவம்.
- வெற்றிக்கான காரணங்கள்.
- எதிர்காலத் திட்டங்கள்.
- FAQs.
ஆகிய விவரங்கள் குறித்துப் பின்வருமாறு பார்ப்போம்.
5000 முதலீட்டில் 7.5 கோடி – வெற்றி பெற்ற 3 தோழிகளின் பயணம்!

5000 முதலீட்டில் 7.5 கோடி மற்றும் குடும்ப ஆதரவு
வெறும் ரூ. 5000 முதலீட்டில், சூர்யா வீட்டில் உள்ள ஒரு சிறிய அறையில் மூவரும் தங்களின் தொழிலைத் தொடங்கினர். ஒரு தையல் இயந்திரம் மற்றும் ஆர்கானிக் பருத்தித் துணிகளின் (Organic cotton fabrics) மீது இருந்த நம்பிக்கையுடன் அவர்களின் பயணம் ஆரம்பித்தது. இந்த முயற்சிக்கு சூர்யாவின் குடும்பம், குறிப்பாக அவருடைய தாயார் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். குடும்பத்தின் ஆதரவு, அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், சவால்களை எதிர்கொள்வதற்குத் துணிவாக இருக்கவும் உதவியாக இருந்தது.
BeeLittle நிறுவனம் தொடங்கிய கதை
2015-ல் திருப்பூரில் சூர்யா பிரபா, சக்தி பிரியதர்ஷினி மற்றும் காயத்ரி ஆகிய 3 நண்பர்கள், தாய்மையின் ஒரு முக்கிய சவாலை எதிர்கொண்டனர். சந்தையில் Organic மற்றும் தரமான குழந்தைப் பொருட்களைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருந்து வந்தது.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க விரும்பிய அவர்கள், அதற்கான சிறந்த தீர்வாக ஒரு புதிய முயற்சியைத் தொடங்கினர். இதன் விளைவாக உருவானதுதான் BeeLittle என்ற brand குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, இயற்கையான மற்றும் தரமான பொருட்களை வழங்குவதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த முயற்சி, பல தாய்மார்கள் எதிர்கொண்ட பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தது.
3 – தோழிகளின் ஒற்றுமை
கல்லூரி நாட்களில் தொடங்கிய அவர்களின் நட்பு, தொழில் தொடங்கிய பிறகும் அவர்களுக்குப் பலமாக இருந்தது. ஒருவருக்கொருவர் ஊக்கமளித்துக் கொண்டு, சவால்களை சமாளிக்கத் துணை நின்றனர். தொழில் நடத்தும் போது கருத்து வேறுபாடுகள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டு ஒரே நோக்கத்தில் செயல்பட்டனர். ஒற்றுமை மற்றும் புரிதலால் அவர்களின் தொழிலை வளர்க்க முடிந்தது. மூவரும் உறுதியாக இருந்து சிரமங்களைத் தாண்டி முன்னேறியதால், அவர்களின் நட்பு தொழிலின் வலுவாக மாறியது. இந்த ஒற்றுமையான அணுகுமுறை அவர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
அஞ்சலக மாத வருவாய் திட்டம் MIS vs TD – எது சிறந்தது?
BeeLittle நிறுவனத்தின் ஆரம்பக் கட்ட பணிகள்
A) உற்பத்தி மற்றும் வடிவமைப்பு
தொழில் தொடங்கிய காலத்தில், அவர்கள் ஒவ்வொரு செயலையும் கவனமாக செய்து வந்தனர். காயத்ரி தையல் வேலையைக் கவனித்துக் கொண்டார். சூர்யா மற்றும் சக்தி பிரியா ஆகிய இருவரும் துணிகளை வெட்டும் பணிகளைச் செய்தனர்.
முதல் தையல் இயந்திரம் வாங்கியதில் இருந்து, துணித் தேர்வு, வடிவமைப்பு மற்றும் விற்பனை வரை அனைத்தையும் அவர்கள் தாங்களே செய்து வந்தனர்.
இந்தக் கடின உழைப்பும், நேர்த்தியான கைத்திறனும் அவர்களின் தொழிலை வளர்க்க உதவியாக இருந்தது.
B) வாய்மொழி விளம்பரம் மற்றும் வாடிக்கையாளர் கவனம்
முதலில் தயாரித்த பொருட்களை அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்குப் பரிசளித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டனர். இதன் மூலம் தயாரிப்புகளை மேம்படுத்தி தரத்தை உயர்த்தினர்.
