- இந்தியப் பங்குச் சந்தை 2025 : “இந்திய பங்குச் சந்தை” என்பது திருப்தி தரும் வகையிலான ஒரு முதலீட்டுத் தளமாக இருந்து வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
- ஆனால், சந்தை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நேரங்களில் பங்குச்சந்தை வேகமாக ஏறும்; சில சமயங்களில் அது குறையவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சரியான தகவல்கள் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை ஈட்டலாம். அதனால், பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
- இந்த 2025-ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்குக் காரணம் பொருளாதார வளர்ச்சி, அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள், உலகளாவிய சந்தை நிலைமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களாக இருக்கக்கூடும். எனவே, முதலீட்டாளர்கள் சந்தையின் இயக்கத்தைப் புரிந்து கவனிக்க வேண்டும்.
- உதாரணமாக, இந்த 2025-ஆம் ஆண்டில் பசுமை ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் உற்பத்தித் துறைகள் ஆகியவை அதிக வளர்ச்சி அடையலாம். இந்தத் துறையில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்தைத் தர வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், சில துறைகள் சவால்களை எதிர்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
- இந்தப் பதிவில் 2025-ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் ஏற்படும் முக்கிய மாற்றங்களைப் பற்றியும், அதிக வளர்ச்சி அடையக்கூடிய துறைகள் பற்றியும், முதலீட்டாளர்களுக்கான சிறந்த வழிமுறைகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
பொருளாதார வளர்ச்சி & சந்தையின் கண்ணோட்டம் – இந்தியப் பங்குச் சந்தை 2025

- இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டு இந்தியாவின் “மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 6.5% முதல் 7% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதனால், நாட்டின் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதன் மூலம் பல பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
- இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள் தகவல் தொழில்நுட்பம் (IT), மருந்து (Pharmaceuticals) மற்றும் உள்கட்டமைப்பு (Infrastructure) ஆகிய துறைகளின் முன்னேற்றங்கள் ஆகும்.
IT துறை
- கணினி மென்பொருள் (Computer software) மற்றும் டிஜிட்டல் சேவைகள் அதிகப்படியான வளர்ச்சி அடையும்.
மருந்துத் துறை
- உலகத்திலேயே “இந்தியாதான்” மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும். மேலும், புதிய மருந்துகளுக்கு இங்கு அதிகத் தேவை இருக்கும்.
உள்கட்டமைப்பு
- புதிய சாலைகள், ரயில்வே திட்டங்கள், மின்சாரம் மற்றும் கட்டிடங்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.
- அதே நேரத்தில், பணவீக்கம் (Inflation) மற்றும் வட்டி விகிதங்கள் (Interest rates) பங்குச் சந்தை மீது தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். பொருட்களின் விலை அதிகரித்தால் மக்களின் செலவு குறையும்.
- இதனால் சில துறைகள் பாதிக்கப்படலாம். பொருட்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்தால் முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையோடு இருப்பார்கள்.
Post Office முதலீட்டு திட்டம் – அதிக வட்டி, சிறந்த முதலீடு!
பங்குச் சந்தைக் குறியீடுகளின் முன்னறிவிப்பு
- இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் என்று கூறப்படுபவை “சென்செக்ஸ் (Sensex) மற்றும் நிஃப்டி 50 (Nifty 50)” ஆகும். இவை இரண்டும் சந்தையின் ஒட்டுமொத்த செயல்பாட்டைக் காட்டும் முக்கியக் குறியீடுகள் ஆகும்.
- இந்த 2025-ஆம் ஆண்டில் இந்தக் குறியீடுகள் புதிய உச்சங்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது.
பங்குச் சந்தை வளர்ச்சிக்குக் காரணங்கள்
சில்லறை முதலீட்டாளர்களின் அதிகரிப்பு
- இன்று பல சிறிய முதலீட்டாளர்கள் (Retail Investors) பங்குச் சந்தையில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இது சந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் (Foreign Investments)
- இந்தியாவின் பொருளாதாரம் வளருவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ( Foreign Institutional Investors) இந்தியச் சந்தையில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இது சந்தையின் மதிப்பை மேலும் உயர்த்தும்.
நிறுவனங்களின் வளர்ச்சி
- தகவல் தொழில்நுட்பம் (IT), மருந்துகள் (Pharma), உள்கட்டமைப்பு (Infrastructure) போன்ற துறைகள் வளருவதால், பங்குச் சந்தையின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!
யாருக்குப் பயனளிக்கும்?