இந்த முறையானது வாய்மொழி விளம்பரமாக மாறி, மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவியது. இதன் மூலம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இது அவர்களின் தொழிலை மெதுவாக வளரச் செய்தது.
C) சந்தை தேவை மற்றும் வளர்ச்சி
சந்தையில் Organic பொருட்களுக்கு அதிகமாக தேவை இருந்தது. இது BeeLittle நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கவனமாகப் புரிந்து கொண்டு, அவர்கள் விரும்பும் முறையில் Customized product-களை வழங்கினர். இதனால், நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து முன்னேறியது.
BeeLittle நிறுவனத் தயாரிப்புகளின் தனித்துவம்

A) Organicபொருட்கள் மற்றும் GOTS சான்றிதழ்
BeeLittle நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது, அவர்களின் தரமான மற்றும் தனித்துவமான தயாரிப்புகள் தான். குழந்தைகளின் மென்மையான சருமத்திற்குப் பாதுகாப்பான Organic மற்றும் இயற்கை பருத்தி துணிகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
மேலும், GOTS (Global Organic Textile Standard) சான்றளிக்கப்பட்ட துணிகளை உபயோகிப்பதால், அவர்களின் தயாரிப்புகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்தனர்.
B) தயாரிப்பு வகைகள் மற்றும் வடிவமைப்பு
குழந்தைகளுக்குத் தேவையான தொட்டில்கள், உடைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் போன்ற பல்வேறு முக்கியப் பொருட்களை வழங்கினர். கூடுதலாக, தாய்மார்களுக்கான பிரத்தியேக பொருட்களையும் தயாரித்து வந்தனர். குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எந்த விதமான சாயங்கள் மற்றும் ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், அதிகமாக வெள்ளை நிறத்திலேயே தயாரிப்புகளை உருவாக்கி வந்தனர்.
Kapok என்னும் பட்டுப் பருத்தி மூலம் குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்ற வகையில் படுக்கைகள் வடிவமைக்கப்பட்டன. ஒவ்வொரு தயாரிப்பும் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நூல் மற்றும் தையலிலும் அவர்களின் அக்கறை வெளிப்பட்டது.
ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆன 2 எளியவர்கள்!
5000 முதலீட்டில் 7.5 கோடி – BeeLittle நிறுவனத்தின் மைல்கற்கள்
A) இடமாற்றம் மற்றும் விரிவாக்கம்
2017-ஆம் ஆண்டு BeeLittle நிறுவனம் வளர்ச்சி பெறுவதற்கு, திருப்பூரில் ஒரு பெரிய இடத்திற்கு இடமாற்றம் செய்தனர். இது, அவர்களின் வளர்ச்சியில் ஒரு முக்கியக் கட்டமாக அமைந்தது. அதே ஆண்டில், அவர்கள் கோயம்புத்தூரில் தங்களின் முதல் கடையைத் திறந்தனர். இதன் மூலம், அவர்களால் அதிக வாடிக்கையாளர்களை அடைய முடிந்தது.
B) ஆன்லைன் விற்பனை மற்றும் வலைத்தளம்
2019-ஆம் ஆண்டு BeeLittle நிறுவனம், தங்களின் தயாரிப்புகளை அதிக வாடிக்கையாளர்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லும் வகையில் ஒரு வலைத்தளத்தை உருவாக்கியது.
இதன் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கினர். குறிப்பாக, 2020-ஆம் ஆண்டு வந்த ஊரடங்கு காலத்தில், நேரடியாக கடைகளில் விற்பனை செய்ய முடியாத நிலையில், ஆன்லைன் விற்பனை அவர்களின் முக்கிய வருமானமாக மாறியது. வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஆர்டர் order
செய்யும் வசதி ஏற்பட்டதால், அவர்களின் வணிகம் தொடர்ந்து வளர்ந்து வந்தது. மேலும், தொழில்நுட்பத்தின் உதவியால் அவர்கள் புதிய சந்தைகளை அடையக்கூடிய வாய்ப்பையும் பெற்றனர்.
C) சென்னையில் தொடங்கிய கிளை மற்றும் எதிர்கால வளர்ச்சி
2023-ஆம் ஆண்டு BeeLittle நிறுவனம், சென்னையில் தங்களுடைய மூன்றாவது கடையைத் திறந்தது. இந்த விரிவாக்கம், அவர்களின் வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தியது. அவர்கள் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டு, கவனமாக முன்னேறி வந்துள்ளனர். ஒரு சிறிய அறையில் தொடங்கிய அவர்களின் பயணம், இன்று ரூ. 7.5 கோடி வருமானம் ஈட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!