இந்தியப் பங்குச் சந்தை 2025 – ல் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்தப் பங்குகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்தியப் பங்குச் சந்தையில் வளர்ந்து வரும் துறைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்
தொழில்நுட்பம் மற்றும் ஐடி (IT) துறையின் வளர்ச்சி
2025-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை (IT) மிகப் பெரிய வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முக்கிய காரணங்கள் : செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing) மற்றும் சைபர் பாதுகாப்பு (Cyber security) ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரிப்பதால்தான்.
ஏஐ (AI) மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing)
- பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வேலைகளைத் தானியங்கி முறையில் செய்வதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது. மேலும் கிளவுட் சேவைகளின் மூலம் தரவுகளைப் (Datas) பாதுகாப்பாக சேமித்து வைக்கிறது.
சைபர் பாதுகாப்பு (Cyber security)
- தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், அவற்றைப் பாதுகாப்பதற்கான அவசியங்கள் அதிகரித்துவிட்டன. அதனால், இதன் முதலீடுகள் பெருகி வருகின்றன.
இந்தியத் தொடக்க நிறுவனங்கள் (Startups)
- பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகி, உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றன. இதனால், ஐடி (IT) பங்குகளின் வளர்ச்சி உச்சத்தைத் தொடும் வாய்ப்பு இருக்கிறது.
“PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!”
பசுமை ஆற்றல் மற்றும் மின்சார வாகனச் சந்தை
- இந்தியா “பசுமை ஆற்றலுக்கு (Green Energy)” அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசாங்கமும் சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய எரிசக்திகளில் முதலீடு செய்து வருகிறது.
- இதன் காரணமாக இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் வாய்ப்பு இருக்கிறது.
மின்சார வாகனங்கள் (EVs)
- மக்கள் மின்சார வாகனங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருவதால் மின்சாரக் கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் ட்ரக்குகளின் விற்பனை அதிகரிக்கக்கூடும்.
பேட்டரி நிறுவனங்கள்
- மின்சார வாகனங்களுக்குத் தேவையான “லித்தியம் – அயன் பேட்டரிகள் (Lithium-ion batteries)” தயாரிக்கும் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடையும்.
- இதன் காரணமாக, “பசுமை ஆற்றல் மற்றும் எலக்ட்ரிக் வெகிகிள்களின்” முதலீடுகள் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது.
வங்கி மற்றும் நிதிச் சேவைகள்

டிஜிட்டல் வங்கி (Digital Banking) மற்றும் நிதித் தொழில்நுட்பம் (Fintech)
- “டிஜிட்டல் வங்கி மற்றும் நிதித் தொழில்நுட்பம்” வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது, மொபைல் ஆப்கள் மூலம் நாம் எளிதாகப் பணம் பரிமாற்றம், கடன் பெறுதல், முதலீடு செய்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.
தனியார் வங்கிகள் & NBFCகள் (Non-Banking Financial Companies)
- மக்கள் அதிகம் கடன் (Loans) எடுக்க ஆரம்பித்ததால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நல்ல லாபம் பெறுகின்றன.
முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
- வளர்ச்சி அடையும் “பிரைவேட் வங்கிகள், UPI சேவைகள், மற்றும் கடன் நிறுவனங்களில்” முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கும்.
Samsung Galaxy S25 Ultra – சிறப்பம்சம் மற்றும் வெளியீடு!
யாருக்குப் பயனளிக்கும்?
- அதிக வளர்ச்சி கொண்ட துறைகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த முதலீட்டுத் தளமாக இருக்கும்.
வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் FDI-யின் போக்குகள் – இந்தியப் பங்குச் சந்தை 2025
(Foreign Institutional Investors)
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் – இந்தியப் பங்குச் சந்தையில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பங்குகளின் மதிப்பு உயர்வதோடு, சந்தையும் வளர்ச்சி அடையும்.
FDI (Foreign Direct Investment)
- இந்திய அரசாங்கம் FDI-யின் விதிகளை எளிதாக்கி, உலகளாவிய முதலீட்டாளர்களைத் “தொழிற்சாலை (Manufacturing) மற்றும் உள்கட்டமைப்புத் (Infrastructure) துறைகளில்” முதலீடு செய்ய ஊக்குவித்து வருகிறது.
முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
- அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகள் வருவதால், தொழில்துறை மட்டும் கட்டுமானத் துறைகளில் அதிக வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
NIH Brain Research 2025 – மூளை பற்றி அறிய தகவல்கள்!
உலகளாவிய சந்தை
- முதலீட்டாளர்கள் உலகளாவிய நிகழ்வுகளையும் கவனித்து முதலீடு செய்வது அவசியமாகும்.
வட்டி விகிதங்களில் அதிகரிப்பு
- அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank) வட்டி விகிதங்களை அதிகரித்ததால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியச் சந்தையில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. இதனால் பங்குச் சந்தை ஏற்றத்திற்கும், இறக்கத்திற்கும் ஆளாகும்.
புவிசார் அரசியல் (Geopolitical Tensions)
- உலக நாடுகளுக்கு இடையே உலகளாவிய மாற்றங்கள், போர் அல்லது வர்த்தகத் தகராறு ஏற்பட்டால், பங்குச் சந்தை மீது தாக்கம் ஏற்படும்.
யாருக்குப் பயனளிக்கும்?
சர்வதேசப் போக்குகளைக் கவனிப்பவர்களுக்கும், ஆபத்து தரும் காரணிகளைக் கண்காணிக்கும் முதலீட்டாளர்களுக்கும் இந்த முதலீட்டுத் தளம் சிறந்ததாக இருக்கும்.
2025-யில் இந்தியப் பங்குச் சந்தை அபாயங்கள் மற்றும் சவால்கள்
பணவீக்கம் (Inflation)
- இந்தியப் பங்குச் சந்தை 2025 – பொருட்களின் விலைகள் அதிகரித்தால், மக்கள் செலவிடும் பணம் குறையும். இதனால், நிறுவனங்களின் லாபம் குறைந்து, பங்குச் சந்தையிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக் கூடும்.
புவிசார் அரசியல் பதட்டங்கள் (Geopolitical Tensions)
- உலக நாடுகளுக்கு இடையேயான தகராறுகள், போர்கள் அல்லது வர்த்தகப் பிரச்சினைகள் பங்குச் சந்தையில் அழுத்தங்களை உருவாக்கும்.
எண்ணெய் விலை மாற்றங்கள்
- எண்ணெய் விலைகள் அதிகரித்தால், “போக்குவரத்து, தொழில் மற்றும் வாழ்க்கைச் செலவுகளும்” அதிகரிக்கும். இதனால், நிறுவனங்கள் அதிக செலவு செய்யக்கூடும். இது பங்குச் சந்தையைப் பாதிக்கும்.
ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை – என்ன நடந்தது?
ஒழுங்குமுறை மற்றும் கொள்கை மாற்றங்கள்
வரிவிதிப்பு (Taxation)
- “பங்குகள், முதலீடு, லாபம்” போன்றவற்றிற்கு அரசு விதிக்கும் புதுப்பிக்கப்பட்ட வரிகள், முதலீட்டாளர்களின் வருமானத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது..
செபி விதிமுறைகள் (SEBI Regulations)
- இந்தியப் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பின் (SEBI) புதிய விதிமுறைகள் கடுமையாகவோ அல்லது எளிதாகவோ இருந்தாலும், சந்தை இயங்கும் விதத்தைக் மாற்றும்.
பணவியல் கொள்கைகள் (Monetary Policies)
- ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களை மாற்றினால், வங்கிகள் வழங்கும் கடன் விகிதங்கள் மாறும்.
- இது முதலீட்டாளர்களுக்கும், சந்தைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
யாருக்குப் பயனளிக்கும்?
ஆபத்து மேலாண்மை அணுகுமுறையுடன் இருக்கும் எச்சரிக்கையான முதலீட்டாளர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.
“போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் – இரட்டிப்பு லாபம்!”
2025-க்கான பங்குச் சந்தை நிபுணர் முதலீட்டு உத்திகள்
நீண்ட கால முதலீடு (Long-term Investment)
- நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல வருமானம் மற்றும் வலுவான வளர்ச்சி கொண்ட நம்பகமான நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். இது குறைந்த அபாயத்துடன் நல்ல வளர்ச்சியை அடைய உதவும்.
குறுகிய கால வர்த்தகம் (Short-term Trading)
- குறுகிய கால முதலீட்டாளர்கள், வேகமாக உயரும் பங்குகள் மற்றும் குறிப்பிட்ட துறைகளில் அதிக வாய்ப்புள்ள பங்குகளைக் கவனிக்க வேண்டும். ஆனால், இதில் மாற்றம் அதிகம் இருக்கக் கூடும். எனவே, பதிவுக்குறிய (Stop-loss) உத்திகளைப் பயன்படுத்துவது நல்லது.