BeeLittle-ன் டிஜிட்டல் வளர்ச்சி
A) வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள்
BeeLittle நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆன்லைன் விற்பனை ஒரு முக்கியப் பங்கு வகித்தது. அவர்கள் வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்களின் தயாரிப்புகளைப் பிரபலப்படுத்தி, உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை அடையச் செய்தனர். இதன் மூலம் விற்பனையை அதிகரிக்கவும், பல்வேறு இடங்களில் இருந்த வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும் முடிந்தது.
B) ஊரடங்கு கால விற்பனை மற்றும் விநியோகம்
ஊரடங்கு காலத்தில் BeeLittle நிறுவனத்திற்கு ஆன்லைன் விற்பனை முக்கிய வருமானமாக மாறியது. இதனால், அனைத்து Order-களும் வாடிக்கையாளர்களிடம் உறுதியாக சென்று சேர்வதற்கு, காயத்ரி தனிப்பட்ட முறையில் India Post மூலம் அனுப்பும் பணியைக் கவனித்துக் கொண்டார்.
இந்த முயற்சி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், விற்பனை தொடர்ச்சியாக இருப்பதற்கு உதவியாகவும் இருந்தது.
C) வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்பம்
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, BeeLittle நிறுவனத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சமூக ஊடகங்களில் வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்குப் பதில் அளித்தனர். அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து நல்ல சேவையை வழங்கினர். இவ்வாறு, தொழில்நுட்பத்தைத் திறமையாகப் பயன்படுத்தி, தங்களின் வணிகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொண்டனர்.
டயாலிசிஸ் உணவுமுறை 7நாள் வழிகாட்டி
BeeLittle நிறுவனத்தின் வளர்ச்சிக்கான காரணங்கள்
A) பங்கு பிரிப்பு மற்றும் நிர்வாகம்
மூன்று தோழிகளும் ஒற்றுமையாக இணைந்து வணிகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அவர்களுக்குள் பணிகளைப் பகிர்ந்து கொண்டு, ஒவ்வொருவரும் தனித்தனியாக பொறுப்புகளைக் கவனித்து வருகின்றனர். இந்த அணுகுமுறையால், அவர்களின் வணிகம் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
B) நட்பின் முக்கியத்துவம் மற்றும் ஒற்றுமை
மூன்று தோழிகளின் உறுதியான நட்பும், ஒற்றுமையும் BeeLittle நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வணிகப் பணிகளைத் தாண்டி, அவர்கள் தங்களின் நட்புக்கானக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.
மேலும், வணிக விவாதங்களை ஒருபோதும் நட்பில் கொண்டு வராமல், பழைய கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்து தங்களின் உறவை வலுப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இதனால், அவர்களுக்குள் நல்ல புரிதல் உருவாகி, வணிகமும் சிறப்பாக நடக்கிறது.
பெண்களுக்கு உத்வேகம்
A) குறைந்த முதலீடு மற்றும் கடின உழைப்பு
BeeLittle நிறுவனத்தின் வெற்றி, பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. குறைந்த முதலீட்டில் கடின உழைப்பு மூலம் பெண்கள் எந்தத் தொழிலையும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
இவர்களின் பயணம் பெண்களுக்கு மட்டுமில்லாமல், தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.
மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!
B) சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சமூகப் பங்களிப்பு
BeeLittle நிறுவனம், தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்துவது மட்டுமில்லாமல், பிற பெண்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கி, சமூகத்திற்கு உதவி வருகின்றனர். மேலும், சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி, பலருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இலக்குகள்

A) விரிவாக்கம் மற்றும் புதிய சந்தைகள்
BeeLittle நிறுவனம். தங்களின் தயாரிப்புகளை மேலும் விரிவாக்கி, புதிய சந்தைகளில் கலக்கத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் ஆன்லைன் விற்பனையை அதிகரித்து, சர்வதேச அளவில் தங்கள் நிறுவனத்தை வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால், உலகளாவிய வாடிக்கையாளர்களை அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
B) சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக பங்களிப்பு
BeeLittle நிறுவனப் பெண்கள், தங்கள் தொழிலை வளர்ப்பதுடன், மற்ற பெண்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகின்றனர். இதன் மூலம், அவர்கள் சமூகத்திற்கு முக்கியமான பங்களிகின்றனர். குறிப்பாக, பெண்கள் சுயதொழில் தொடங்க உதவுவதில் கவனம் செலுத்தி, மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
5000 முதலீட்டில் 7.5 கோடி – BeeLittle நிறுவனத்தின் வெற்றி
A) வாடிக்கையாளர் நம்பிக்கை
BeeLittle நிறுவனம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற முக்கியமான காரணம், அவர்கள் வழங்கும் தரமான Organic தயாரிப்புகள் தான். மேலும், குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்ற பொருட்களாக இருப்பதால், பெற்றோர்கள் முதலில் இதையே தேர்வு செய்கிறார்கள். இதுவே அவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
B) 5000 முதலீட்டில் 7.5 கோடி வருமானம்
BeeLittle நிறுவனம் வெறும் ரூ. 5000 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அவர்களின் கடின உழைப்பு, தரமான தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் மூலம், இன்று ரூ. 7.5 கோடி வருமானம் ஈட்டும் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சி, குறைந்த முதலீட்டிலும் வெற்றியடையலாம் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
தொழில் முனைவோர்கள், அவர்களின் அணுகுமுறையைப் பின்பற்றினால், சிறிய முதலீட்டிலிருந்தே ஒரு பெரிய வணிகத்தை உருவாக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
இந்திய அரசின் ஸ்டார்ட்அப் ஆதரவு திட்டங்கள் – startupindia.gov.in
“PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!”
BeeLittle நிறுவனம் -FAQs
1) BeeLittle நிறுவனம் எவ்வாறு தொடங்கப்பட்டது?
மூன்று தோழிகள், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பொருட்கள் கிடைக்காததால், ரூ.5000-ல் சிறிய தையல் வேலையாகத் தொடங்கினர். தற்போது படிப்படியாக வளர்ந்து ரூ. 7.5 கோடி வருமானம் ஈட்டும் வெற்றிகரமாக இவர்களின் நிறுவனம் மாறியுள்ளது.
2) BeeLittle பொருட்களின் சிறப்பம்சங்கள் யாவை?
குழந்தைகள் சருமத்திற்கு ஏற்ற Organic துணிகள், ரசாயனம் இல்லாத இயற்கை பொருட்கள் ஆகியவை BeLittle பொருட்களின் சிறப்பம்சங்கள் ஆகும்.
3) BeeLittle நிறுவனம் எவ்வாறு வளர்ந்தது?
முதலில், அவர்கள் தயாரித்த பொருட்களை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருக்குப் பரிசளித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டனர். இதன் மூலம் தயாரிப்புகளை மேம்படுத்தி தரத்தை உயர்த்தினர். இந்த முறையானது வாய்மொழி விளம்பரமாக மாறி, மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவியது. பின்பு, ஆன்லைன் விற்பனை மூலம் வளர்ந்தது.
4) BeeLittle வெற்றிக்குக் காரணம் என்ன?
தரமான பொருட்கள், வாடிக்கையாளர் நம்பிக்கை, தோழிகளின் ஒற்றுமை, கடின உழைப்பு ஆகியவை BeLittle வெற்றிக்குக் காரணமாக அமைந்தன.
5) BeeLittle நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் என்ன?
இன்னும் பல கடைகள் திறந்து, ஆன்லைன் விற்பனையை வளர்த்து, உலகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்பதே BeLittle நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் ஆகும்.
போலி பாதாம்களை கண்டறிய டிப்ஸ் – எளிய வழிகள்!
BeeLittle நிறுவனத்தின் கதை, திருமணமான பெண்களும் தொழில்முனைவோராக வளர முடியும் என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும். ரூ. 5000 முதலீட்டில் தொடங்கிய இந்தப் பயணம், இன்று ரூ. 7.5 கோடி வருமானம் ஈட்டும் brand-ஆக வளர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: BeeLittle
தரமான பொருட்கள், வாடிக்கையாளர் நம்பிக்கை, தோழிகளின் ஒற்றுமை, கடின உழைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாடு ஆகியவையே அவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தக் கதை, பெண்களுக்கு மட்டுமில்லாமல், தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். இந்தப் பதிவு உங்களுக்குத் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways!
- Investment to Success: A small ₹5000 investment turned into a massive ₹7.5 crore business success!
- Three Friends’ Journey: Their dedication, innovation, and teamwork led to this incredible growth.
- Organic Cotton Business: Focused on eco-friendly and high-quality baby products.
- Financial Management: Smart planning and financial discipline played a key role.
- Inspiration for Entrepreneurs: A true success story for aspiring business owners in India!
Dream Big, Start Small, Stay Consistent!