பல்வகைப்படுத்தல் & சொத்து ஒதுக்கீடு (Diversification & Asset Allocation)
பல்வகைப்படுத்தல்
- பல்வகைப்படுத்தல் என்பது, உங்கள் பணத்தைப் “பங்குகள், பரஸ்பர நிதிகள் (Mutual Funds) மற்றும் நிலையான வருமானக் கருவிகள் (Fixed Income)” போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதாகும்.
- இது அபாயத்தைக் குறைக்கும் மற்றும் உயர்ந்த வருமானத்தை உறுதி செய்ய உதவும்.
- போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல், தங்கம் மற்றும் REITகள் (ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள்) ஆகியவை பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன.
- இவை நிலையான வருமானத்தை வழங்குகின்றன. மேலும், இது சந்தை ஏற்றத்தாழ்வுகள் அல்லது எதிர்பாராத மாற்றங்களின் போது நன்மை அளிக்கக் கூடும்.
“10 லட்சம் கல்விக்கடன் – மத்திய அரசு அறிவிப்பு!”
Best stocks 2025 India – சிறந்த பங்குத் தேர்வுகள்
பெரிய மூலதனப் பங்குகள் (Large-Cap Stocks)
- இந்தப் பங்குகள் பெரிய நிறுவனங்களால் எடுக்கப்படும் நம்பகமான மற்றும் வலுவான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன.
- உதாரணமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries), டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (TCS) மற்றும் HDFC வங்கி ஆகியவை. இவை உயர்ந்த வருமானம் மற்றும் தொலைநோக்கு வலிமையை வழங்குகின்றன.
மிட்-கேப் பங்குகள் (Mid-Cap Stocks)
- டாடா பவர் (Tata Power), இன்ஃபோ எட்ஜ் (Info Edge) மற்றும் தீபக் நைட்ரைட் (Deepak Nitrite) போன்ற மிதமான அளவிலான நிறுவனப் பங்குகள், வளர்ச்சிக்கு வாய்ப்புகளைக் கொடுக்கும்.
வளர்ந்து வரும் பங்குகள் (Emerging Stocks)
- அதானி கிரீன் (Adani Green), பேடிஎம் (Paytm), மற்றும் ஜொமாட்டோ (Zomato) போன்ற பங்குகள் வளர்ந்து வரும் துறைகளில் புதிய வாய்ப்புகளைத் தருகின்றன.
யாருக்குப் பயனளிக்கும்?
இந்தியப் பங்குச் சந்தை 2025 – வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையின் கலவையைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும்.
- இந்தியப் பங்குச் சந்தை 2025 -ஆம் ஆண்டில் பலவிதமான வாய்ப்புகளையும், சவால்களையும் ஒன்றுசேரத் தரும் வகையில் இருக்கின்றன.
- பொருளாதார வளர்ச்சி, துறைசார் முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகளின் தாக்கங்கள் ஆகியவை பங்குச்சந்தையின் நிலவரத்தை மாற்றும்.
- அதனால், நீண்ட கால முதலீட்டாளர்கள் வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்லதாகும்.
- மேலும், குறுகிய கால வர்த்தகர்கள் சந்தை நிலவரத்தைக் கணக்கில் கொண்டு தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
- சரியான முதலீட்டு உத்திகளையும், ஆராய்ச்சி செய்யப்பட்ட அணுகுமுறைகளையும் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் முதலீடு செய்து, தங்களின் பங்குகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
- எனவே, இந்த 2025-ஆம் ஆண்டின் சந்தை மாற்றங்களைப் புரிந்து கொள்வது முதலீட்டுத் தளத்தில் ஒரு முக்கியப் பங்காக அமையும்.
- NSE Official Website (தேசிய பங்குச் சந்தை – இந்தியா)
- BSE Official Website (பம்பாய் பங்குச் சந்தை – இந்தியா)
இந்தியப் பங்குச் சந்தை 2025-ல் எந்த துறை சிறப்பாக இருக்கும் என்ற உங்கள் கருத்தை கருத்துக்களில் தெரியப்படுத்துங்கள்
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Quick English Recap – Key Insights & Best Takeaways
- Indian Stock Market 2025 – What’s Next
The Indian stock market is expected to see major shifts in 2025 with emerging sectors and new investment trends shaping the landscape - Top Stocks to Watch
Investors should focus on high growth sectors like technology renewable energy and financial services for maximum returns - Best Investment Strategies for 2025
Diversifying portfolios tracking global market trends and investing in fundamentally strong stocks are key strategies for success - NSE and BSE Market Updates
Stay updated with the latest stock market trends price movements and expert recommendations from NSE and BSE - Final Takeaway
Smart investing requires research patience and the right strategy Follow market trends closely to make informed decisions in 2025